Friday, December 31, 2010

நானும் என்னுடைய லவ்வும் - 2



என்னுடைய முந்தைய பகுதியில் தொடரலாம் என்று நிறைய பேர்கள் பின்னூட்டம் இட்டிருந்தார்கள், அவர்களுக்கு என்னுடைய நன்றிகள், உங்களின் நம்பிக்கையினால் நான் தொடருகிறேன், நிறைய பேரு காமெடி பதிவா இருக்கும்னு நினைச்சு சொல்லியிருப்பீங்கன்னு நினைக்கிறேன், ஆனா கொஞ்சம் சீரியசாதான் இருக்கும், முந்தைய பகுதியினை தவற விட்டவர்கள் பகுதி - 1  இங்கே கிளிக் பண்ணி படித்துக் கொள்ளவும்.

இனி...

இப்படி வெத்துசோறா போயிட்டு இருந்த என் வாழ்க்கையில அந்த அய்யர் பொண்ணு கிராஸ் ஆச்சு, நானும் அந்த பொண்ண முதல்ல பெரிசா ஒன்னும் நினைக்கலை, வழக்கம் போல 14 க்கு அப்புறம் 15 அப்படின்னுதான் நினைச்சிட்டு இருந்தேன், ஆனா நம்ம பசங்க விட்டாதான, அது உன்னத்தான் பார்க்குது, உன்ன பார்த்துதான் சிரிக்குதுன்னு கிளப்பி விட ஆரம்பிச்சாங்க, நானும் மெதுவா வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன், அவங்க சொன்னமாதிரிதான் எனக்கும் தெரிஞ்சது, அப்ப என் பிரண்டு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சான், நாமளும் எவ்வளவு நாளைக்குதான் ஒன்சைடாவே லவ் பண்றது, ஒன்னையாவது டூ சைடூ ஆக்கணும்டான்னு சொன்னான், நானும் அவன நம்பி சரி இவளை எப்படியாவது கரக்ட் பண்ணிர வேண்டியதுதான்னு முடிவு பண்னேன், அன்னைல இருந்து அய்யர் பொண்ண தீவிரமா பாலோ பண்ண ஆரம்பிச்சேன், இப்படி இந்த பொண்ணு பின்னாடியே போனதால, என்னுடைய முன்னாள் காதலிகள் 14 லிருந்து 13 ஆச்சு, 13 - 12 ஆச்சு, 12 - 11 ஆச்சு, இப்படியே குறைய ஆரம்பிச்சது, நான் வேணான்னு சொன்ன பிகர்கள எல்லாம் என் நண்பன் நான் வெச்சுக்கட்டுமான்னு கேட்டான், நானும் பெருந்தன்மையா வெச்சுக்கடான்னு சொல்லிட்டேன்,


இப்ப நான் அந்த அய்யர் பொண்ணோட அழகை பத்தி செல்லியே ஆகணும், இதுக்கு முன்னாடி யாரும் இப்படி அழகா ஒரு பொண்ண பார்த்திருக்க மாட்டீங்க, அயம் லவ் வித் ஹர், (முன் தினம் பார்த்தேனே பாட்டெல்லாம் அப்ப கிடையாது) அவளோட கண்ணு இருக்கே மின்சாரகனவு கஜோல் கண்ணு, ஓரக்கண்ணால பார்த்தான்னா அவ்வளவுதான் குவாட்டர் அடிச்ச குரங்காட்டம் பிளாட் ஆயிர வேண்டியதுதான், கலருன்னா கலரு அப்படி ஒரு கலரு டிராக்டர் எமால்யூசன் பெயிண்ட் மாதிரி சும்மா மினுமினுன்னு இருப்பா, அய்யர் வீதில இருக்குற வீடெல்லாம் பார்த்திருப்பீங்க, அலாவுதீன் குகையாட்டம் ஒரு கிலோ மீட்டர் நீளம் இருக்கும், அந்த குகையில அவ எங்க இருந்தாலும் பளிச்சின்னு தெரிவா அப்படி ஒரு பிகர்.


நான் மட்டும் அவளை லவ் பண்ணலீங்கோ, எனக்கு போட்டியா இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு பேரு இருந்தாங்க, அவனுங்களை எப்படி சமாளிக்கறதுன்னு நானும் என்னோட பிரண்டும் சேர்ந்து வட்ட மேசை மாநாடு போட்டோம், அவனுங்களுக்கு முன்னாடியே நாம எண்ட்ரண்ஸ் கொடுக்கனுமே எப்படிடான்னு பிளான் பண்ணோம், அப்பத்தான் ஒரு முடிவு எடுத்தோம், எல்லாருக்கும் முன்னாடி நாம இருக்கணும்னா நாம அந்த அய்யர் வீதில இருந்தாத்தான் முடியும், நம்மளை அங்க எல்லாம் சேர்த்துக்க மாட்டாங்க அதனால அந்த வீதியில இருக்குற யாரையாவது பிரண்டு புடிக்கலாம்னு முடிவு பண்ணினேன், அப்படி வலைவீசி தேடும்போது இரண்டு இளிச்சவாயன்கள் கிடைச்சானுங்க, ஒருத்தன் பேரு எஸ்.கே. இன்னொருத்தன் துரை, என்னடா பேர கேட்டா இனிஷியல் மட்டும் சொல்றியே பேரு என்னடான்னு கேட்டேன், கடைசிவரைக்கு அந்த நாதாரி பேரே சொல்லல, சரி அதவிடுங்க எப்படியோ அய்யர் வீதில அடிக்கடி போயிட்டு வரதுக்கு சான்ஸ் கிடைச்சிருச்சு, இனி மேற்கொண்டு எப்படி மூவ் பண்ணுரதுன்னு தெரியல, 


சரி இப்படியே விட்டா சரிவராது, எப்படியாவது பேசிரலாம்னு முடிவு பண்ணினேன், எப்படி பேசுரது, எங்க வெச்சு பேசுரது, பேசுனா திருப்பி பேசுவாலா இல்லை செருப்ப கழட்டுவாளான்னு பல குழப்பம், முன்ன பின்ன எந்த பொன்ணுகிட்டயும் பேசுனது வேற இல்லை, என்ன பண்ணலாம்னு ஒரே குழப்பம், என் பிரண்டு சொன்னான், டியூசன் செண்டர் விட்டு வரும்போது பேசிரலாம்னு, சரி வாடான்னு ரெண்டு பேரும் 8 மணிக்கு விடப்போற டியூசனுக்கு 7 மணில இருந்தே காத்திருக்க ஆரம்பிச்சோம், 7.30 மணி வரைக்கும் இருந்த தைரியம், 7.45, 7.50, 7.55 ன்னு ஆக ஆக இதயம் திடுக் திடுக்னு துடிக்குது, என்னோட ஹார்ட் பீட்டு சங்கு சத்தம் மாதிரி எனக்கே கேட்குது,  உடம்பெல்லாம் வேர்த்து போச்சு, கைகால் எல்லாம் நடுங்குது, மணி எட்டும் ஆச்சு, டீயூசன் விட்டு எல்லாரும் வெளியே வர ஆரம்பிச்சாங்க, அவளும் வந்தா, எனக்கு ஹார்ட் அட்டாக் வரமாதிரி ஆகிருச்சு, இன்னும் பத்து ஸ்டெப் வச்சா என் பக்கத்துல வந்துருவா, வர ஆரம்பிச்சா ...

ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, 


நான்கு ....


மூன்று ...

இரண்டு ..

தொடரும் ...
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே இது இந்த வருடத்தின் கடைசி பதிவு, இந்த வருடமும் முடிவுற்று புது வருடமும் தொடங்க போகிறது, நான் எப்பொழுது பதிவு எழுதினாலும், அது கிண்டலோ, நக்கலோ எதுவாகினும் முடிந்த வரை யாருடைய மனதும் புண்படக்கூடாது என்ற முடிவோடுதான் எழுதிகிறேன், இருந்தும் இதுவரை நான் எழுதிய பதிவுகளில் ஏதேனும் ஒரு பதிவோ அல்லது வாக்கியமோ யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள், இனி வரப்போகும் புது வருடத்தினை நட்போடும் மகிழ்ச்சியோடும் தொடர விரும்புகிறேன், இது வரை என்னுடைய பதிவுகளில் பின்னூட்டமிட்டும் ஓட்டு அளித்தும், வந்து படித்தும் சென்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

   
  நண்பர்கள் மற்றும் உங்கள்   குடும்பத்தார்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இந்த புதிய வருடத்தில் நீங்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ இறைவனை வேண்டுகிறேன், நன்றி...


இவன்
நைட் ஸ்கை

[ அப்படியே போயிடாதீங்க பதிவை பத்தின உங்க கருத்துகளையும் கொஞ்சம் கொட்டீட்டு போங்க ]



Wednesday, December 29, 2010

கலாநிதிமாறனும் தமிழ்மணமும்




ஞாயிற்று கிழமை விஜய் டிவியில ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினாங்க, அது விஜய் ரீவைண்ட்ஸ், இது வாராவாரம் ஒளிபரப்பாகுற நிகழ்ச்சிதான்னாலும், ஒவ்வொரு வாரமும் ரீவைண்டுன்னு சொல்லி, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், இது மாதிரி போட்டு தாளிப்பாங்க, ஆனா இந்த வாரம் கோபிநாத்தோட ரீவைண்ட் வாரம், கோபிநாத் ஆச்சே வித்தியாசமா ஏதாவது இருக்கும்னு நினைச்சி ஆர்வமா பார்த்தேன், நிகழ்ச்சி நல்லா இருந்தது, கோபிநாத் சிகரம் தொட்ட மனிதர்கள், தமிழர்கள் நிகழ்ச்சியில அவரு பேட்டி எடுத்த பிரபலங்கள பத்தி சொல்லிட்டு இருந்தாரு, எழுத்தாளர் சுஜாதா, ஜெயகாந்தன், அரசியல்ல கலைஞர், சிதம்பரம், நடிகர்கள்ள சூப்பர்ஸ்டார், கமலஹாசன், விஜய், அஜீத் இவங்கள பேட்டி எடுத்த அனுபவத்தை பத்தி சொன்னாரு, அதில் இருந்து சில காட்சிகளையும் போட்டு காட்டுனாங்க,

எல்லாமே நல்லா இருந்தாலும் முக்கியமா ஒரு பேட்டி ரொம்ப நல்லா இருந்தது, அது சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் அவர்களோட பேட்டி, அந்த பேட்டிய வாங்கவே எவ்வளவு கஷ்ட்டப்பட்டாங்க அப்படிங்கறத பத்தியும் சொன்னாரு, கலாநிதிமாறன் சொன்ன விசயம் ரொம்ப புடிச்சதுன்னு கோபிநாத் சொன்னாரு, அது எனக்கும் ரொம்ப புடிச்சது,

