Saturday, January 29, 2011

ஆல் இன் ஆல் அழகுராஜா - பரிகார செம்மல் ...




ஓம் காமதேவாய அம் அம் கிருஷ்ணாலயா உம் உம் கோபி லோல மம் மம் மாதவப்பிரியா சம் சம் சிவானந்த ரூபா வம் வம் வாசுதேவா என்னைக் கண்ட .........................  வாயடக்கி, கை மடக்கி, கால் மடக்கி எனக்கு வசமாக ஹூ ஹா ....
என்ன பார்க்குறீங்க ஏதோ மந்திரவாதி ஆகிட்டேனான்னா அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ஒரு எண்ணெய் இருக்குதுங்களாம் அத ரெண்டு புருவத்திலும் தடவி விட்டுட்டு இந்த மந்திரம் சொன்னீங்கன்னா உங்களுக்கு தேவையான ஆள் அது ஆணோ பொண்ணோ நீங்க வசியம் பண்ணிரலாமாம், இது மட்டும் இல்லைங்க இது போக வசிய அஞ்சனம், வசிய எண்ணெய்னு நிறைய இருக்குது.

அவங்க கிட்ட இருக்குறதுலயே சூப்பர் மேட்டர் ஒன்னு இருக்குது, அதுதான் சக்கரை, சக்கரைன்னா சாதாரணமான சக்கரைன்னு நினைச்சுராதீங்க, அது பண்ர வேலைய பார்த்தீங்கன்னா அசந்துருவீங்க, உங்க வீட்டுல பொண்டாட்டி கிட்ட டெய்லி அடிவாங்க முடியலியா, இல்லை உங்க புருசன போட்டு பிரிச்சு எடுக்கனுமா ஒன்னும் பிரச்ச்னை இல்லை, எப்ப உங்களுக்கு பிரச்சனை வருதோ அப்ப இந்த சக்கரையை கொஞ்சம் சாப்பிட்டீங்கன்னா போதும், சும்மா விஜயகாந்து கணக்கா காத்துலயே பறந்து பறந்து அடிக்கலாம், விலை ஒன்னும் பெரிசா இல்லைங்க வெறும் 1000 மட்டுமே.

அப்புறம் உங்களுக்கு மாமனார், மாமியார், நாத்தனார் இப்படி யாராவது எதிரி இருக்காங்களா, ஒன்னும் பிரச்சனை இல்லை கொஞ்சூண்டு இந்த சக்கரை போட்டு காபி போட்டு கொடுத்தீங்கன்னா போதும் முடிஞ்சது, அட ஆள் இல்லைங்க, மேட்டர் முடிஞ்சது அவங்க டம்மி பீஸ் ஆகிருவாங்க, இதோட விலையும் ஆயிரம்தான்

உங்களுக்கு எது மேலயாவது விருப்பம் அதிகமா இருந்து கிடைக்காம போயிருச்சா, அது வீடு, நிலம், புருசன், பொண்டாட்டி, காதல், கல்யாணம், கத்திரிக்காய், அட எதுவா இருந்தா என்னங்க அதுக்கும் இருக்கு ஒரு சக்கரை இருக்கு, இதுவும் சேம் ரேட்தான்.

அடுத்த சக்கரை வசூல் சக்கரை, வசூல பத்தி உங்களுக்கு சொல்லவே வேணாம், வட்டிக்கு விடுறவங்களுக்கு ரொம்ப யூஸ் ஆகும், பேங்க் காரங்க வேணாலும் மொத்தமா மூட்டை கணக்கா ஆர்டர் கொடுக்கலாம் டிஸ்கவுண்ட் பண்ணாலும் பண்ணுவாங்க, விலை அதுவேதான் ஒன்லி தவுசண்ட் ரூப்பீஸ்

நெக்ஸ்ட் திருமணதடை நீக்கும் சக்கரை, உங்களுக்கு யாருக்காவது கல்யாணம் ஆகலேன்னு பிரச்ச்னை இருக்கா, நோ பிராப்ளம் இருக்கவே இருக்கு சக்கரை டெய்லியும் இரண்டு வேளை கொஞ்சம் சாப்பிடுங்க, நீங்க மட்டும் சாப்பிட்டா போதாதுங்க, உங்க அப்ப அம்மாவும் சாப்பிடனும், அது மட்டும் இல்லை பொண்ணு பார்க்க வர வீட்டுக்காரங்களுக்கு காப்பி கொடுப்பீங்கல்ல அதுலயும் கலந்து கொடுங்க அப்புறம் பாருங்க வெளங்கிரும், ச்சீ கல்யாணம் நல்ல படியா விளங்கும்னு சொல்ல வந்தேங்க, விலை எது எடுத்தாலும் 1000 மட்டுமே

அடுத்து வரது முக்கியமான சக்கரை வியாதி நீக்கும் சக்கரை, உங்களுக்கு வேண்டியவங்க யாராவது ஆஸ்பத்திரியில சீரியசா இருக்காங்களா, அவங்க குணமாகனும்னு வேண்டி நீங்க ரெண்டு வேளை சாப்பிட்டீங்கன்னா போதும் உடனே குணமாகிடுவாங்க, விலையும் அதேதான்

யப்பா சொன்னா சொல்லிட்டே போக வேண்டியதுதான் அதுனால மிச்சம் இருக்குற சக்கரைகளை பத்தி சுருக்கமா சொல்லிடுறேன்,
உங்களுக்கு வேலை கிடைக்கலையா அதுக்கு இருக்கு வேலை உத்யோகம் கிடைக்கும் சக்கரை
படிப்பு வரலியா டோண்ட் வொர்ரி அதுக்கு இருக்கு கல்வியில் உயர்நிலைக்கான சக்கரை
நீங்க கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலியா அதுக்கு சாப்பிடுங்க கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் சக்கரை, இதுல ரெண்டு வகையான சக்கரை இருக்கு ஒன்னு சாதா இன்னொன்னு ஸ்பெசல்
உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது காணாம போயிட்டாங்களா அதுக்கு சாப்பிடுங்க காணாமல் போனவர்கள் திரும்பி வரும் சக்கரை
கல்யாணம் ஆகியும் குழந்தை பொறக்கலியா அதுக்கும் இருக்கு குழந்தை பாக்கிய சக்கரை
இன்னும் இருக்கு விற்காத பொருள் விற்கும் சக்கரை, செல்வாக்கு சக்கரை, செய்வினை தீர்க்கும் சக்கரை, இந்த சக்கரை எது வாங்கினாலும் விலை ஆயிரம் ரூபாய் மட்டுமே,

இது எதுவும் காமெடி இல்லைங்க, முழுக்க முழுக்க உண்மை தயவுசெஞ்சு சந்தேகப்படாதீங்க, அப்படி சந்தேகப்பட்டீங்கன்னா அதுக்கும் இருக்கு சந்தேகம் நிவர்த்தி செய்யும் சக்கரை, மேற்கண்ட அனைத்து சக்கரைகளையும் கண்டுபுடித்து மக்களுக்காக சேவை செய்பவர் பரிகார செம்மல் சித்தர் ஞானகுரு அவர்கள், மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தினை பார்க்கவும்.