அது என்னன்னா ரிஸ்க் எடுக்கனும், ரிஸ்க் எடுக்காம ஜெயிக்க முடியாதுங்கறது எல்லாருக்கும் தெரியும், ஆனா எடுக்குற ரிஸ்க் கால்குலேட்டிவ் ரிஸ்க்கா இருக்கனும்னு சொன்னாரு, அப்படின்னா 6 ஆவது மாடியில இருந்து குதிச்சா அடிபடும்கறது ரிஸ்க், ஆனா சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தா தப்பிச்சிடலாம்னா அத அணிஞ்சிட்டு குதிக்கறது கால்குலேட்டிவ் ரிஸ்க்குனு சொன்னாரு, அது ரொம்ப சரியாதான இருக்குது, ஒரு பிசினஸ்ல ஜெயிச்சவரு சொன்னா சரியாதான் இருக்கும்,  அதே மாதிரி ஒரு விசயம் தோல்வியடைஞ்சா அதுக்கு என்ன காரணம்னு ஆராயனும், ஆராய்ந்ததுக்கு அப்புறம் சரி பண்ண முடிந்தால் சரி பண்ணனும், முடியாதுன்னு தெரிஞ்சா விட்டுடனும், ஒத்து வராதத புடிச்சிட்டு கட்டிட்டு அழக் கூடாதுன்னு சொன்னாரு, என்ன நண்பர்களே கலாநிதி மாறன் சார் சொல்றது சரிதானே.

சரி இப்ப எதுக்கு இதெல்லாம்னு கேட்குறீங்களா விசயம் இருக்கு, நான் பதிவுலகத்துக்கு வந்து 4 மாசம் ஆச்சு, இதுவரைக்கும் ஒரு நாப்பது பதிவு எழுதி இருக்கேன், அப்படி எல்லாம் ஒன்னும் பெரிசா உருப்படியா இதுவரைக்கும் எழுதலை, இந்த தமிழ்மணம் விருது, போட்டி இது எல்லாமே எனக்கு ரொம்ப புதுசு, இருந்தாலும் எனக்கும் மெயில் அனுப்பி இருந்தாங்க, போட்டில கலந்துக்கறதா இருந்தா கலந்துக்கங்கன்னு, சரி ஆனது ஆச்சு, சும்மா 3 பதிவு அனுப்பி பார்க்கலாமேன்னு அனுப்பி வச்சிருந்தேன், கண்டிப்பா யாரும் நமக்கெல்லாம் ஓட்டு போட மாட்டாங்கன்னு அந்த பதிவுகளோட லிங்க்க கூட நான் எங்கயும் கொடுக்கலை, ஆனா நேத்து காலையில நம்ம நண்பர்களோட பதிவுகளை பார்த்தா எல்லாரும் இரண்டாம் கட்டத்துக்கு முன்னேறிட்டாங்கன்னு பதிவு போட்டு இருக்காங்க, சரி நம்மளுதும் எதாவது இருக்கான்னு போய் பார்த்தேன், என்ன ஒரு ஆச்சரியம்,  அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவுல நான் லிவ்விங் டு கெதர் பத்தி எழுதுனது வந்துருக்கு, ஆனா சும்மா சொல்லக்கூடாது இந்த பிரிவுக்குதான் ஹெவி காம்படீசன், என்னையும் மதிச்சு ஓட்டு போட்ட அன்பர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள், அதனால நானும் இப்ப லிங்க் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன், 


இத படிச்சி பாருங்க, உங்களுக்கு யாருக்காவது புடிச்சி இருந்தா வோட்டு போட விருப்பம் இருந்தா ஓட்டு போடுங்க, ஓட்டுக்கு பணம், குவாட்டர் எதுவுமே கிடையாது, ஒன்லி நன்றி மட்டும்தான், ஜெயிச்சா பிறகு பார்க்கலாம், அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவுல இந்த இடுகை இருக்குது. நன்றி, 

இந்த இடுகையை நான் போடறதுக்கு காரணமே கலாநிதிமாறன் தான், நானும் கால்குலேட்டிவ் ரிஸ்க் எடுத்துட்டேன்,ஜெயிக்கலீன்னா தோல்விக்கான காரணம் என்னன்னு ஆராய்சி பண்ண போறேன், அப்படி ஆராய்ச்சி பண்ணி என்ன கண்டுபுடிச்சேன்கறதயும் பதிவா போட்டு கொல்லுவேன்கிறதயும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன், வேற எதையாவது நினைச்சு வந்திருந்தீங்கன்னா இங்க போய் பார்த்துக்கோங்க. :-)

நன்றி, நன்றி, நன்றி......





Tuesday, December 28, 2010

மன்மதன் அ(வ)ம்பு




மன்மதன் அம்பு இந்த படத்தை பத்தி எழுதுனா வந்திருமே வம்புன்னுதான் இருந்தேன், ஆனா சுனாமின்னு வந்ததுக்கு அப்புறம் முழுகாம இருக்க முடியுமா? படம் பார்த்ததுக்கு அப்புறம் எழுதாம இருக்க முடியுமா? ஆனது ஆகட்டும்னு துணிஞ்சு இறங்கிட்டேன், முடிஞ்ச வரைக்கும் நடுநிலையா எழுதறேன், சினிமாவுல எல்லா விசயங்களையும் தெரிஞ்ச ஒரு நடிகரா கமலை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரு சிறந்த நடிகரா ரொம்பவே புடிக்கும், ஆனா தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரிஞ்சமாதிரி சிலசமயம் நடக்கும் போது புடிக்காம போயிருது, இப்படி சினிமாவுல கதை, திரைக்கதை, வசனம், பாட்ல்கள், நடனம், நடிப்பு, இயக்கம்னு எல்லாம் தெரிஞ்ச கமல், எப்படி எடுத்தாலும் கண்டிப்பா நல்லா பண்ண முடியாதுன்னு தெரிஞ்ச இந்த கதையை ஏன் படமா எடுத்தாருன்னுதான் புரியல, அட நம்ம கேப்டன் கூட விருதகிரிய சும்மா விரு விருன்னு பண்ணி இருந்தாருப்பா,

சரி படத்தோட கதை என்னன்னு உங்க எல்லாருக்குமே தெரியும், இருந்தாலும் நானும் சொல்லனும்ல, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லன்னு நாயகன் கமல் சொன்னாரு, இரண்டு பேருக்கு நல்லதுன்னா உண்மையான காதலை கூட பிரிக்கலாம்னு இதுல சொல்லறாங்க, உண்மையில மாதவனும் திரிஷாவும் உண்மையாவே ஒருத்தர ஒருத்தர் லவ் பண்றாங்க, மாதவனோட சந்தேகத்தால ரெண்டு பேரும் பிரிஞ்சிடராங்க, கமல் கூட இறந்து போன பொண்டாட்டிய நினைச்சி 3 வருசமா உருகிட்டுதான் இருக்காரு, பிரண்டோட கேன்சர் டிரீட்மெண்டுக்காக பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிடுறாரு, கமல் பொண்டாட்டிய நினைச்சு பீல் பண்றத பார்த்தா கிளைமேக்ஸ்ல மாதவனோட சந்தேகத்த தீர்த்து வச்சி சேர்த்து வைப்பாருன்னு பார்த்தா திரிசாகூட ஜோடியாயிடராரு, திரிசா மேலயே சந்தேகப்பட்ட மாதவன் அடுததவன் முன்னாள் பொண்டாட்டிய கல்யாணம் பண்ண முடிவு பண்றாரு இதுதான் கதை.



இது காமெடி படமா சீரியஸ் படமா செண்டிமெண்ட் படமான்னு தெரியல, படத்துல வசனம் எல்லாம் நல்லா இருந்தாலும் பாதி வசனம் புரியல, லைவ்வா பதிவு பண்ணினதாம், இந்த லைவ் எல்லாம் வெளிநாட்டு சினிமா தியேட்டருக்கு வேணா சரியா இருக்கும், இங்க பாதி தியேட்டர் நாலு ஸ்பீக்கர சைடுல தொங்க விட்டுட்டு DTS னு பேரு வச்சிட்டு ஏமாத்தறாங்க, அதில நல்ல காலத்துலயே பாட்டு போட்டாலே சத்தம் கேட்குறது இல்லை, இந்த படத்தோட சவுண்ட சொல்லவே வேணாம், சுத்தமா ஒன்னும் புரியல, எனக்கு என்னவோ கடைசி வரைக்கும் காமெடியா ஒன்னும் தெரியல, படத்துல திரிசா, சங்கீதா, மாதவன் ரொம்ப நல்லா இயல்பா நடிச்சி இருந்தாங்க, ஒளிப்பதிவு ரொம்ப நல்லா இருந்தது, 



படத்துல ரெண்டு பாட்டு ரொம்ப நல்லா இருந்த்து, ஒன்னு சூரியாவோட பாட்டு, படம் ஆரம்பத்துலேயே வந்ததால சூரியாவின் ரசிக சிகாமணிகள் கொஞ்சபேரு விசில் அடிச்சி கத்திட்டு இருந்தாங்க, அப்புறம் நீலவானம்ங்கற பாட்டு, உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு, ரிவர்ஸ்ல வித்தியாசமா பண்ணி இருக்காங்க, சூப்பரான லவ் + சின்ன சின்னதா ரொமான்ஸ் பாட்டு,  அவ்வளவு பீல் பண்ணி கமல் பாடும் போது அதை அப்படியே இடைவேளை விடாம திரிசாகிட்ட சொல்லற மாதிரி பண்ணி இருக்கலாம், அதை விட்டுட்டு நாலஞ்சு ரீலுக்கு அப்புறம் திரிசா கதையை கேட்குறாங்கன்னு கண்ணெல்லாம் கலங்கி பீல் பண்ணி கதையை சொல்றது சொதப்பிருச்சின்னு நினைக்கிறேன். இன்னொரு பாட்டு இருக்கு சாம, தான, பேத, தண்டம்னு குத்துபாட்டு மாதிரி கமல் டான்ஸ்ல போட்டு குத்து குத்துன்னு குத்தி இருக்காரு, பார்த்துங்க சார், படத்தோட புரோமோசன்னு டிவியில பேட்டி கொடுக்கும் போது கஷ்ட்டப்பட்டு டான்ஸ் ஆடினேன்னு சொல்லிராதீங்க, அப்புறம் அவ்வளவுதான், என்ன ஸ்டெப்புக்கு கஷ்ட்டப்பட்டீங்கன்னு கேள்வி மேல கேள்வி வந்துரும் :-)



என்னதான் கமல் படமா இருந்தாலும் படம் ஸ்லோவாதான் போகுதுங்கறத ஒத்துகிட்டுதான் ஆகணும், அவங்களை சொல்லியும் குத்தமில்ல, இதுக்கு மேல இந்த படத்த நல்லா பண்ண முடியாது, எது எப்படியோ இன்னும் பெரிய பட்ஜெட்டுல ஒரு நாலஞ்சு படம் சன் குரூப்புக்கும், கலைஞர் குரூப்புக்கும் கிடைச்சா போதும் கண்டிப்பா படம் எடுக்கறத பத்தி யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க, அப்படியாவது அவங்க டாமினேசன் குறையட்டும்.

அப்புறம் கமல் சாருக்கு தனிப்பட்ட முறையில உங்ககிட்ட ஒன்னு சொல்லனும், மன்மதன் அம்புன்னு பேரு வச்சிருக்கீங்க, இந்த படத்துக்கு எதுக்கு இந்த டைட்டில்னு தெரியல, நிறைய பேரு டைட்டில பார்த்துட்டு நல்லா ரொமான்ஸா இருக்கும்னு நினைச்சி வந்து ஏமாந்துட்டாங்கங்க்கறது அவங்க சொல்றத வச்சி பார்க்கும் போது தெரியுது, உங்க சின்ன பொண்ணு கூட லவ் பண்ணுதுன்னு நெட்டில படிச்சேன், பார்த்துக்கங்க சார், முதல் பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிடாட்டியும் பரவாயில்லை, ரெண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு கண்டிப்பா ரசிகர்கள கூப்பிட்டுடுங்க, கூப்பிட முடியலனாலும் ரஜினி சார் மாதிரி அறிக்கை விட்டு மாட்டிக்காதீங்க, அப்புறம் எப்ப விருந்து வக்கிறீங்கனு கேட்டு நச்சு பண்ணீருவாங்க, உங்களுக்கு சொல்ல வேண்டியதே இல்லை உலகநாயகன் எந்த பிரச்சனையிலும் கண்டிப்பா மாட்டிக்க மாட்டீங்கன்னு தெரியும் இருந்தாலும் சொல்லனும்னு தோனுச்சு, 

மொத்தத்துல மன்மதன் அம்பு நல்லா இருக்குன்னு சொல்ல வரல, நல்லா இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்ல வரேன்.

டிஸ்கி :- பின்னூட்டத்திலும், மைனஸ் வோட்டிலும் குமுற போகும் நண்பர்கள் பதிவை ஒருமுறை மீண்டும் படிக்கவும், எந்த இடத்திலும் நான் கமல் சாரை குறை கூறவில்லை, ஏனென்றால் நானும் கமல் ரசிகந்தான் :-)





Saturday, December 25, 2010

நானும் என்னுடைய லவ்வும்


லவ் பண்றாங்களாம் லவ்வு, நானும் பார்த்துட்டுதாங்க இருக்கேன் இப்ப லவ் பன்றோம்கற பேர்ல நடக்கற கூத்தை, எத்தனை நாள்தான் சும்மா இருக்குறது, பொறுத்து பொறுத்து பார்த்தாச்சு, அதனால இன்னைக்கு ஒரு முடிவு பண்ணிட்டேன், நான் படிக்கும் போது இந்த லவ்வு கிவ்வெல்லாம் எப்படி இருந்த்து, என்னோட வாழ்கையில வந்த லவ்வு அதனோட விளைவு என்னங்கறத எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன், இது முழுக்க முழுக்க என்னோட சொந்த வாழ்க்கையில நடந்தது சுயசொறிதல் இல்லைன்னா சுயசரிதம் மாதிரி, படிக்க புடிக்காதவங்க இப்பவே வெளியேறிடலாம், படிச்சிட்டு திட்டாதீங்க, இந்த பதிவில ஆரம்பிக்கிறேன், வரவேற்பு இருந்தா தொடருவேன், இல்லைன்னா நிறுத்திக்கிறேன், டெய்லி சொந்தகதையை போட்டு உங்களை நொந்தகதை ஆக்கிருவனோன்னு நினைக்காதீங்க, வாரத்துல ஒரு நாள் மட்டும் போடறேன்..  



நான் ஸ்கூல்ல படிக்கும் போதோ காலேஜ் படிக்கும் போதோ இப்ப இருக்குற மாதிரி எல்லாம் கிடையாது, ரொம்ப கண்டிப்பா இருப்பானுங்க வாத்தியாருங்க, பொண்ணுங்கள எல்லாம் பார்க்கவும் முடியாது, பார்த்தாலும் பேசவும் முடியாது, இப்படி ஒரு காலமான்னு 30 வருசத்துக்கு முன்னாடி நினைச்சு பார்க்காதீங்க ஜஸ்ட் 7 அல்லது 8 வருசத்துக்கு முன்னதான், படிப்பு உண்டு இல்லைன்னா விளையாட்டு உண்டுன்னுதான் இருக்க முடியும், 

சைட் அடிக்க போனாலும் பொண்ணுங்க ஸ்கூல் விட்டு வரும்போதோ இல்லை டியூசன் போயிட்டு வரும்போது மட்டும்தான் பார்க்க முடியும், அப்பக்கூட புள்ளைங்க கண்டுக்காதுங்க, மீறி பையன புடிச்சி போச்சுன்னா ஓரக்கண்ணால மட்டும் லேசா பார்க்கும்பாருங்க சும்மா ஜிவ்வுன்னு இருக்கும், அப்பவெல்லாம் எனக்கும் என்னொட பிரண்டுக்கும் பெரிய போட்டியே நடக்கும் யாருக்கு அதிக லவ்வர்னு, லவ்வர்னதும் உண்மையிலேயே லவ் பண்ணுவாங்கன்னு நினைக்காதீங்க தெருவுல போகுற பொண்ணுங்கள்ள யாரு அழகான பொண்ணோ அது எல்லாத்தையும் லவ் பண்னுவோம், இதில யாருக்கு அதிக லவ்வர்னு பெரிய போட்டியே நடக்கும், நான் கூட 14 பொண்ணுங்கள லவ் பண்னேன், ஒன்னுகூட செட் ஆகல, 



ஏன்னா 14 பொண்ணுகளையும் எப்படி டெய்லி பாலோ பண்ண முடியும்? ஒரு பொண்ண பாலோ பண்ணி இன்னைக்கு போனா இன்னொரு பொண்ண மிஸ் பண்ணிருவோம், இன்னொரு பொண்ணு பின்னாடி போனா வேறொரு பொண்ண மிஸ் பண்ணிருவோம், ஸ்கூலல கொடுக்குற டைம் டேபிள்ள குறிச்சி வச்சி பாலோ பண்ணுவோம், அப்ப்டியும் ஒன்னு ரெண்டு புள்ளக மிஸ் ஆயிரும், பேரு வேற தெரியாது, ஏன்னா பார்க்குற புள்ளயெல்லாம் லவ் பண்ணுனா பேரு எப்படி தெரிஞ்சுக்க முடியும்? எந்த வீதி பொண்ணு, எந்த டியூசன் செண்டர் பொண்ணு, எந்த ஏரியால பார்த்தோம் இப்படி கணக்கு வச்சுதான் பாலோ பண்ணிட்டு இருந்தேன், ஏன் அப்படி கஷ்ட்டபட்டு பாலோ பண்ணனும் ஒன்னு ரெண்டோட விட்டுட வேண்டியதுதானேன்னு கேட்குறீங்களா? அப்படி எல்லாம் விட்டுட முடியாதுங்க ஏன்னா ஒன்னொன்னும் அம்புட்டு அழகா இருக்கும், விட்டுட்டா மனசு கேட்காதுல்ல, இப்படி ஒன்சைடு ஆம்லெட்டாவோ நிறைய காதல்கள் வேகாம போன காலத்துல தான் நான் படிச்சேன், 



இவ்வளவு கஷ்ட்டப்பட்டு டிரை பன்ணியும் ஒன்னும் செட்டாகல்ல, அப்படியே போயிட்டு இருக்குற காலத்துலதான் ஒரு ஐயரு பொண்ண பார்த்தேன்...

தொடரும் ... 

[டிஸ்கி:- நண்பர்களே இந்த பதிவை தொடரலாமா வேண்டாமா என பின்னூட்டம் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,  நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்]



Thursday, December 23, 2010

மொக்க பதிவுங்க இது ...



அலோ துபாயா

என் அண்ணன் மார்க் இருக்குறாரா?

ஓ மார்க் நீதான் பேசறயா

வொய் ஆர் யூ கிரையிங் யா?

கூல்டவுன் கூல்டவுன் கூல்டவுன்

ஏன்பா என்னாச்சு

ஒன்னுமில்லை

இவருதான் வெட்டியா சினிமா விமர்சனம் எழுதுவாரில்ல, அதில ஒன்னு 4தமிழ்மீடியால பிரசுரம் ஆகி இருக்காம், அதான் ஆனந்த கண்ணீர் விடுராரு.