(படத்தினை கிளிக்கி பெரிதாக பார்க்க்வும்)
நன்றி - வாராந்தரி ராணி

எனவே நண்பர்களே இந்த அற்புதமான விளம்பரத்தினை ராணி வார இதழில் பார்த்தேன், பாவம் எத்த்னை அற்புதமான பொருட்களை விற்பனை செய்பவர் காசு கொடுத்து வார இதழில் விளம்பரம் செய்திருக்கிறார், எனவே அவரின் புகழை இலவசமாக பரப்புவதற்காக நான் என் தளத்தில் வெளியிட்டுள்ளேன், இவரை மற்ற வைத்தியர்களை போல லாட்ஜ் வைத்தியர் என்று நினைத்து விடாதீர்கள், சார் மேன்சனில் குடியிருக்கிறார் மறந்து விடாதீர்கள், ஆகவே நண்பர்களே முந்துங்கள் உங்களுக்கு தேவையான சக்கரை வாங்கி அருந்தி பயனடையுங்கள்.

பொது நலன் கருதி வெளியிடுவது நானேதான் ....... 

நன்றி
அன்புடன் 
இரவுவானம்

   

Thursday, January 27, 2011

ஊர தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் ...

நான் பிறந்து வளர்ந்தது இப்ப இருக்குறது எல்லாமே பல்லடம்னு சொல்ற ஊருதான், அதாங்க அமைதிபடை படத்துல சத்தியராஜ் தேர்தல்ல போட்டி போடுவாறே அதே தொகுதிதாங்க, அப்படி சொன்னாதான நிறைய பேருக்கு தெரியுது, பல்லடம் அப்படின்னா ஒரே ஊரு கிடையாதுங்க, பாளையம்கற பேரு முடியர மாதிரி ஒரு இருபது, முப்பது ஊரு சேர்ந்ததுதான் பல்லடம், ஒரு காலத்துல திருப்பூரே எங்க ஊர் கூடதான் சேர்ந்து இருந்ததுனா பார்த்துக்கோங்களேன், ரொம்ப வருசங்களுக்கு முன்னாடி எல்லாம் எங்க ஊருல பாதியளவு விவசாய பூமியா இருந்தது, ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவங்க முழுக்க விவசாயம் பண்ணிகிட்டு இருந்தாங்க, அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவங்க விவசாய வேலை பார்க்க பயன்பட்டுகிட்டு இருந்தாங்க, அப்ப எல்லாம் பொங்கல் சீசன் டைம்ல எங்க ஊரு முழுக்க சோளம், கம்பு, மக்காச்சோளம், தக்காளி, வெங்காயம் இப்படி பல தரத்துலயும் வெளஞ்சுகிட்டு இருந்த காலமது, விவசாய வேலைக்கும் சல்லிசா ஆளுங்க கிடைப்பாங்க, அத விட்டா நெசவு தொழிலும் அதிகமா நடக்கும்,  40 வயசுக்கு மேல இருக்குற ஆளுங்கெல்லாம் விவசாயமும் அத சார்ந்து இருக்குற தொழிலும் பண்ணுவாங்க, அதுக்கு கீழ இருக்குறவங்க எல்லாம் நெசவு, தறி, கோழிப்பண்ணைன்னு பொழப்ப ஓட்டிகிட்டு இருப்பாங்க, இப்ப காலம் மாறி சுல்சர் தறி அளவுக்கு வந்துருச்சி,

 இப்படி நல்லாதான் போயிட்டு இருந்த காலத்துல பருவ மழை பொய்க்க ஆரம்பிச்சது, பொதுவா சீசன்ல மழை பெய்ஞ்சாதான் டிராக்டர் விட்டு உழவு ஓட்டவே ஆரம்பிப்பாங்க, அப்புறம் எஞ்சி தேவைப்படுற தண்ணிக்கு கிணத்து தண்ணிய யூஸ் பண்ணிக்கலாம், இப்படி மழை பொய்ச்சதால, இருக்குற கிணத்து தண்ணிய வச்சு கொஞ்ச நாளைக்கு விவசாயத்த ஓட்டிக்கிட்டு இருந்தாங்க, அப்புறம் தண்ணி பஞ்சம் கடுமையாகவும் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய பூமி வறண்டு போக ஆரம்பிச்சது, அப்ப அதையே நம்பிகிட்டு வாழ்ந்துட்டு இருந்த ஜனங்க பொழைக்க என்ன வழி?
அந்த சமயத்துலதான் எங்க ஊருல இருந்து 15 கிலோமீட்டர் தொலைவுல இருந்த திருப்பூர் வழிகாட்டுச்சு, அப்ப திருப்பூர் வேகமா வளர்ந்துகிட்டு இருந்த காலமது, வயசானவங்கள தவிர்த்து மீதி இருக்குறவங்க கொஞ்ச பேரு திருப்பூருக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, ஒரு நாள் முழுக்க வயக்காட்டுல உடம்பு வலிக்க வேளை செஞ்சா என்ன கூலி கிடைக்குமோ அதே கூலி திருப்பூர் பனியன் கம்பெனில 8 மணி நேரம் உட்கார்ந்து பனியன் பீசுகளை அடுக்கி கட்டி வச்சா கிடைச்சது, அதிக நேரம் வேலை செஞ்சா இன்னும் அதிகமா சம்பாதிக்கலாம், அதனால எங்க ஊருல இருந்து நிறைய பேரு திருப்பூர்க்கு வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, அப்ப நிறைய கிராமங்களில சரியான பஸ் வசதி கிடையாது, டைம்முக்கு வர பஸ்ஸும் சில நாட்களில வராது, சில கிராமங்களுக்கு பஸ் வசதியே கிடையாது, அதனால பஸ் வசதி இருக்குற கொஞ்சம் கிராம மக்கள் மட்டுமே வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, மிச்ச கிராமத்துல வாழ்ந்துகிட்டு இருந்த மக்கள் லாரிகள்ள மூட்டை தூக்கற வேலைக்கும், இன்ன பிற வேலைக்கும் போய் குடும்பம் நடத்தி சிரமப்பட்டுகிட்டு இருந்தாங்க.

இப்படி போய்கிட்டு இருந்த காலத்துலதான் அரசாங்கம் மினிபஸ் அப்படின்னு ஒரு திட்டத்த ஆரம்பிச்சாங்க, சும்மா சொல்ல கூடாது அந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு, ஒவ்வொரு கிராமத்தோட இண்டு இடுக்குலயும், சந்து பொந்துகள்ளயும் புகுந்து புறப்பட்டுச்சு மினிபஸ், ஒவ்வொருத்தங்க வீட்டு வாசல்லயே கொண்டு போய் இறக்கி விட்டுச்சு மினிபஸ், இதுக்காகவே காத்துகிட்டு இருந்த மாதிரி 10 வயசு பசங்க மொதக்கொண்டு வேலை செய்ய திருப்பூருக்கு படை எடுக்க ஆரம்பிச்சாங்க, இங்க ஒரு பழக்கம் இருக்குங்க, ஸ்கூல் பசங்களுக்கு பள்ளிக்கூடம் லீவு விட்டா போதும் நேரா பனியன் கம்பெனில கொண்டு போய் விட்டுருவாங்க, ஸ்கூல் லீவு முடியற வரை வேலை செஞ்சா கொஞ்சம் பணம் கிடைக்கும், அது புஸ்தகம் வாங்க உதவும்னு, ஆனா பயபுள்ளகள பார்த்தீங்கன்னா லீவு முடிஞ்சு பாதி பேரு ஸ்கூலுக்கு போக மாட்டானுக, அப்படியே போனாலும் வாத்தியார் சொல்லி கொடுக்கற பாடம் புரியலைன்னா கவலையே படாம வேலைக்கு போக ஆரம்பிச்சிருவானுங்க,