அது ஒன்னும் இல்லை சார், இந்த பதிவு மொக்க பதிவுன்னு மேலயே போட்டுட்டேன், பேசாம போகாம படிக்க வந்திட்டீங்கள்ள அப்ப நல்லா அனுபவியிங்க, இந்த பதிவு முழுக்க முழுக்க என்னோட சுயசொறிதல் மட்டுமே (நன்றி சுயசொறிதல் வார்த்தை உபயோகம் பதிவுலகம்)

நானும் இந்த பதிவு உலகத்துக்கு வந்த நாள்ல இருந்து கண்டமேனிக்கு எழுதிட்டுதான் இருக்கிறேன், நல்லா எழுதி இருக்கோம்னு நினைச்சா ஊத்திக்கும், இது எல்லாம் ஒரு பதிவா ஏதாவது எழுதாம விட்டா மறந்துருவாங்கன்னு நினைச்சு ஏனோதானோன்னு ஒரு பதிவு போட்டா சும்மா ஓட்டு போட்டு தூக்கி வச்சிடுராங்க, பதிவுலகமும் சூப்பர் ஸ்டாரும் ஒன்னு எப்போ எந்த பதிவு வரும் ஹிட்டாகும்னு யாருக்கும் தெரியாது, எல்லாரும் தமிழ்மணத்துல 20 ல ஒன்னா வரனும்னு டிரை பண்ணிட்டு இருக்காங்க, எனக்கு அதில எல்லாம் ரெண்டு ஓட்டுக்கு மேல கிடைக்கிறதே பெரிய விஷயம், இப்பத்தான் ஒன்னு ரெண்டு பதிவுக்கு 10 ஓட்டு கிடைச்சி இருக்குது, இந்த வருசத்துல சத்தியமா நான் 20 ல ஒன்னா இல்லை 21 ஆவதா கூட வர முடியாது, ஆனா அடுத்த வருசம் நானும் கண்டிப்ப்பா 20 ஆவது இடத்தையாவது பிடிப்பேன்னு நம்புறேன், அப்புறம் தமிழ்மணத்துல போட்டி போடுற எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள் நானும் கலந்திருக்கேன், ஆனா பெரிய பெரிய ஜாம்பவான்கள் கலந்துகிட்டு இருக்குற போட்டியில என்னுடைய பதிவு அப்படி ஒன்னும் பெரிசா இருக்காது, அதனால நான் லிங்க் எதுவும் குடுக்கலை, மொத்தம் 1000 பதிவுக்கு மேல இருக்கு, எல்லா பதிவையும் படிச்சி பார்த்து ஓட்டு போடுறது நடக்காத விசயம், அதனால எல்லாரும் நல்லா தெரிஞ்ச பதிவரா தேர்ந்தெடுத்துதான் ஓட்டு போடுவாங்கன்னு நினைக்கிறேன், அதனால தோல்லி அடைய நேர்ந்தாலும், பீல் பண்ணாம அடுத்த வருச போட்டிக்கு தயாராகிடுங்க, அதுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.


இப்படி எதுவுமே இலக்கில்லாம எழுதிட்டு இருக்குற எனக்கு கிடைச்ச முதல் அங்கீகாரமே 4தமிழ்மீடியால இருந்துதான், யாருமே இல்லாத கடையில் டீ ஆத்திட்டு இருக்குறவனுக்கு, ஒர் ஆள் டீ குடிக்க வந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கும், அதே மனநிலைதான் எனக்கும், கேபிள் சங்கர், ஜாக்கிசேகர், அட்ராசக்க செந்தில்குமார் இப்படி சினிமா விமர்சனத்துல கைதேர்ந்த எழுத்தாளர்கள் இருக்குற பதிவுலகத்துல என்னோட சினிமா விமர்சனத்தையும் ஒரு பதிவாக மதித்து வெளியிட்ட 4தமிழ்மீடியா குழுமத்துக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள், அதுவும் நாட்டோட பெரிய பத்திரிகையே நண்பர் பதிவுலகில் பாபு அவரோட பதிவை திருடி போடும்போது என்னோட பதிவையும் மதித்து என்னுடைய அனுமதியை பெற்று வெளியிட்ட 4தமிழ்மீடியாவின் நேர்மைக்கு தலைவணங்குகிறேன், மேலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊக்குவித்த தேவியர் இல்லம் ஜோதிஜி சார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள், உங்கள் அன்புக்கு நன்றி ஜோதிஜி சார்.

என்னுடைய பதிவின் லிங்க் http://ww5.4tamilmedia.com/index.php/cinema/movie-review/1909-2010-12-22-09-46-20


4தமிழ்மீடியா லிங்க் http://ww5.4tamilmedia.com/

என்னுடைய இந்த பதிவின் மூலம் உங்கள் தளத்திற்கு கூடுதலாக ஒரு வாசகரை அறிமுகப்படுத்த முடிந்திருந்தால் அதுவே எனக்கு போதும், மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்ள விரும்புகிறேன், நன்றி, நன்றி, நன்றி



இதே பதிவை வேறு ஒரு தளத்தில் மீள்பிரசுரம் என்ற பெயரில் பார்த்ததாக என்னுடைய நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார், அது எந்த தளம் என கண்டுபிடிக்க முடியவில்லை, தெரிந்தவர்கள் கூறவும், இரண்டு நாட்களாக சிறிது வேலை அதிகம் எனவே நண்பர்களுடைய தளத்திற்கு வரமுடியவில்லை, நாளை வருகிறேன் நண்பர்களே, இதற்கு எல்லாம் ஒரு பதிவா என நினைத்து திட்ட விரும்புபவர் திட்டி வையுங்கள் நாளை வந்து வாங்கி கொள்கிறேன், நன்றி, [ஒருவேளை பதிவு எழுத மேட்டர் இல்லைங்கறத கண்டு புடிச்சிருவாங்கலோ, சீச்சி இல்லை அப்படி எல்லாம் இருக்காது-மைண்ட் வாய்ஸ்]




Tuesday, December 21, 2010

ஈசன் - சசிக்குமாரின் மற்றுமொரு மைல்கல்



ஈசன் சசிக்குமார் என்னை ஏமாற்றி விட்டார், நானும் நமது வலையுலகில் வந்த விமர்சனங்களை எல்லாம் மனதில் கொண்டு இந்த படம் அவ்வளவுதான் போல இருக்கு, மொக்க படம் எடுத்து படம் பார்க்க வந்தவங்களை மண்டை காஞ்சி போக வச்சிட்டாரு போலன்னு நினைச்சிதான் படம் பார்க்க போனேன், பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது சசி என்னை ஏமாத்திட்டாருன்னு, படம் அவ்வளவு நல்லா இருக்கு, அவங்கவங்க ஒரு படம் எடுக்குறதுக்கே கதை இல்லாம எப்படி எடுக்குறதுன்னு திணறிட்டு இருக்கும் போது சசிகுமார் ஒரு படத்துலேயே இத்தனை விஷயங்களை எப்படி சொல்லி இருக்காருன்னு பிரமிப்புதான் வருது.



சுப்பிரமணியபுரம் படத்துல நட்பு, காதல், சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் இதை பற்றி எல்லாம் சொன்ன சசிக்குமார், இந்த படத்துல மூணு விதமான கதை சொல்றாரு, பப் எனும் மேற்கத்திய கலாச்சாரம், குடிக்கிற பசங்க, பொண்ணுங்க, அதனால ஏற்படுகிற விளைவுகள், சும்மா டிரை பன்ணி பார்போம்னு ஆரம்பிச்ச் பழக்கம் எதுல கொண்டு போய் விடுது, அவங்கனால அவங்க பெற்றோர் படும் பாடு இப்படி ஒரு கதை, அரசியல்வாதி, அவங்களோட பணம் சம்பாதிக்கும் பேரம், அவங்க சுயநலத்துக்காக அதிகாரிகளை யூஸ் பண்ணுவது, அதிகாரிகளின் வீக்னெஸ் மற்றும் நேர்மை, இப்படி ஒரு கதை, தொழிலதிபர்கள், அவங்களோட பிசினஸ் டெக்னிக், ஸ்டேட்டசுக்காக எதையும் செய்ய துணியும் மனநிலை, அவங்களுக்கு உள்ளேயும் இருக்கும் செண்டிமெண்ட் இப்படி ஒரு கதை , இது எல்லாத்தையும் இணைக்கிற ராஜேஷ்குமார் நாவல் மாதிரியான திரைக்கதைன்னு அசத்தி இருக்காரு சசிக்குமார், படம் முழுக்க நகர வாழ்கையோட அழுக்கை, ஆர்த்தடாக்ஸ் பேமிலி, விபச்சார புரோக்கர், இப்படி பல கேரக்டர் மூலமா நக்கலா சொல்லி இருக்காரு, படத்தோட வசனம் எல்லாம் செம நக்கல், நையாண்டிதான், நகைச்சுவை நடிகர்னு தனியா வச்சி டிராக் ஓட்டர டைரக்டர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.


நிறைய பேரு இது என்ன குடிக்கிறாங்க, தம்மடிக்கிறாங்க, குடிக்கறாங்க, தம்மடிக்கிறாங்க இப்படியே படம் போகுதுன்னு சொல்றவங்களுக்கு, படத்தோட கதையே இதுதான, தண்ணியடிக்கற பொண்ணுங்களதான், ஈவ் டீசிங் பண்றாங்க, தண்ணி அடிக்கிற பொண்ணத்தான் ரேப் பண்றாங்க, தண்ணி அடிக்கிற இடத்துல பார்க்குற பொண்ணத்தான் லவ் பண்றாங்க, படத்தோட கதை களனே அதான, அப்புறம் வேற எப்படி எடுக்க முடியும்? ஒரு வேளை லவ் படமா இருந்தாதான் நம்மாளுங்களுக்கு புடிக்குமோ என்னமோ, எனக்கு ஒன்னுமே புரியல, எனக்கு தெரிஞ்ச வரைக்கும், எல்லா இளைஞர்கள் பத்தியும் சசிக்குமார் சொல்ல வரவில்லை என்றே நினைக்கிறேன், இப்படி குடி, குட்டி என இருக்கும் பப் கலாச்சாரத்தில் இருக்குற பசங்க பொண்ணுங்களை பத்திதான் படத்தில் சொல்ல வர்ராரு,

கொஞ்சம் நினைச்சி பாருங்க, இதே கதைய நம்ம வெங்கடேஷ் மாதிரி டைரக்டர் கையில எல்லாம் கிடைச்சி இருந்தா என்ன பண்ணி இருப்பாங்கன்னு, முடிஞ்ச அளவுக்கு கதாநாயகி டிரஸ்ஸ கழிட்டி ஆட வுட்டு, நாலு குத்து பாட்டு போட்டு, ரேப் பண்ர சீனையே எவ்வளவு காட்ட முடியுமோ அவ்வளவு காட்டி ரசிகனுங்களுக்கு கிளுகிளுப்பாக்கி இருப்பாங்கதான, ஆனா சசிக்குமார் முடிஞ்ச அளவுக்கு டீசண்டா எதையும் கவர்ச்சியா காட்டாம, டபுள் மீனிங் டயலாக் இல்லாம, அட குத்து பாட்டு ஒன்னு இருக்குங்க, அதுல கூட சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசு இருக்கு பாருங்கன்னு கருத்து சொல்லி இருக்காரு, இவரு இப்படி எடுத்ததால தான் பப்பு கூட டீசண்டா காமிக்கிறாரு, இதுக்கே சசிக்குமாருக்கு ஒரு ராயல் சல்யூட்.