சரி மேட்டருக்கு வரேன், இந்த மினிபஸ் வந்தப்புறம் இன்னும் கொஞ்சம் பேரு அதிகமா வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, இப்படி எத்தனை பேரு வந்தாலும் திருப்பூர் எப்படி தாங்குதுன்னு கேட்குறீங்களா? அங்கதான் இருக்குது சூட்சமம், நம்ம பசங்க முதல்ல அடுக்கி கட்டத்தான் போவாங்க, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வேலை பழகி டெய்லராகிடுவாங்க, மத்த வேலைக்கு போனவங்க, கட்டிங் மாஸ்டர், அயனிங் மாஸ்டர், பேட்டர்ன் மாஸ்டர்னு ஆகிருவாங்க, மாஸ்டர் ஆனா அப்புறம் ஸ்கூல் பசங்க மாதிரி கைமடிக்கறது, அடுக்கிகட்டறதுன்னு செய்ய முடியுமா, கொம்பு முளைக்கறதுன்னு கேள்வி பட்டு இருக்கீங்கலா? இங்க வந்தா நேர்லயே பார்க்கலாம், திருப்பூர்ல டெய்லர் உத்தியோகம்னா கலெக்டர் உத்தியோகம் மாதிரி, அந்த அளவு அலம்பல் பண்ணுவாங்க, அது எல்லாத்தையும் முதலாளிக ஏன் பொறுத்துக்குறாங்கன்னா, அவங்க தைச்சு கொடுத்தாதான் டைம்முக்கு  பனியன் துணியெல்லாம் பொட்டி போட்டு அனுப்ப முடியும், அதனால அவங்களுக்கு வேற வழி இல்லை, அதனால ஹெல்பர் வேலைக்கு புதுசா எத்தனை பேரு வந்தாலும் சேர்த்துகிட்டுதான் ஆகனும்,

இப்படி கொஞ்சம் கொஞ்சமா விவசாய வேலை பார்த்தவங்க எல்லாம் திருப்பூர் பக்கம் ஒதுங்கிட்டதால, பாரம்பரியமா விவசாயம் பார்த்தவங்க பசங்களும் திருப்பூர் பக்கமா ஒதுங்க வேண்டியது ஆகிபோச்சு, மிச்சம் மீதி இருக்குறவங்க மாட்ட வச்சு பால கறந்து பொழைக்க வேண்டியதாச்சு, இப்படியே போனா காசுக்கு என்ன வழி? அந்த டைம்ல வந்தது பாருங்க ஒரு புது புரட்சி ரியல் எஸ்டேட் பிசினஸ் அப்படின்னு, வந்த வேகத்துல செம பிக்கப், மாததவணை திட்டத்தால நிறைய பேரு நிலம் வாங்க ஆரம்பிச்சாங்க, காசுக்குதான் திருப்பூர் இருக்கே, வாரம் ஆனா சம்பளம், விவசாய நிலங்கள வச்சிருந்தவங்க காசுக்காக கொஞ்சம் கொஞ்சமா தன்னோட நிலங்களை ரியல் எஸ்டேட்டுக்கு விக்க ஆரம்பிச்சாங்க, இதனால எங்க ஊரு விவசாய நிலம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சுருங்கி இப்ப 80% நிலம் காணாம போச்சு, மீதி இருபது சதவிகித நிலத்துலதான் கொஞ்சமே கொஞ்சம் விவசாயம் நடக்குது, ஆனா அதுல வேலை செய்யவும் ஆள் கிடைக்குறது இல்லை, இப்ப திருப்பூர்ல இருக்குற பெரிய பெரிய நிறுவனங்கள் கம்பெனிக்கு பஸ்சு, டிராக்ஸ், ஜீப்பு, ஆம்னி ஏன் ஏசி பஸ்ஸு கூட வாங்கி விட்டுருக்காங்க, அந்த வண்டிக எல்லாம் நாய் புடிக்கற வண்டி மாதிரி காலையில எல்லார் வீட்டு முன்னாடியும் நின்னு ஆள் புடிச்சிட்டு போயிட்டு இருக்காங்க, முன்ன ஏக்கரா கணக்கா விவசாயம் பார்த்தவங்க இப்ப செண்டு கணக்கா விவசாயம் பாக்குறாங்க.

இப்ப வேலைக்கு ஆள் கிடைக்குதா? கூலி எவ்வளவு கேட்குறாங்கன்னு எனக்கு தெரிஞ்ச ஒரு தோட்டத்து நண்பருகிட்ட கேட்டேன், அதுக்கு அவரு சலிச்சிகிட்டே சொன்ன பதில், இப்ப யாருங்க வேலைக்கு வராங்க, வரவங்க எல்லாருமே 50 வயசு தாண்டுனவங்கதான், காலையில 7 மணிக்கு வேலைக்கு வராங்க, வேலை ஆரம்பிக்கறதுக்குள்ள 7.30 மணிக்கு டீ வாங்கி தரணும், டீ குடிச்சிகிட்டே 8 மணி வரைக்கும் ஓட்டிடுராங்க, அப்புறம் 8 மணிக்கு வேலை ஆரம்பிச்சா 9 மணி வரைக்கும் வேலை செய்வாங்க, 9 மணிக்கு காலை டிபன் அது 9.45 லிருந்து 10 மணி வரைக்கும் இழுப்பாங்க, அப்புறம் பத்து மணிக்கு வேலை ஆரம்பிச்சா 10.30 க்கு மறுபடியும் டீ டைம், டீ வாங்கி தரணும், டீ குடிச்சு முடிக்க 11 மணி ஆகும், 11 மணிக்கு மறுபடியும் வேலை ஆரம்பிச்சா 12.30 மணிக்கு சாப்பாட்டு நேரம், சாப்பிட்டுட்டு படுத்தாங்கன்னா மறுபடியும் 3 மணிக்குதான் வருவாங்க, அப்புறம் 3.30 க்கு டீடைம், அது முடிய 4 மணி ஆகிடும், மறுபடியும் 4 மணிக்கு வேலை ஆரம்பிச்சா 5 மணிக்கு கிளம்பிடுவாங்க, உடனே கூலி 350 ல இருந்து 400 வரைக்கும் கொடுக்கனும், விக்கிற விலைவாசியில டிராக்டர் வெச்சு உழுது, தண்ணி பாய்ச்சி, களை எடுத்து, உரம் போட்டு இவ்வளவு கூலி கொடுத்து விவசாயம் பாக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடுது தம்பி, இப்ப சோளம் போட்டு இருக்கேன், இதோட நிறுத்திக்கலாம்னு இருக்கேன், அடுத்த வருசம் இத கூட செய்யுறதா ஐடியா இல்லைன்னு சொன்னாரு.