பிளாஸ்பேக்க கூட விறுவிறுப்பா இருக்கணும்னு நினைக்காம, சாதாரணமா காமிச்சதுல இருந்தே தெரியல, கதைக்கு மீறி எதுவுமே செய்யாம, சொல்ல வந்தத மட்டுமே சொல்லி முடிச்சு இருக்காரு, கிளைமேக்ஸ்ல வைபவ்வ இரும்பிலேயே அடிச்சு கொல்ற சீன் வன்முறையா இருக்குன்னா, கண்டிப்பா அப்படித்தான் இருக்கும், அக்காவ ரேப் பண்ணி சீரழிச்சா கோபப்படுற பையன் இரும்பால அடிக்காம, அடி ஸ்கேல் வச்சா அடிப்பான், அந்தளவு வெறி இருக்கத்தானே செய்யும், என்னை பொறுத்த வரை அளவுக்கு மீறி சசிக்குமார் எதுவுமே செய்யலை.


படத்துல நடிச்ச நடிகர்கள பத்தி சொல்லனும், ஈசனா நடிச்சிருக்குற பையன், பையன பார்த்தாலே பயம் வருது, சமுத்திரக்கனி, அபிநயா, முக்கியமா அபிநயாவோட அப்பா, அரசியல்வாதி, அவரோட அல்லக்கை, இவங்க எல்லாம் ரொம்ப நல்லா நடிச்சி இருக்காங்க, வைபவ், அவரோட லவ்வர், பிரண்ட்ஸ்சு இவங்க எல்லாம் சும்மா குடிச்சி இருக்காங்க, வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே, ரொம்ப குறிப்பா அபிநயாவும், அவங்க அப்பா கொடுக்குற காப்பியில விஷம் இருக்கும்னு தெரிஞ்சும், அப்பாவை ஒரு பார்வை பார்த்துட்டு வேகமா குடிக்கிற சீன் ஒரு சிறந்த நடிகையா அவங்களை வெளிக்காட்டுது, நல்ல எதிர்காலம் இருக்கு பொண்ணுக்கு.


என்னோட இந்த பதிவு பலருக்கு புடிக்காதுன்னுதான் நினைக்கிறேன், நான் பார்த்த வரைக்கும் எல்லாரும் காமெடியா விமர்சனம் பண்ணனும்னு நினைச்சி எழுதுன மாதிரி தான் இருக்கு, ஆனா எனக்கு படத்துல சொல்ல வந்த கருத்துக்கள்தான் பெரிசுங்கற மாதிரி தோணுது, அதுனால நான் இப்படி எழுதுனது யாருக்காவது வருத்தமா இருந்தா மன்னிக்கவும், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சசிக்குமாருக்குதான் எல்லாரும் சொல்லி இருக்காங்க, ஆனா நான் எனக்கே சொல்லிக்கிறேன், ஏன்னா இந்த படம் கண்டிப்பா ஓடாது, இனிமே சசிக்குமாரும் நாம ஏன் இப்படி எல்லாம் படம் எடுத்து நஷ்டப்படனும்னு அவரும் மத்த கமர்ஷியல் டைரக்டர் மாதிரி லவ், ஆக்‌ஷன், காமெடி, குத்துபாட்டுன்னு ஆகிடுவாரு. எது எப்படியோ எனக்கு படம் ரொம்ப புடிச்சி இருந்தது, என்னை சசிக்குமார் ஏமாத்தலை.

மொத்தத்துல ஈசன் பொண்ண பெத்த அப்பங்காரங்க எல்லாருக்கும் பாடம்.  


    

Monday, December 20, 2010

பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள் - தொடர் பதிவு




முதன்முதலாக ஒரு தொடர் பதிவு எழுத போகிறேன், என்னை தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் அவர்களுக்கு நன்றி, பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள் என்றதும், இது என்ன பெரிய விஷயம் பத்து பாடல்களை தேர்வு செய்ய முடியாதா என நினைத்தேன், பிறகு கூகிளில் தேடிய போதுதான் தெரிந்தது, ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பாடல்கள் எனக்கு பிடித்த பாடலாக உள்ளது, இருந்தும் இதில் பத்து பாடல்கள் மனதிலேயே தேர்வு செய்யலாம் என பார்த்தால் அது அனைத்தும் இந்த வருடத்தில் வந்த பாடலாகவே உள்ளது, சரி இது எதுவும் வேலைக்காகாது, ஒவ்வொரு வருடமும் அந்தந்த கால கட்டங்களில் ஏதேனும் ஒரு பாடல் மிகவும் பிடித்திருக்கும், எனவே அந்த பாடல்களை மட்டும் எடுத்து போட்டிருக்கிறேன், பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

முதல்ல வர பாட்டு 2001 ஆம் வருஷத்துல வந்த துள்ளுவதோ இளமை படத்துல வர ’’இது காதலா முதல் காதலா பாட்டு’’, இது நம்ம தனுஷ் அறிமுகமான படம், இந்த படம் எவ்வளவு டெரரான படம்னு உங்க எல்லாருக்கும் தெரியும், அப்ப நான் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தேன், பசங்க எல்லாரும் காலேஜ் கட் அடிச்சிட்டு போய் பார்த்த படம், அது என்னவோ தெரியல இந்த பாட்டு ரொம்ப புடிச்சி போச்சு, மியூசிக் ரொம்ப நல்லா இருக்கும், தனுஷ் நல்லா டான்ஸ் ஆடிருப்பாரு, இது போக இந்த படத்துல வர்ர மத்த எல்லா பாட்டுமே பிடிக்கும்


அடுத்த பாட்டு 2002 ஆம் வருஷத்துல வந்த ஏப்ரல் மாதத்தில் படத்துல வர ’’பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, சொன்னால் பொய் பொய்தானே’’, இந்த பாட்டும் நான் முதல்ல சொன்னமாதிரியே லவ் பீலிங் பாட்டு, லவ் பண்ணிட்டு புரோபோஸ் பண்ணாதவங்க பீலிங் பாட்டு, யுவன் சங்கர் ராஜாவும் ரொம்ப பீல் பண்ணி பாடி இருப்பாரு, வித்தியாசமான மெலடி சாங்



அடுத்த பாட்டு 2003 ஆம் வருஷத்துல வந்த காக்க காக்க படத்துல வர ’’ஒன்றா இரண்டா ஆசைகள்’’ இந்த பாட்ட பத்தி சொல்லனும்னா பக்கா ரொமான்ஸ் சாங், ஆனா அவ்வளவு இதமா எடுத்திருப்பாங்க, பொதுவாவே கவுதம் மேனன் படத்துல ரொமான்ஸ் பாட்டு எல்லாம் சூப்பரா ரசிக்கிற மாதிரி பண்ணுவாரு, அதுவும் இந்த படத்துல நிஜ கணவன் மனைவி சொல்லவா வேணும், பின்னி இருப்பாங்க, பாடல் வரிகளும் ரொம்ப நல்லா இருக்கும், மியூசிக் மெல்லமா மனதை வருடிட்டு போகும், பாட்டு முடியும் போது அந்த இசை ஸ்லோவா பின்னாடி போகும் போது அப்படியே கேமராவும் ரூமை விட்டு வெளியே போற மாதிரி எடுத்திருப்பாங்க, உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்





அடுத்த பாட்டு 2004 ஆம் வருஷத்து பாட்டு, விருமாண்டி படத்துல வர ’’உன்னை விட இந்த உலகத்தில ஒசந்தது ஒண்ணுமில்லை’’ இந்த பாட்டு இன்னொரு வகையான ரொமான்ச் பாட்டு முன்னது நகரம்னா இது கிராமத்து ரொமான்ஸ், அதுவும் கமல் வேற சொல்லவா வேணும், அபிராமி ஒரு வழி ஆகி இருப்பாங்க, ரொம்ப இதமான மெலடி இளையராஜா இசையில கமலோட குரல்ல மனசை என்னமோ பண்ணும், முழுசா பீல் பண்ணி கேட்டீங்கன்னா உங்க பொண்டாட்டிய கொஞ்சாம இருக்க முடியாது, பாட்டு வரிகளும் அற்புதமா இருக்கும், கண்டிப்பா கேளுங்க லவ் + ரொமான்ஸ் பாட்டு



அடுத்து வர பாட்டு 20005 ஆம் வருசத்துல தலைவர் நடிச்ச சந்திரமுகி படத்துல வர ’’கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் பாட்டு’’, இது ரஜினி படம்கறதுக்காக சொல்லல, அருமையான மெலடி சாங், வித்தியாசாகர் இசையில சின்னதா ரஜினி ஸ்டைலோட அமைஞ்ச நல்ல பாடல், இதுக்கு மேல விரிவா சொல்ல முடியாது, பதிவோட நிபந்தனைய மனசில வச்சு இதோட நிறுத்திக்கிறேன், கடைசியா நயன்தாராவ நயன்தாரா மாதிரியே பார்த்த பாட்டு, அதாவது இளமையோட பார்த்த பாட்டு.



அடுத்து 2006 ஆம் வருஷம் வந்த சில்லுனு ஒரு காதல் படத்துல வர ’’முன்பே வா அன்பே வா’’ இந்த பாட்ட புடிக்காதவங்க யாரும் இருக்க முடியாது, ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு மேல சலிக்காம கேட்ட பாட்டு, இப்பவும் எப்ப டிவில இந்த பாட்ட போட்டாலும் நின்னு கேட்டுட்டுதான் போவேன், அப்ப நான் லவ் பண்ணிட்டு இருந்த நேரம் பீல் பண்ண வச்ச பாட்டு, இதுல சூரியாவும், பூமிகாவும் போட்டுட்டு வர ரோஸ் கலர் சுடிதாரும், பச்சை கலர் டி சர்ட்டும் போட்ட காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கும், பாட்டு வரிகளும் அதவிட ரொம்ப சூப்பரா இருக்கும்



அடுத்து 2007 ஆம் வருஷத்துல வெளிவந்த சென்னை -28 படத்துல வர ’’யாரோ யாருக்குள் இங்கு யாரோ’’ பாட்டு பாடும் நிலா பாலு பாடுனதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பாடுகளில்ல இதுவும் ஒன்னு, பாட்டோட மியூசிக் ரொம்ப நல்லா இருக்கும், யுவன் பின்னி எடுத்து இருப்பாரு, சினிமா காதலர்கள் இல்லாம சாதாரணமா ந்டைமுறை வாழ்க்கையில காதலர்கள் என்ன பண்ணுவாங்கங்கறத பாட்டுல நல்லா காமிச்சிருப்பாங்க, பூ வாங்கி கொடுக்குறது, ஐஸ்கிரீம் சாப்பிடுரது, தலையில முக்காடு போட்டுட்டு வண்டில போகுறது, கிரீட்டிங் கார்டு கொடுக்கறது இப்படின்னு, ரொம்ப நல்லா இருக்கும் இந்த பாட்டு.