இப்படி கொஞ்சம் நஞ்சமா விவசாயம் பார்த்துகிட்டு இருக்குற 50 வயசு தாண்டுனவங்களுக்கும் இப்ப வந்திருக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், வேலையே செய்ய வேண்டியதில்லை, சும்மா போய் கையெழுத்து போட்டா போதும், பணம் கொடுக்கறவரு கமிசன் 30 ரூபா போக 70 ருபா கைக்கு வந்திடும், கலைஞர் வேற 1 ரூபா அரிசி கொடுக்கறாரு, கூடவே கலர் டிவியும், அப்புறம் என்ன அரிசிய வாங்கி போட்டு சாப்பிட்டுட்டு களைப்பு தீர டாஸ்மாக்குல ஒரு கட்டிங் வாங்கி போட்டுட்டு இலவச டிவியில மானாட மயிலாட பார்த்தா போதாதா, விவசாயமாவது வெங்காயமாவது, ஏற்கனவே டிவி இருக்குறவங்க இலவச டிவிய வாங்கி 500 க்கும் ஆயிரத்துக்கும் வித்து சரக்கடிச்சிட்டு இருக்காங்க, ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்னு வேற சி.எம் சொல்லி இருக்காரு, அடுத்து இலவசமா வரப்போவது பம்பு செட்டு, டிவிக்கே 500 கிடைச்சா பம்பு செட்டுக்கு ஆயிரமாவது கிடைக்காதா என்ன? என்னெமோ போடா மாதவா....

இதை எல்லாம் பார்குறப்போ யாரோ எழுதின கவிதைதான் ஞாபகத்துக்கு வருது..

நெல்லு போட்டேன்
சோளம் போட்டேன்
அரிசி போட்டேன்
ஒன்னுமே
லாபம் தரலை
’’பிளாட்டு’’ போட்டேன்
அமோக லாபம்...!

[நண்பர்களே ஓட்டினை விட பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களையே நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், அதனால் ஒட்டளிக்க செலவிடும் நேரத்தில் பின்னூட்டம் இட்டு என்னுடைய நிறை குறைகளை சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறேன், நன்றி...]
அன்புடன்
இரவு வானம்
      

Monday, January 24, 2011

கமர்சியல் பக்கங்கள் - 24/01/2011


இன்று ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம் ...

பணக்கார பெண்களோ, ஏழை பெண்களோ, அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பாக அமைய கல்வி அறிவு முக்கியம், கல்வி அறிவு உள்ள பெண்களால் எத்தகைய சூழ்நிலையிலும் சமாளித்து வாழ முடியும், காசு பணம் வரும் போகும், ஆனால் கல்வி வரும் போகாது, அத்தகைய கல்வியானது இப்பொழுது உள்ள சூழ்நிலைகளில் முழுக்க முழுக்க வியாபாரமாய் மாறி விட்ட பொழுதிலும் மிச்சம் மீதி உள்ள ஏழைக் குழந்தைகள் நம்பி இருப்பது அரசாங்க பள்ளிகளையும், அரசாங்க உதவி பெறும் பள்ளி கல்லூரிகளையும்தான், இந்த நாளில் கல்வி அறிவினை ஊட்டிக் கொண்டிருக்கும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் இரவு வானத்தின் வாழ்த்துக்கள், குறிப்பாக மேட்டுப்பாளையம் நகரவை பள்ளி மாணவிகளுக்கும், பாரத் பாரதி அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு தெரிந்தவகையில் எந்த அரசாங்க பள்ளிகளிலும் சரியான வகையில் குறைந்தபட்சம் நல்ல முறையில் கூட கழிப்பிட வசதியினை செய்து தருவதில்லை, குறிப்பாக பெண்கள் பள்ளியில், அரசாங்க நிதியை பயன்படுத்தி பள்ளிகளில் கட்டிடம் கட்டிவிட்டு தன்னுடைய பெயரை போட்டுக் கொள்ளும் எம்,எல்,ஏக்கள் பிறகு பயன்பாட்டுக்கு வரும் பள்ளிகட்டிடங்களின் பராமரிப்பு பணியினை மேற்கொள்வதில்லை, அதையாவது தனியார் வசம் ஒப்படைத்து சிறிதளவாவது பராமரிப்பு பணியினை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன், மீண்டும் ஒருமுறை பெண் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

சினிமா...

இன்று ஆடுகளம் திரையிட்டுள்ள ஒரு தியேட்டர் வழியாக வரும் வாய்ப்பு கிடைத்தது, தியேட்டர் முன்னாடி பெரிய பேனர் ஒன்னு கட்டி இருந்தாங்க, ஒரு பத்து சில்வண்டு பசங்க போட்டோ போட்டு ஆடுகளம் வெற்றியடைய வாழ்த்துக்கள்னு போட்டு இப்படிக்கு கட்டுசேவல் குரூப்ஸ் அப்படின்னு போட்டு இருந்தாங்க, பாருடா பால் குடிக்கற வயசில ப்ளெக்ஸ் போட்டு வச்சிருக்கானுங்கன்னு மனசில நினைச்சுகிட்டேன், நல்ல வேளை தனுஷ் சேவல் சண்டை பத்தி படம் நடிச்சிருக்காரு, மாட்டு வியாபாரியா நடிச்சிருந்தா மாட்டுபசங்க குரூப்புன்னு வெச்சாலும் வெச்சிருப்பானுங்க, ஒருத்தனுக்கு கூட மீசை இல்லை, பத்து வயசிலயே பஞ்சு டயலாக்கு, வெளங்கிரும்......

இயக்குனர் பாலா விஷால், ஆரியாவ வச்சு அவன் இவன்னு படம் எடுத்துகிட்டு இருக்காரு, அதுல விஷால் ஒரு அரவாணியா நடிச்சுகிட்டு இருக்காரு, அந்த படம் வரதுக்கும், அந்த ஸ்டில்லு வரதுக்கும் ரொம்ப நாளாகும், அதுக்கு முன்னாடியே இங்க நான் ரிலீஸ் பண்றேன், பார்த்துக்கோங்க...





ஒரு காதல் கவிதை
நீ ஒருமுறை பார்த்தாய்
என் நெஞ்சில் முள் குத்தியது
எங்கே இன்னொரு முறை பார்
ஏனென்றால்
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமாம்...

ஒரு ஜோக்
ஒரு பையன் சூசைட் பண்ண போனான்
ஆனால் அவன் சாகல
ஏன்னா அவன் காதலிச்ச பொண்ணு
அப்பத்தான் அந்த வார்த்தைய சொன்னா
அந்த வார்த்தை...
எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு....

ஒரு பிரண்ட்சிப் கவிதை
நாம் பழகிய நாட்கள் மேகம் போல
கலைந்து சென்றாலும்
உன் நினைவுகள் என்றும்
வானத்தை போல நிலைத்து இருக்கும்

ஒரு தத்துவம்
பொய்யான உறவுகளுக்கு முன்னால் புன்னகையும் ஒரு பொய்தான்
உண்மையான உறவுகளுக்கு முன்னால் கோபம் கூட இனிமையான புன்னகைதான்...

அரசியல்...

வரும் தேர்தலில் கண்டிப்பாக தி.மு.கா கட்சிதான் ஜெயிக்கும்
இலவசமாய் கிடைக்க போவது
ஏழைகள் பயன் பெற
செல்போன்
டிவிடி பிளேயர்
வாஷிங் மெசின்
ஏர் கூலர்
எல்சிடி டிவி
ஆனால்
பெட்ரோல் லிட்டருக்கு 180 ரூபாய்
டீசல் லிட்டருக்கு 150 ரூபாய்
பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 18 ரூபாய்
காய்கறிகள் ரூபாய் 70 கிராம் ஒன்றுக்கு
மின்சார வெட்டு ஒரு நாளைக்கு 12 மணி நேரம்
2013 ல் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் இந்தியாவுக்கு இழப்பு 5 லட்சம் கோடிகள் இருக்கும்
அதனால என்ன கண்டிப்பா ஓட்டு போட்டுடுங்க நமக்கு ஓசி முக்கியம்ல...


எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உதவி செய்த என்னுடைய நண்பர்களுக்கும், விஷால் படத்தினை இயக்குனர் பாலாவுக்கு தெரியாமலே படம் எடுத்து தந்து உதவிய என்னுடைய நண்பர் தளபதி சுதாகர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், நான் ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதால் மீண்டும் இரண்டு நாளைக்கு என்னுடைய கடைக்கு லீவு, எனவே இரண்டு நாளைக்கு என்னுடைய தொல்லை உங்களுக்கு இல்லை...

Republic Day scraps and greetings for orkut
GoodLightscraps.com

நண்பர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
நன்றி, அன்புடன் - நைட் ஸ்கை...



Saturday, January 22, 2011

காவலன் - சோதனை ஓட்டம்


என்னய்யா விஜய் படம் இது, ஒரு ஓப்பனிங் சாங் இல்லை, குத்துடான்ஸ் இல்லை, பஞ்ச் டயலாக் இல்லை, பொறி பறக்கும் சண்டைகாட்சிகள் இல்லை, ஓவர் பில்ட் அப் இல்லை, இப்படி எதுவுமே இல்லாம ஒரு விஜய் படம், ரொம்பவே அடிபட்டுடாரு போல, மம்மிய பார்த்த எம் எல் ஏ கணக்கா ரொம்பவே இறங்கி வந்து நடிச்சிருக்காரு.

படத்தோட கதைதான் எல்லோருக்கும் தெரியுமே, ராஜ்கிரணுக்கு பாடிகார்டா வேலைக்கு வந்து அசினுக்கு பாடி கார்டா ஆகுறாரு விஜய், அவரு பின்னாடியே வரத விரும்பாத அசினு வழக்கம் போல ஆம்பிளைகளை கவுக்க பொண்ணுங்க பண்ற வேலைய பண்ணுராங்க, மொபைல்ல கடலை போட்டே விஜயை கவுக்கறாங்க, அதை தலைவரும் நம்பிடுராரு, இப்படி முரளி மாதிரியே விஜயும் பார்க்காத காதலிய நினைச்சு உருகுறாரு, படிக்க மாட்டேங்குறாரு, போற வர பொண்ணுங்களை பார்த்துட்டு ஒருவேளை இவ அவளா இருக்குமோ, அவ இவளா இருக்குமோன்னு தலைய பிச்சுகிட்டு இருக்காரு.

இவரு இப்படி அன்கண்டிசனா திரியறத பார்த்து அசினுக்கும் விஜய் மேல லவ்வு வந்துருது, ஆனா அசினுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆயிருச்சாம், அதுவும் இல்லாம ராஜ்கிரண் வேற தொடய தட்டிட்டு கிளம்பிருவாருன்னு பயம் வந்துருது, அதனால விஜய கழட்டி விட்டுடலாம்னு நினைக்கறாங்க, ஆனா பாருங்க படத்தோட கதை இந்தகால கதைன்னா கண்டிப்பா பொண்ணுங்க கழட்டி விட்டுடுவாங்க, இந்த கதை பழசுங்கறதால அசினால லவ்வ மறக்க முடிய மாட்டேங்குது, விஜயவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கறாங்க, இப்படி இவங்க பேசிட்டு இருக்குறத கேட்டுட்டு வேலைக்காரி பட்டாபட்டி ராஜ்கிரண்கிட்ட போட்டு கொடுத்துடராங்க, கண்ணு சிவக்க கிளம்புறாரு ராஜ்கிரண், முடிவு யாருமே எதிர்பாராத, எதிர் பார்க்க முடியாத அக்மார்க் மலையாள படம் கிளைமேக்ஸ்.

கடைசியா நான் பார்த்த படங்களிலேயே யூகிக்க முடியாத வித்தியாசமான கிளைமேக்ஸ் இந்த படத்துலதான், இப்படி தன்னோட இமேஜ் எல்லாத்தையும் விட்டுட்டு கதைக்காக ரொம்பவே இறங்கி வந்து நடிச்சிருக்கற விஜயை கண்டிப்பா பாராட்டனும், ரொம்பவே அடிபட்டுடாரு போல, நடிக்கத் தெரியாதுன்னு இனி விஜய் பத்தி சொல்ல முடியாது, காதல், ஏக்கம், வலி, துக்கம்னு கலவையான முக பாவனைகளை அனாயசமா முகத்துல கொண்டு வந்து இருக்காரு.

இடைவேளைக்கு அப்புறம்தான் படமே இருக்குறதால இடைவேளை வரைக்கும் படத்த கொண்டு போறதுக்காக வடிவேலுவ யூஸ் பண்ணி இருக்காங்க, ஜோக்கெல்லாம் பெரிசா ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லை, பாட்டும் சுமாராதான் இருக்கு, பட்டாம்பூச்சி பாட்டு ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப நாள் கழிச்சு ராஜ்கிரணோட பட்டாபட்டி தரிசனம் கிடைச்சது, நிறைய இடத்துல லாஜிக் மிஸ்ஸாகுது, நிச்சயம் பண்ணி இருக்குற அசினுக்கு மாப்பிள்ளை ஒருதடவை கூடவா போன் அடிக்க மாட்டாரு,  நான் முக்கியமா அசின பார்க்கத்தான் போனேன், அசினும் ரொம்ப டல்லா தெரியுறாங்க, 29 வயசு ஆனது உண்மைதான்னு முகமே காட்டி கொடுக்குது, மொத்தத்துல இப்போ வந்த படங்கள்ள குடும்பத்தோட பார்க்க கூடிய படம்தான், விஜய் இதே மாதிரி கதை இருக்குற படத்துல நடிச்சா மறுபடியும் பிக்கப் ஆகிக்கலாம்.

காவலன் விஜய் ரசிகர்களுக்கு அவ்வளவா பிடிக்காது, ஆனா மக்களுக்கு பிடிக்கும், விஜய் ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி படம் எடுத்தா கண்டிப்பா மக்களுக்கு பிடிக்காது, இந்த படம் ஓடுனாதான் அவருக்கும் நல்ல படத்துல நடிக்கனும்னு ஆர்வம் வரும், அதனாலயாவது இந்த படத்த ஓட வைங்கப்பா....

தியேட்டர் கட்டிங்ஸ்

இந்த படத்த டயமண்ட் தியேட்டர்ல பார்த்தேன், ஆரம்பமே சரியில்லை, 40 ரூபா டிக்கட்ட 60 ரூபாய்க்கு விக்குறாங்க, விளைவு தியேட்டர்ல மொத்தம் 38 பேர் மட்டுமே, டூ வீலர்க்கு 10 ரூபாய், பாத்ரூம் மகா கொடுமை, தண்ணி ஊத்தி கழுவறதே இல்லை போல, ஒரே கப்பு, குடிக்க தண்ணி கூட வைக்கலை, ஒரு கருப்பு நிற சிண்டெக்ஸ் டேங்குல டம்ளர் இல்லாம மக்கள் கையாலயே குடிச்சிட்டு இருக்குறாங்க, பால்கனில இருக்குற தண்ணி பக்கெட்டுல இருந்த டம்ளர் உள்ள பாதி பச்சை கலர்ல பாசானம் புடிச்சு இருக்கு, தியேட்டர்ல சவுண்டும் சரியா கேட்கலை, பராமரிப்பும் சரியில்லை, மொத்ததுல ஒருதடவை படம் பார்க்க வரவங்க மறுதடவை கண்டிப்பா வர பிரியப்பட மாட்டாங்க...
இதைவிட கொடுமை வீட்டுல பார்க்கிற டிவிலதான் விளம்பரம் போட்டு கொல்றாங்கன்னா தியேட்டர்லயும் அதே வேலையதான் பண்ணராங்க, வீட்டுலயாவது ரிமோட் இருக்கும், அங்க என்ன பண்றது, அதுவும் அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவதுன்னு கவருமெண்டு விளம்பரம் சுத்தமா அஞ்சு நிமிசம், முடியல....