அடுத்து 2008 ஆம் வருஷத்துல வெளிவந்த நேபாளி படத்துல வந்த ’’கனவிலே கனவிலே’’ பாட்டு, பரத்தும் மீரா ஜாஸ்மினும் நடிச்சது, ஊட்டில இந்த பாட்ட எடுத்து இருப்பாங்க, எங்க ஊருல இருந்து ஊட்டி பக்கம்கறதால நாங்க பிரண்ட்ஸ்சோட பைக்ல போகும் போதொல்லாம், அந்த கிளைமேட்ல இந்த பாட்ட நினைக்கும் போதே லவ் பீலிங் வரும், கண்ண மூடிட்டு கேட்டா இதமான அனுபவத்தை கொடுக்கும், பொதுவா பார்த்தா அவ்வளவா இம்ப்ரஸ் பண்ணாது, கண்டிப்பா தனிமையில கேட்டு பாருங்க கண்டிப்பா ரசிப்பீங்க



அடுத்து 2009 ஆம் வருசத்துல வந்த குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்துல இருந்து ’’கடலோரம் ஒரு ஊரு’’, நம்ம ஊருல நிறைய நல்ல பாடல்கள படம் நல்லா இல்லைங்கற காரணத்தால கவனிக்காம விட்டுடுவாங்க, அப்படி விட்டு போன ஒரு பாட்டுதான் இது, சரண் அவங்க அப்பா மாதிரியே பாட முயற்சி பண்ணி இருப்பாரு, முன்பே வாவுக்கு அப்புறம் என்னோட ஆல்டைம் பேவரைட் இந்த பாட்டு அப்படியே மெதுவா கிளம்பி உள்ளுக்குள்ள வரைக்கும் போகும், அமைதியா இருக்குற இடத்துல இந்த பாட்ட போட்டு கவனிச்சி பாருங்க நான் சொன்னது புரியும், ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல அமைதியான மெலடி சாங், பாடல் வரிகளும் நல்லா இருக்கும்.




கடைசியா 2010, இதுலதான் பெரிய குழப்பமா இருக்கு, நிறைய பாட்டு இந்த வருசத்துல நல்லா இருக்கு, எந்த பாட்ட சொல்றது, எத விடறதுன்னு பெரிய குழப்பாமாவே இருக்கு, இருந்தாலும் இது எல்லாத்துலயும் பெஸ்ட்டா எனக்கு தோனறது அங்காடி தெரு படத்துல வர இந்த பாடல்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம், உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
நீ பார்க்கும் போதோ மழையாவேன்,
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்,
நீ இல்லை என்றால் என்னாவேன்,
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்.
இந்த பாட்ட பத்தி நான் என்ன சொல்றது, அதான் பாடல் வரிகளே சொல்லுதே, நீங்களும் கேளுங்க. 


இந்த பதிவ தொடர நான் அழைப்பது உங்களைத்தான், அட பின்னாடி திரும்பி பார்க்காதீங்க சத்தியமா உங்களைத்தான், உங்களுக்கும் ஏதாச்சும் பத்து பாடல்கள் பிடிக்காம இருக்குமா என்ன, பிடிச்சத பகிர்ந்துக்கோங்க, இந்த தொடர் பதிவோட ரூல்ஸ் அண்டு ரெகுலேசனஸ் எல்லாம் நண்பர் எப்பூடி அவர்களோட இந்த பதிவில போய் பார்த்துக்கோங்க, எத்தனை பேரு பகிர்ந்துக்கறீங்களோ அந்தளவுக்கு நாம மறந்து போன பாடல்கள திரும்பி பார்க்க ஒரு சந்தர்ப்பமா அமையும், அது உங்களோட மறந்து போன பிளாஸ்பேக்க கிளறி விட கூட வாய்ப்பு இருக்கு, என்ன மாதிரி, என்னோட இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு ஒரு பின்னூட்டம் மூலம் தெரிவிச்சுட்டு போங்களேன், நன்றி - இரவுவானம்





Friday, December 17, 2010

சபரிமலைக்கு போறவங்களுக்கு சில டிப்ஸ்




சபரிமலை சீசன் ஆரம்பிச்சாச்சு, பல பேர் மாலை போட்டு சாமியார் ஆகி இருப்பாங்க, இதுல உங்களுக்கு தெரிஞ்சவங்களோ, நண்பர்களோ, சொந்தகாரங்களோ இருப்பாங்க, நானும் இரண்டு வருஷம் மாலை போட்டு இருக்கேன்கறதால  எனக்கு தெரிஞ்ச டிப்ஸ்ஸ சொல்றேன் கேட்டுகோங்க, இது தவிர வேற ஏதாவது டிப்ஸ் உங்ககிட்ட இருந்தா பின்னூட்டத்துல பகிர்ந்துக்கோங்க, சபரிமலைக்கு போறவங்களுக்கு உபயோகமா இருக்கட்டும்.


முதல்ல மாலை போட முடிவு பண்ணிட்டீங்கன்னா ஒரு மண்டலம் அதாவது 48 நாள் முழுசா போடரமாதிரி பார்த்துக்கோங்க, இந்த ஒரு நாள் சாமி, மூணு நாள் சாமி வேண்டாமே, மாலை போடுரதே அந்த 48 நாள் கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாம நல்லபடியா இருக்கணும்கறதுக்காகத்தான், அப்பத்தான் நல்ல பழக்கங்களை தொடர முடியும், 2 நாள், 3 நாள்னா அப்புறம் பழைய குருடி கதவை தொறடி கதைதான் ஆகும்.

அப்புறம் குருசாமி தேர்ந்தெடுக்கும் போது நல்ல வயதானவரா இருந்தாலும் அனுபவசாலியா பாருங்க, ஏன்னா பாதிப்பேரு முழு குடிகாரனுங்களா இருந்துட்டு இந்த சீசன்ல மட்டும் சாமியாரா மாறிடுவாங்க, இது என்னோட அனுபவத்துல நடந்தது, நான் ரெண்டாவது வருஷம் மாலை போடும்போது எங்க குருசாமி திரும்பி வரும்போது வேனுக்கு கொடுக்க வேண்டிய காசு எல்லாத்துக்கும் சரக்கு அடிச்சிட்டு மட்டை ஆகிட்டாரு, வேன் டிரைவர் அவங்க ஓனர் தோட்டத்துல கொண்டு போய் கட்டி வச்சிட்டாரு, நாங்களும் ஹவுஸ் அரஸ்ட்ல இருந்தோம், அப்புறம் எங்க ஊரு ஆளுக வந்துதான் மீட்டுட்டு போனாங்க

மலைக்கு போக வேனோ, பஸ்ஸோ புடிக்கும் போது நல்ல வண்டியா பார்த்து புடிங்க, முடிஞ்ச அளவுக்கு வருசா வருசம் ஒரே டிராவல்ஸ்ல வண்டி எடுத்தா நல்ல வண்டியா கிடைக்கும், ஏன்னா சீசன் டைம்கறதால அவனவன் இந்தியன் படத்துல வர மாதிரி டப்பா பஸ்ஸ எல்லாம் பெயிண்ட் அடிச்சி வச்சிருப்பானுங்க, இல்லைன்னா சபரிமலை சீசனுக்கு 3 மாசம் முன்னாடியே யாரெல்லாம் மலைக்கு போறதுன்னு முடிவு பண்ணி வண்டி புக் பண்ணி வச்சிடுங்க, இது சின்ன வண்டி கார், மாருதி வேனுக்கும் பொருந்தும்

பெரும்பாலும் சபரிமலைக்கு போறவங்க தரிசனம் முடிஞ்சதும் கேரளா டூர் அடிக்க விரும்புவாங்க, அதனால ஐடியா, வோடபோன் சிம்மு ஒன்னு வாங்கிக்கோங்க, அதான் ஓசியிலயே நிறைய கிடைக்குதே ஏன்னா கேரளாவுல எங்க போனாலும் ஓரளவு நெட்வொர்க் கிடைக்கிறது இந்த இரண்டுலதான், பிஎஸ் என் எல், ஏர்செல் வச்சிருந்தீங்கண்ணா வேஸ்ட்.

அப்புறம் கேரளாவுல எங்க போனாலும் இருக்குறட் ஏ டி எம் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் தான், அதனால உங்ககிட்ட ஸ்டேட் பாங்க் அக்கவுண்ட் இருந்ததுன்னா அதுல கணிசமா பணம் போட்டு வச்சிருங்க, யூஸ் புல்லா இருக்கும், இல்லைன்னா மாஸ்ட்ரோ, சிரஸ் இருக்குற டெபிட் கார்டு இருந்தாலும் பரவாயில்லை.


அப்புறம் குழந்தைகள சபரிமலை கூட்டிட்டு போறவங்க, கடையில விக்கிற ஐ டி கார்டு ஒன்ன வாங்கி பேரு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் எழுதி கழுத்துல மாட்டி விட்டுடுங்க, ஏன்னா சரங்கொத்தியில கூட்டம் அதிகமா இருக்கும், காணாம போனா கூட தொடர்பு கொள்ள ஈசியா இருக்கும், முடிஞ்சா உங்க போன் நம்பர குழந்தைகளுக்கு மனப்பாடம் பண்ணி விட்டுடுங்க, அதே மாதிரி நீங்களும் ஐ டி கார்டு யூஸ் பண்ணலாம் தப்பில்ல, உங்க பர்ஸ்ல விசிட்டிங் கார்டு எப்பவும் இருக்கட்டும், பம்பை நதியில் குளிக்கும் போதும் குழந்தைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும்.


அப்புறம் கூடவே சின்னதா ஒரு குடை, மப்ளர், இதயெல்லாம் தவறாம ஒன்னு வாங்கி வச்சிருங்க, ஏன்னா கேரளாவுல மழை எப்ப பெய்யும், எப்படி பெய்யும்னு யாராலயும் சொல்ல முடியாது

சுகர், பிபி உள்ளவங்க மலைக்கு போறதுக்கு முந்தியே டாக்டர பார்த்து சரியான மருந்து, மாத்திரைகள வாங்கி தயாரா வச்சிருங்க, மறக்காம அத எப்போ, எந்த நிலையில சாப்பிடனும்னு கவர்ல எழுதி வச்சிருங்க, ஒரு வேளை உங்களுக்கு முடியாம போனா மத்தவங்க பார்த்து உங்களுக்கு உதவ கூடும், முடிஞ்சா இங்கிலீஸ், மலையாளத்துலயும் எழுதலாம், அதுல கண்டிப்பா உங்க டாக்டரோட போன் நம்பர், கிளீனிக் பேர் இருக்கட்டும்.