Friday, January 21, 2011

நானும் என் லவ்வும் - 5



உன் மேல் கோபம்தான் அன்பே
உன்னைபற்றி மட்டுமே
நினைக்க வைத்து 
என்னை
சுயநலவாதியாய்
மாற்றிவிட்டாய் என்று ...





நண்பர்களே நான் இந்த கதையை எழுத ஆரம்பிக்கும் போது முழு கதையையும் சுருக்கமா எழுதிடலாம்னு நினைச்சேன், ஆனா எழுத எழுத அனுமார் வாலாட்டம் அது பாட்டுக்கு நீண்டுகிட்டே போகுது, அதனால இந்த பதிவு ஏறக்குறைய கிளைமேக்ஸ் மாதிரி, இதோட போதும்னு நினைச்சீங்கன்னா சொல்லுங்க நிறுத்திடறேன், மேற்கொண்டு என்ன நட்ந்ததுன்னு தெரிஞ்சுக்கனும்னா விருப்பப்பட்டீங்கன்னா சொல்லுங்க மேற்கொண்டு தொடருகிறேன், ஏன்னா உங்க பொறுமையை இதுக்கு மேல சோதிக்க எனக்கே பொறுமை இல்லை ... 

மூணு பேரும் கிளம்பினோம், நேரா வீட்டுக்கு போனேன்,
டேய் எங்கடா போற,
நில்லுடா வீட்டுக்கு போய் கை கால் மூஞ்சி எல்லாம் கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு போலாம்டா
டேய் ஏற்கனவே டைம் ஆயிருச்சி, இன்னும் இதெல்லாம் பண்ணிகிட்டு இருந்தா அவ போயிருவா, அப்படியே வா, நல்லாத்தான் இருக்கு
விட மாட்டான் போலருக்கே, எப்படியாவது லேட் பண்ணிடலாம்னு பார்த்தா, என்னை விட இவனுக்குதான் அவசரம் போல இருக்குது
அதெல்லாம் முடியாது, லவ் பண்றது நானு, இந்த அழுக்கு பனியன், வேட்டியோட எல்லாம் என்னால வரமுடியாது, வேணும்னா இன்னொரு நாள் மொட்டையனை கூட்டிட்டு போலாம்
ஏண்டா நீவேற இவ்வளவு தூரம் கிளம்பி வந்துட்டு ஆசை காட்டி அவன ஏமாத்தாத
அப்ப அஞ்சு நிமிசம் வெயிட் பண்ணுடான்னு சொல்லிட்டு அவசர அவசரமா சட்டை மாத்தினேன், அதகூட மாட்ட அவனுங்க விட மாட்டேங்கறாங்க, இருங்கடா இருங்கடான்னு சொல்ல சொல்ல ஏறக்குறைய என்னை தூக்கிட்டே போயிட்டானுங்க
டேய் பேர் அண்ட் லவ்லியாவது போட்டுக்கறேண்டா விடுங்கடான்னு கத்தினேன், அவனுங்க கேட்டாத்தான, அவசர அவசரமா சைக்கிள்ள உட்கார வெச்சு கிளம்புனானுங்க,

என் பிரண்டு சொன்னான், டேய் டைம் இப்பவே ரொம்ப ஆயிருச்சு, நான் முன்னாடி போய் பார்க்கிறேன், இன்னேரம் டியூசன் முடிஞ்சாலும் முடிஞ்சிருக்கும், நீங்க பின்னாடியே வாங்க, டியூசன் விட்டுருந்தாங்கன்னா முன்னாடியே வந்து சொல்றேன்னுட்டு போயிட்டான்
நானும் மொட்டையனும் அவனோட சைக்கிள்ள முடிஞ்ச அளவுக்கு வேகமா போயிட்டு இருந்தோம், அய்யர் வீதி தாண்டி திரும்புனா கடை வீதி வந்துரும், அதை தாண்டி போனாத்தான் டியூசன் செண்டர், நாங்க அய்யர் வீதி பாதி தூரம் போகறதுக்குள்ள என் பிரண்டு தலைதெறிக்க சைக்கிள் ஓட்டிட்டு எதிர வந்துகிட்டு இருந்தான், அவன பார்த்ததும் நாங்களும் சைக்கிள நிறுத்துனோம்.
ஏண்டா என்னாச்சு
டியூசன் முடிஞ்சிருச்சுடா, அவங்க கிளம்பிட்டாங்க, பாதி தூரம் வந்துட்டாங்க, இனி அங்கே போய் பேச முடியாது
அய்யா தப்பிச்சோம்டா சாமின்னு நினைச்சேன், அப்ப சரி விடுங்கடா இன்னொரு நாளைக்கு பார்க்கலாம்னேன்,
டேய் பாவம்டா மொட்டையன், இன்னொரு நாளைக்கு எப்படிடா வருவான், பேசாம இங்கயே வச்சு பேசிருடான்னான்,
இங்கயா முடியவே முடியாது, உங்களுக்கு வேற வேலை இல்லையா, இது அவங்க ஏரியா, யாராவது பார்த்தா பிரச்சனையாகிடும்டா
ஒன்னும் ஆகாதுடா, ஞாயித்து கிழமை மத்தியானம் யாருமே இருக்க மாட்டாங்க, நான் வேணா உன்கூட நிக்கிறேன், தைரியமா பேசுடா, பேசுடான்னு உசுப்பேத்தறானுங்க,

நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவே மாட்டேங்கறானுங்க, இங்க ஒன்னு சொல்லியாகனும். அய்யர் வீதி எண்டுல போஸ்ட் ஆபிஸ், அது பக்கத்துலேயே போலீஸ் ஸ்டேசன் இருக்குது, நாங்க நின்னுகிட்டு இருந்தது போஸ்ட் ஆபிஸ் பக்கத்துல,

சரி ஆனது ஆகட்டும்னு போஸ்ட் ஆபிஸ் முன்னாடி நின்னேன், என் பிரண்டு வெவரமா பத்தடி தள்ளி போஸ்ட் பாக்ஸ்கிட்ட நிக்கிறான், மொட்டையன் ரோட்டுக்கு ஆப்போசிட்ல ஒரு வீட்டு முன்னாடி சைக்கிள ரிப்பேர் பண்றமாதிரி நிக்கிறான், போலீஸ் ஸ்டேசன்ல இருக்கற ஏட்டு வேற என்னயே பார்க்கிற மாதிரி இருந்தது, ஆகா நல்லா மாட்டிகிட்டம்டா, சிக்குனம்னா ஈவ் டீசிங் கேசுல உட்கார வெச்சிடுவாங்களோ என்னமோன்னு மனசுல நினைச்சிகிட்டு இருந்தேன்.