கடைசியா எப்படா மாலையை கழட்டுவோம் சரக்கு அடிக்கலாம்னு இருக்காதீங்க, சில பேரு மலையை விட்டு இறங்குணதுமோ வீட்டுக்கு போன் பண்ணி சிக்கன் மட்டன்னு ஆர்டர் பண்ணுறது, குவாட்டரு கோழி பிரியாணின்னு இறங்கிடுவாங்க, முடிஞ்ச அளவுக்கு தண்ணி அடிக்கரது, பீடி, சிகரட் குடிக்கரது, அசைவ உணவு சாப்பிடரதை தவிருங்க, சாமி பீலிங்க கண்டினியூ பண்ணி பாருங்க,எந்தளவு கண்டினியூ பண்ணுறீங்களோ அந்தளவு உங்க மனசும் உடம்பும் நல்லா இருக்கும், இப்படியாவது தமிழ்நாட்டுல மது விற்பனை குறையட்டும், அப்படியே உங்க வீட்டு பட்ஜெட்டும் குறையட்டும்


சபரிமலைக்கு போகும் ஐயப்ப பக்தர்களே, உங்களின் பயணம் இனிதாகவும், பாதுகாப்பாகவும் அமையட்டும், உங்களுக்கு ஐயப்பனின் அருள் நீங்காமல் கிடைக்கட்டும், சுவாமியே சரணம் ஐயப்பா, நன்றி.
  
  

Wednesday, December 15, 2010

விருதகிரி - எ பிலிம் பை விஜயகாந்த்



ரிட்டயர்ட் ஆகாத போலீஸ், புதிய டாக்டர், புரட்சி கலைஞர், கேப்டன், தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் விருதகிரி, அப்பாடா சொல்லி முடிக்கவே மூச்சு வாங்குது, படத்தோட கதை என்னன்னா இத்தனை நாளா உள்ளூர் அரசியல்வாதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள வேட்டையாடிட்டு இருந்த கேப்டன் இண்டர்நேஷனல் தீவிரவாதிகள், கிரிமினல்களை எப்படி வேட்டையாடி அழிக்கறாரு அப்படிங்கரதுதான் கதை, அதுக்கு ஒரு லாஜிக் வேணும்கறதுக்காக பொண்ண தேடி போற மாதிரி கதையை கொண்டு போறாங்க,
சும்மா சொல்லக்கூடாது ந்ம்ம கேப்டன அவருக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்னு சொல்ல வச்சிருக்காரு, வேற எந்த டைரக்டரும் யோசிக்காத அரவாணிகள் பிரச்சனையையும், ஆஸ்திரேலியா இனவெறி பிரச்சனையையும் கையில் எடுத்ததுக்காகவே கேப்டன பாராட்டலாம்,

கேப்டனோட அறிமுகம் சீனே பயங்கர டெரரா இருக்கு, அறிமுக காட்சியிலேயே ஸ்காட்லாந்து யார்டு போலீஸ்சுக்கே பாடம் நடத்துராறு, டிரைனிங் போன இடத்துல டிரைனிங் கொடுத்தவங்களுக்கே டிரைனிங் கொடுக்குறாரு, படம் புல்லா மலேசியாவில எடுத்துட்டு ஆஸ்திரேலியான்னு பிலிம் காட்டுராங்க, படம் புல்லா வெளிநாட்டுல நடக்குதுங்கறதால இங்கிலீஸ்ல பேசற வசனங்கள் எல்லாம் தமிழ்லயே டிரான்ஸ்லேட் பண்ராங்க, நம்ம கேப்டனோட இங்கிலீஸ் பத்திதான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே, அவரு WHERE IS, WHEN IS னு ஆரம்பிக்கரதுக்குள்ளயே தமிழ்லயே வசனம் போட்டுராங்க, இதிலே வெள்ளக்காரனுங்கள்ளாம் தமிழ்ல பேசி ஒரே காமெடியா இருக்கு, இத சமாளிக்க டைட்டில்லயே ஆங்கில வசனங்கள் எளிதில் புரிந்து கொள்ள மொழி பெயர்க்கப்பட்டுள்ளதுன்னு போட்டுடுராங்க.

படம் இண்டர்வெல் வரைக்கும் எடிட் பண்ணாத கோலங்கள் சீரியல் மாதிரியே போகுது, நம்ம பொறுமைய ரொம்பவே சோதிக்குறாங்க, டெம்ப்ளேட் வசனங்கள் மாதிரி, டெம்ப்ளேட் செண்டிமெண்ட், டெம்ப்ளேட் பாசம்னு சீரியல் காட்டுராங்க, அதுவும் முதல்வன் படத்துல அர்ஜீனுக்கு அம்மாவா வருவாங்களே அவங்கதான் இதுலயும் கேப்டனுக்கு அம்மா, சொல்லவா வேணும் ஆ வூன்னா கேப்டன் புகழ் பாடுராங்க, ஆனா இண்டர்வெல்லுக்கு அப்புறம் படம் ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப ஸ்பீடா ரசிக்கற மாதிரி பண்ணி இருக்காரு,  



படத்தோட சண்டை காட்சி பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும், ரொம்ப நாளா தமிழக மக்கள் மறந்திருந்த பறந்து பறந்து அடிக்கறது, கயிறு கட்டி இழுத்து சண்டை போடுறது, வானத்துல பறந்து அஷ்டகோணலாக பறந்து அடிக்கறது, கிளைமேக்ஸ்ல இரும்பு சங்கிலிய அத்துட்டு வந்து அடிக்கறது, அப்புறம் கேப்டன் ஸ்பெஷல் லெப்ட் லெக்ல உதைக்குறது அப்படின்னு நிறைய இருக்கு, அதுவும் கேப்டன் உதைக்குறதுக்காகவே பின்னாடி திரும்பி நிக்குறாங்கன்னா பார்த்துக்குங்களேன், அதுவும் ஒவ்வொரு சண்டைலயும் வில்லனுங்க சட்டையை கிழிச்சிட்டு சண்டைக்கு வராங்க, நாந்தான் பயந்துகிட்டே இருந்தேன் நம்ம கேப்டனும் சட்டையை கழட்டி பாடி பில்டிங் காட்டிடுவாரோன்னு, நல்லவேளை அந்த அசம்பாவிதம் நடக்கலை, அப்புறம் முழங்கால் வரைக்கும் கோட் போட்டுட்டு சண்டை போடுராரே, சண்டை போடும் போது தடுக்காது? இன்னொரு டெம்ப்ளேட் காட்சியா கிளைமேக்ஸ்ல வில்லன் கதாநாயகன கட்டிப்போட்டுட்டு ஒப்புதல் வாக்குமூலம் தருவாரு அதுவும் தவறாம இருக்கு, இப்படி பல காட்சிகள நீங்களே ஊகிக்கலாம், கேப்டன் ரொம்ப சிரமப்பட வேண்டாம்னு நினைச்சிட்டாரு போல.

அப்புறம் படத்தோட வசனங்கள் பத்தி சொல்லணும், படத்துல ஏதோ ஒரு சீன்ல பைலை தொலச்சா கூட கலைஞர் ஆட்சியில அப்படித்தான் இருக்கும்னு ஆரம்பிச்சுர்ராங்க, கிடைக்குற கேப்புல எல்லாம் கழக ஆட்சிய வாரு வாருன்னு வாருராரு, அட வில்லன கொல்ல கரண்ட் ஷாக் வக்கிறாரு, அப்பக்கூட அடிக்கடி கரண்ட் கட்டாக இது என்ன தமிழ்நாடா, ஆஸ்திரேலியாடான்னு பஞ்ச் அடிக்குறாரு, அவரு அடிக்கற பஞ்ச் டயலாக்குல வெள்ளக்காரனே ஷாக் ஆகுரான்னா பார்த்துக்கங்களேன், அடிக்கடி அடிக்கர பஞ்சுல காதுல பஞ்சு வெச்சாலும் ரத்தம் போறத யாராலும் தடுக்க முடியாது,
எனக்கு புடிச்ச வசனம் ‘அடிமாடு காணாம போனா கூட தேட ஆள் இருக்கும், ஆனா அரவாணிங்க காணாம போனா கேட்க யாரும் இல்லை’’ இந்த மாதிரி நிறைய வசனங்கள் நல்லா இருக்கு.

அடிக்கடி பாராட்டு விழா நடக்கரதையும், குடும்ப ஆட்சி நடக்கரதையும் படத்துல வர்ர எல்லா வசனத்துலயும் வாருராரு, ஆனா படம் புல்லா எல்லாரும் கேப்டன் புகழ் பாடிக்கிட்டே இருக்குராங்க, அட பாட்டுல கூட கேப்டன் புகழ் பாடிக்கிட்டே இருக்குராங்க, ஒவ்வொரு சீன்லயும் கேப்டன் கூட வர்ரவங்க கேப்டன புகழ்ந்துகிட்டே இருக்குராங்க, அத மட்டும் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாரு, குடும்ப அரசியல் பத்தி சொல்ராரு, ஆனா இவரு குடும்பத்துலேயே அண்ணி, அண்ணன், மச்சான்னு குடும்ப அரசியலா இருக்கு, கேப்டனுக்கு ரெண்டு புள்ளக வேற இருக்கு அதுக நாளைக்கு அரசியலுக்கு வந்தா கட்சி பதிவி கொடுக்க மாட்டாரான்னு தெரியல, சரி நமக்கு எதுக்கு பொல்லாப்பு, தேமுதிக ரத்தத்தின் ரத்தங்கள் யாராவது இருந்தால் மன்னிக்க.