முன்னயாவது என்ன பேசனும், எப்படி பேசனும்னு நைட்டு வீட்டுல உட்கார்ந்து விடிய விடிய டிரைனிங் எடுப்பேன், இப்ப திடீர்னு கூட்டிட்டு வந்துட்டானுங்க, என்ன பேசுறதுன்னு ஒன்னும் புரியல, ஏதோ ஒன்னு பேசனும், என்ன பேசலாம்னு நான் யோசிச்சிட்டு இருக்கும்போதே கரக்டா போலீஸ் ஸ்டேசன் திரும்பி அவளும், அவ பிரண்டும் அய்யர் வீதிக்குள்ள நுழைஞ்சாங்க, என் பிரண்டுக இரண்டு பேரும் சைகை மூலம் பேசிட்டு இருந்தானுங்க, டேய் அதுதான் அவன் ஆளுன்னு,

சரி ஆனது ஆச்சு பேசிரலாம்னு முடிவு பண்னினேன், இப்ப எனக்கு முன்ன மாதிரி பயம் இல்லை, அவகிட்ட பேசுனா கண்டிப்பா திருப்பி பேசுவா, சிரிச்சிட்டு போவான்னு ஹண்ட்ரட் பர்சண்ட் நம்பிக்கை இருந்தது மனசுக்குல்ல, அவ கொஞ்ச கொஞ்சமா நெருங்கி வர ஆரம்பிச்சா,

அவ பக்கத்துல வந்ததும், நானே அவங்ககிட்ட நெருங்கி போனேன், அவ மூஞ்சில சிரிப்பு மிஸ்சிங், அதவிட அவ என்ன கண்டுக்காத மாதிரி நேரா பார்த்துட்டு போனா, நான் இது இரண்டையும் கவனிக்க தவறுனேன், நேரா எதிர்ல போய் நின்னேன், அவங்களும் நின்னாங்க, என்ன பேசறதுன்னு தெரியல, அதனால சும்மானாச்சுக்கும் எதாவது பேசுவோம்னு,

எதுக்குங்க என்ன பார்த்து சிரிச்சீங்கன்னு கேட்டேன்,
அதுக்கு அவளும், நீங்க ஏன் என்னை பார்த்தீங்கன்னு கேட்டா, 
நான் சும்மாதான் பார்த்தேன்னு சொன்னேன்
நானும் சும்மாதான் சிரிச்சேன்னு சொன்னா
இது என்னடா கொடுமைன்னு நினைச்சுகிட்டே சரி எத்தனையோ பேர் இருக்கயில்ல என்னை மட்டும் பார்த்து ஏன் சிரிச்சீங்க, அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன்,
அதுக்கு அவ சொன்னா பாருங்க பதிலு, அத கேட்டு அடிக்கற காத்து அப்படியே நிக்குது, கடல் அலைகளும் அப்படியே நிக்குது, காத்துல ஆடுற மரங்களும் அப்படியே நிக்குது

அவ என்ன சொன்னான்னா ....

உன் வயசு என்ன? என் வயசு என்ன? நான் பிளஸ் 2 படிக்கிறேன், நீ பிளஸ் 1 படிக்கிற, நீ என் தம்பி மாதிரி ....

தொடர்ந்தாலும் தொடரும் ... 


ஒரு சின்ன கவிதை
அவள் சிரித்தாள்
நான் முறைத்தேன்
அவள் காதல் என்றால்
நான் பேரன்ஸ் என்றேன், இறுதியில்
’’நான் மணவறையில்’’
’’அவள் கல்லறையில்’’
கொய்யாலே எவ்வளவு நாள்தான் பசங்களே சாகுறது..
இனிமேல் பொண்ணுங்களும் சாகட்டும்
நமக்கு 1000 பிகர் மடியும் மச்சி ...


Wednesday, January 19, 2011

சிறுத்தை - புடிக்கல


அண்ணன் சிங்கம்னா தம்பி சிறுத்தையாதான இருக்கனும், அதுதான லாஜிக்கு, சும்மா சொல்லக்கூடாது கார்த்திக்குக்கு எங்கயோ மச்சம் இருக்குது, இல்லைன்னா தொடர்ந்து வெற்றிப்படமா கிடைக்குமா என்ன? படம் சும்மா பரபரன்னு பறக்குது, 

படத்தோட கதை என்னன்னா ஆந்திராவுல டகால்டி காட்டுற இரண்டு ரவுடி பசங்கள விஜயகாந்து மாதிரி நேர்மையான போலீசு ஆபிசரான கார்த்தி நம்பர் 1 போட்டு பிரிச்சு எடுக்குறாரு, ஆகா வந்துட்டாருய்யா நாயகன் கமலுன்னு மக்கள் தலையில தூக்கி வச்சு கொண்டாடுராங்க, சும்மா இருப்பாளா சுகுமாரின்னு அந்த ரவுடியோட தம்பி முதுகுல குத்தி கார்த்தி நம்பர் 1 அ கொன்னுடராரு, கொன்னுட்டு சும்மா இருப்பாரா, பார்த்தீங்களா உங்க நம்பிக்கை நாயகன இனிமேல் யாராவது என்னை எதிர்தீங்கன்னா அதே கதிதான்னு மிரட்டிட்டு போயிடராரு, ரவுடிகல்லாம்தான் மக்கு பசங்களாச்சே கொன்னவன் உண்மையிலேயே செத்தானா பொழச்சானான்னு கூட பார்க்க மாட்டாங்களே

அப்புறம் தமிழ், மலையாளம், கன்னடம், ஆந்திரா சினிமா வழக்கப்படி செத்துட்டாங்கன்னு நினைச்ச போலீஸ் ஆபிசரு உயிரோடதான் இருக்காரு, உடனே மத்த போலீசு ஆபிசருங்க எல்லாம் சென்னையில இருக்குற ஆஸ்பத்திரியில சேர்த்து பொழைக்க வச்சிடுராங்க, அவரு ஆஸ்பத்திரியில இருக்குறத பார்த்த ஒரு ஆந்திராக்காரன் போன் போட்டு ரவுடி பசங்ககிட்ட சொல்லிடுறான், உடனே கார்த்தி நம்பர் 1 அ கொல்ல கொல்டி குரூப் கிளம்பி வருது, 

இங்க சென்னையில கார்த்தி நம்பர் 2 ஒரு திருட்டு பய, அவரு பிரண்டு சந்தானம் என்கிற காட்டு பூச்சியோட ஜாலியா திருடிட்டு இருக்காரு, சும்மா சொல்லக்கூடாது பாண்டியராஜனுக்கு அப்புறம் அந்த திருட்டு முழி கார்த்திகிட்ட அப்படியே இருக்கு, திருடிட்டே இருந்தா என்னவாகும், அடுத்து லவ் வரணும்ல, அப்ப வராங்க தமன்னா, தமிழ்சினிமா இலக்கணப்படி திருட்டுபய, மொள்ளமாரி பய, முடிச்சவிக்கி பயலுகள காதலிக்கணும்ல, அதன்படியே கார்த்தி நம்பர் 2 வ காதலிக்கிறாங்க, அதுவும் எப்படி இடுப்பை காட்டி மயக்கியே, தமன்னாவுதெல்லாம் ஒரு இடுப்பாங்க, ஒரிஜினல் தெலுங்கு படத்துல அனுஷ்கா காட்டுவாங்க பாருங்க அதுதான் இடுப்பு, இடுப்ப பார்த்தா அடுப்பு மாதிரி சூடாக வேண்டாமா? புரோட்டா போட மைதா மாவு பினைஞ்சு வச்ச மாதிரி ஒரே வெள்ளையா இருக்கு, வேற ஒன்னும் தோணல.