எந்த நேரத்துல டாக்டர் பட்டம் கொடுத்தாங்களோன்னு தெரியல, போதை ஊசி போட்டு இருக்குற பொண்ணுக்கு, குளூகோஸ் ஏத்துறாரு, அதுக்கு போதை தெளிஞ்சிடுது, டாக்டர்னு நிரூபிக்க வச்ச சீன் போல, ஒரு பாட்டு சீன்ல மினி ஆட்டோ கொண்டு வந்து நடமாடும் ரேஷன் கடைன்னு போர்டு மாட்டி காட்டுராங்க, அவரு ஆட்சிக்கு வந்தா நடைமுறை படுத்த போகும் திட்டமாம், ஏங்க இதுக்கு எத்தனை மினி ஆட்டோங்க வாங்குறது? கேப்டனுக்கு இருக்குற தகுதிக்கும், திறமைக்கும் சி.எம் போஸ்ட் எல்லாம் பத்தாது, பேசாம நேரா பிரதமர் பதவிக்கே போட்டி போடலாம், தமிழ்நாட்டுல ஏற்கனெவே இருக்குற கலைஞர் போதாதா? இன்னொரு கலைஞர் வேணுமா அதுவும் புரட்சி கலைஞர், வேணாங்க விட்டிடுங்க தமிழ்நாடு தாங்காதுங்க, அதுக்கும் மீறி நீங்க ஜெயிக்கணும்னு நினைச்சீங்கன்னா ஒரு அறிக்கை விடுங்க, மக்களே ஓட்டு போடுங்க இல்லைன்னா வருஷத்துக்கு மூணு படம் ரிலீஸ் பண்ணுவேண்ணு, அப்புறம் பாருங்க ஜனங்க துண்டை காணோம் துணிய காணோம்னு வந்து ஓட்டு போட்டு சி.எம் ஆக்கிருவாங்க



நேத்தைக்கே இந்த படத்த பார்த்துட்டு எழுதுவோம்னு நினைச்சேன், ஆனா அதுக்குள்ள எடிட்டர் சலீம் வேற இறந்துட்டாருன்னு பீதிய கிளப்பி விட்டுட்டாங்க, கூகிள் பஸ்ல கார்த்திக்குனு ஒரு நண்பர் வேற பிளாக் உயிரோட இருக்கணுமா இல்லை நீங்க உயிரோட இருக்குணுமான்னு வேற பயமுறுத்திட்டாரு, ஆனா படம் அப்படி ஒன்னும் பயங்கரமா இல்லை, இடைவேளை வரைக்கும் பொறுமையா இருந்தீங்கண்ணா இடைவேலைக்கு அப்புறம் நல்லா இருக்கும்.

அப்புறம் எடிட்டர் சலீம் இறந்ததுக்கு தட்ஸ்தமிழ் வாசகர்கள் போட்ட கமெண்ட்ஸ் கீழே போட்டு இருக்கேன், கொஞ்சம் படிச்சி பார்த்து உங்க கருத்த சொல்லுங்க.

பதிவு செய்தவர்: எடிட்டரின் உதவியாளர்
பதிவு செய்தது: 13 Dec 2010 4:24 pm
அன்னைக்கு அவரு விருத்தகிரி படத்தை எடிட் பண்ணிக்கிட்டு இருந்தார். விசயம் தெரிஞ்சு எல்லாரும் அந்த எடத்த விட்டு ஓடிட்டாங்க. அவரால வசனத்த சகிச்சுக்க முடியல. என்கிட்டே பஞ்சு வாங்கி காதுல வச்சுக்கிட்டு வேலை பார்த்தார்.
பதிவு செய்தவர்: எடிட்டரின் உதவியாளர்
பதிவு செய்தது: 13 Dec 2010 4:25 pm
அவரு கண்ணுல கண்ணீர் நிக்காம வழிஞ்சது. கிளைமேக்ஸ் டயலாக்க எடிட் செய்யுறப்போ அவரு மூக்கில ரத்தம் வழிய ஆரம்பிச்சது.
பதிவு செய்தவர்: எடிட்டரின் உதவியாளர்
பதிவு செய்தது: 13 Dec 2010 4:28 pm
நிலைமை ரெம்ப மோசமாகி கீழே விழுந்து வலிப்பு வர ஆரம்பிச்சுட்டது. அந்த நேரம் பார்த்து கரண்ட் போனதால. பாத்ரூம்ல ஒழிஞ்சிருந்த நான் ஒடி வந்து பார்த்தேன்.
பதிவு செய்தவர்: எடிட்டரின் உதவியாளர்
பதிவு செய்தது: 13 Dec 2010 4:32 pm
கடசியா டாக்டர்ட போனப்ப அவர் சொன்னார். இடைவேளைக்குள்ள கொண்டு வந்தா காப்பாத்திர்கலாம் இவரு முழுப் படத்தையும் பாத்திட்டாரு இனி ஒன்னும் செய்ய முடியாதுன்னுட்டாரு.
 பதிவு செய்தவர்: சலீம் ஆவி
பதிவு செய்தது: 13 Dec 2010 2:19 pm
மக்கா...மனுஷன வச்சி படம் பண்ணா எடிட் பண்ணலாம். ஆனா ஒரு காட்டெருமையை வச்சி எப்புட்ரா...எப்புடி...அதான்..முடியல..ஒரேடியா போய் சேர்ந்துட்டேன்...ஜக்ராதடா...தியேட்டர் பக்கம் போயிடாதிஈங்க...அப்புறம் உங்க வுயிருக்கு நான் கியரண்டீ இல்ல.




பதிவு செய்தவர்: நல்லவன்
பதிவு செய்தது: 13 Dec 2010 12:57 pm
யோவ் சென்சார் நாய்களா இந்த படத்துக்கு ஓகே பண்றதுக்கு பதில் ஒரு அணுகுண்டு போடா அனுமதி அளித்திருக்கலாமே


பதிவு செய்தவர்: விஜயகாந்த்
பதிவு செய்தது: 12 Dec 2010 12:41 am
இப்படத்தை என்னுடைய எதிர் கட்சிகளுக்காக சமர்பிக்கிறேன். மவனே என்னிடம் இருந்து யாரும் தப்ப முடியாது. படாத டெஸ்ட் பண்ணி பார்த்தேன், ரிசல்ட் ஓகே..




பதிவு செய்தவர்: கண்ணன்
பதிவு செய்தது: 11 Dec 2010 11:40 pm
என்ன சார் படத்தை முழுசா ஒரு தடவை தவறி எடிட் பண்ணும் போது பார்த்துடீங்களா????




பதிவு செய்தவர்: சாம்
பதிவு செய்தது: 11 Dec 2010 10:45 pm
அடடா... கேப்டன் டாக்டரா நடிச்சிருந்தா செல்போன் வெளிச்சத்திலேயே மூளை ஆபரேசன் பண்ணியிருப்பார். போலீஸ் வேஷம் போட்டதால காஷ்மீர் தீவிரவாதியா மட்டும்தான் பிடிக்க முடியும்.




 பதிவு செய்தவர்: நடந்தது என்ன
பதிவு செய்தது: 11 Dec 2010 6:16 pm
குறிப்பிட்ட நடிகருடன் பணியாற்றிய விஜி,சவுந்தர்யா,பிரதியுஷா,திருப்பதிசாமி மற்றும் சலீம் என தொடர மரணங்கள்.காரணம் என்ன இடைவேளைக்குப்பின்.காத்திருக்கவும்.




பதிவு செய்தவர்: பண்டா கரடி
பதிவு செய்தது: 11 Dec 2010 6:05 pm
காண்டா மிருகத்தைஎல்லாம் நடிக்க வச்சி வேடிக்கை பாத்தா இப்படித்தான்~.




 பதிவு செய்தவர்: gujilipa
பதிவு செய்தது: 11 Dec 2010 3:23 pm
மூஞ்சிக்கி ரோஸ் பவுடர் போடாமா ஒரு சீன்ல நடிசிருக்கிராராம் அதை பாது செத்துட்டானோ என்னவோ




 பதிவு செய்தவர்: நண்பன்டா
பதிவு செய்தது: 11 Dec 2010 4:36 pm
ரோஸ் பவுடர் போட்டாலும் சரி போடட்டியும் சரி அவனை பார்த்தாலே மரணம் வரும்




 பதிவு செய்தவர்: கிரிக்கெட்
பதிவு செய்தது: 11 Dec 2010 12:13 pm
சலீமின் உடல் தகனம் செய்யப்பட்டதா? அடக்கம் செய்யப்பட்டதா?
பதிவு செய்தவர்: வெட்டியான்
பதிவு செய்தது: 11 Dec 2010 12:14 pm
ஏன் பண்ணலைனா நீ பண்ண போறியா?





தியேட்டர் கிடைக்கலே... ரிலீஸ் பண்ண நான் பட்டபாடு....! - குமுறும் 'கேப்டன்'

பதிவு செய்தவர்: பக்கிரி
பதிவு செய்தது: 13 Dec 2010 5:17 pm
இந்த படத்த தீவிரவாதி கசபுக்கு போட்டு காண்பிச்சிருக்காங்க !படத்த பார்த்துட்டு என்னை தூக்குல போடுருங்க ,தூக்குல போடுருங்க ன்னு கதறி அழுதிருக்கான் !




 பதிவு செய்தவர்: விஜயகாந்த்
பதிவு செய்தது: 13 Dec 2010 10:48 am
கருணாநிதி கொடுமைய சகிஜிகிறீங்க என்னோட படத்தின் கொடுமைய ஏ சகிஜிக்க மாட்டேங்கிறீங்க




பதிவு செய்தவர்: வெறுத்தகிரி
பதிவு செய்தது: 13 Dec 2010 10:44 am
நீ பட்ட கஷ்டத்த சொல்லிட்ட இனி இந்த படத்த பாக்கபோற மக்கள் கஷ்டத்த யார்கிட்ட சொல்றது...கொடுமைடா சாமி குடிகார மாமிச மல அரசியல் பேசுது.




பதிவு செய்தவர்: மனிதன்
பதிவு செய்தது: 13 Dec 2010 10:44 am
ஏன்டா நீ திருந்த மாட்டியாடா பொறம்போக்கு தியேட்டர்ல எத்தனை பேர் இருக்காங்கனு எண்ணிட்டு வந்து பேசுடா




பதிவு செய்தவர்: கருத்து கந்தசாமி
பதிவு செய்தது: 13 Dec 2010 10:41 am
இந்த படம் பார்த்து முடிக்கிறதுக்குள்ள தியேட்டர்ல நாங்க பட்ட பாடு ..........செம ரம்பம் கேப்டன்
பதிவு செய்தவர்: நொந்த சாமி
பதிவு செய்தது: 13 Dec 2010 10:50 am
அதனால கந்த சாமி இனி நொந்த சாமி என்றே அழைக்கப் படுவார்





நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் அவர்கள் டெரராக விமர்சனம் எழுத சொன்னார், நான் சீரியசாக விமர்சனம் எழுத முயற்சி செய்ததால், அவருக்காக ஒரு டெரர் வீடியோவை சமர்பிக்கிறேன்.


                         இந்த வீடியோவை பார்க்க ஸ்பீக்கர் தேவையில்லை

மொத்தத்தில் விருதகிரி - பாதி வேகாத வறுத்த கரி, இந்த பதிவிற்கு ஓட்டு போடாதவர்களுக்கு விருதகிரி ஒரிஜினல் சி.டி அல்லது தேமுதிக உறுப்பினர் அட்டை இலவசமாக வழங்கப்படும், தாங்களுக்கு எது தேவையோ அதை தாங்களே தேர்வு செய்து கொள்ளவும்.