சரி கதைக்கு வருவோம், காதல் வந்துருச்சுன்னா அடுத்து என்ன ஆகணும் பிரச்சனை ஆகணும்ல, அதன்படியே திடீர்னு ஒரு குழந்தை வந்து கார்த்தி நம்பர் 2 வ அப்பாங்குது, தமன்னா ஷாக்காகுறாங்க, காதல வேணாங்கறாங்க, அதுக்குள்ள ஆந்திரா கோஷ்டியும் களத்துல இறங்குது, அப்புறம் என்ன அடிதடி, வெட்டு குத்து, கொலைதான், முடிவு என்னங்கறதை படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

படத்துலேயே ரொம்ப நல்லா இருக்குற விசயம் சந்தானம் காமெடிதான், அவரு வாய தொறந்தாலே ஜனங்க சிரிக்கிறாங்க, சிங்கிள் டயலாக்ல சிரி சிரின்னு சிரிக்க வக்கிறாரு, ஒரு ரெண்டு பாட்டு தேறும் போல இருக்கு, கார்த்தி வழக்கம் போலவே கேணத்தனமா சிரிச்சு பெண்களை கவருகிறாரு, அவரும் மார்க்கெட்ல ஒரு இடம் புடிச்சிட்டாருங்கறது பொங்கல் டிவி நிகழ்ச்சிகள்லேயே தெரியுது, படத்தோட சண்டை காட்சிய பத்தி சொல்லனும், அண்ணனுக்கு இரத்த சரித்திரம்னா, தம்பிக்கு ஒரு சிறுத்தை, இரத்தசரித்திரம் பத்தி தெரிஞ்சுக்கனும்னா என்னோட பழைய விமர்சனம் பார்த்துக்கோங்க, விஜய்க்கு ரொம்ப புடிச்ச கதைல கார்த்தி நல்லாவே நடிச்சு ஜெயிச்சும் இருக்காரு.

மொத்தத்துல சிறுத்தை - சீறும்

தியேட்டர் கட்டிங்ஸ்

இந்த படத்த எங்க ஊரு ஜோதி தியேட்டர்லதான் பார்த்தேன், பாடாவதி தியேட்டருக்கு பெயிண்ட் அடிச்சிருக்கானுங்க, முன்னால ரொம்ப மோசமா இருக்கும் இப்ப பரவாயில்லை, அது என்ன மாயமோ தெரியல ஜோதின்னு பேர வச்சாங்கன்னாலே ஒரு மார்க்கமாத்தான் இருக்குது, குடிக்க தண்ணி கூட வைக்க மாட்டானுங்க, புதுபடம் ரிலீசுங்கறதால தண்ணி வச்சுருந்தாங்க, பாத்ரூம் ரொம்ப கேவலமா இருக்கும், இப்ப கொஞ்சம் பரவாயில்லை, முன்னயெல்லாம் அட்டன் டைம்ல ஒரு நூறு மூட்டை பூச்சியாவது நம்ம மேல படை எடுக்கும், இப்ப குறைச்சிருச்சு, 
1.45 க்கு படம்னு சொல்லிட்டு 2 மணிக்கு படம் போட்டாங்க, முதல்ல வெல்கம்னு சிலைடு போட்டதுக்கு பத்து நிமிசம் ரசிக சிகாமணிகள் கத்திகிட்டு இருந்தானுங்க, அது எனக்கு புடிக்கலை, அப்புறம் முன் சீட்டில் காலை வைக்காதீர்கள்னு சிலைடு போட்டாங்க, உடனே பக்கத்துல இருந்து நாலு பேரு முன் சீட்டுல காலை வச்சானுங்க, அது எனக்கு புடிக்கலை, அப்புறம் எச்சில துப்பாதீர்கள்னு சிலைடு போட்டாங்க, உடனே ஒரு பத்து பேராவது காறி துப்புனாங்க, அதுவும் எனக்கு புடிக்கலை, இது உங்கள் திரையரங்கு, இதனை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்னு சிலைடு போட்டாங்க, உடனே சிப்ஸ், பாப்கார்ன் சாப்பிட்டவங்க பேப்பரை எல்லாம் தூக்கி போட்டாங்க, அதுவும் எனக்கு புடிக்கலை, இப்படி மக்களே மறந்திருந்த விசயங்களை சிலைடு போட்டு ஞாபகப்படுத்தி படம் பார்க்க வந்தவங்களை நெளிய வச்ச தியேட்டர்காரங்களை எனக்கு சுத்தமா புடிக்கலை.
இதுக்கும் மேல கூட்ட நெருக்கடியில சீட் கிடைக்காம பக்கத்துல வந்து உட்கார்ந்த பொண்ணை பார்த்து பல் இளிச்சு, தியேட்டர் ஊழியரே வந்து கிளப்பிட்டு போய் வேற இடத்துல உட்கார வெச்சும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இளிச்சுட்டு இருந்த அந்த சொட்டை மண்டையனை சுத்தமா புடிக்கவே புடிக்கலை .... 



Tuesday, January 18, 2011

கடுப்பேத்தறானுங்க ...


பொங்கல் முடிஞ்சிருச்சு, வழக்கம் போலவே எல்லாரும் நல்லா கொண்டாடி இருப்பீங்க, நானும் வழக்கம் போலவே கம்பெனிக்கு போலாம்னு கிளம்பி வந்துகிட்டு இருந்தேன், எங்க ஊருல எப்பவுமே பொங்கல் முடிஞ்சிருச்சுன்னா ஒரு வாரத்துக்கு யாருமே இருக்க மாட்டாங்க, ரோடெல்லாம் வெறிச்சோடி போயிருக்கும், ஆனா இன்னைக்குன்னு பார்த்தா கொஞ்சம் பிசியாவே இருந்தது, நான் எப்பவுமே வண்டிய கொஞ்சம் ஸ்லோவாவே ஓட்டுவேன், 50 கிலோமீட்டர் தாண்டி ஓட்டுரதே இல்ல, அப்படி வந்துகிட்டு இருக்கும் போது ரோட்ட ஒரு ஆளு கிராஸ் பண்ணிட்டு இருந்தாரு, அவரு கிராஸ் பண்ணுன வேகத்த பார்த்தா ஒரு நாள் ஆகும் போல இருந்தது, சரி ஹாரன் அடிப்போம், சத்தம் கேட்டா வேகமா போயிருவாருன்னு நினைச்சேன், ஒரு 200 அடி தூரத்துல இருந்தே ஹாரன் அடிக்கிறேன், பயபுள்ள அவன் பாட்டுக்கு அப்படியே மெதுவா நடக்கறான், அவன் போயிருவான் போயிருவான்னு நானும் வேகத்த குறைக்கவே இல்லை, கடைசியா பக்கத்துல வண்டி போனப்பறம் இவன் சரிபட்டு வரமாட்டான்னுட்டு பிரேக் அடிச்சி அவன் பக்கத்துல போய் தட்டு தடுமாறி நிறுத்துனேன், கிறீச்சுன்னு சத்தம் வேற.

ஏங்க ரோட்ட கிராஸ் பண்ணும் போது வேகமா கிராஸ் பண்ணலாம்லன்னு கேட்டேன், அதுக்கு அவன் நான் அப்படித்தான் கிராஸ் பண்ணுவேன், அத கேட்க நீ யாருன்னான், நான் யாருங்கறதெல்லாம் முக்கியமில்லைங்க, வண்டியெல்லாம் வேகமா வந்துகிட்டு இருக்குதுல்ல, கொஞ்சம் சீக்கிரமா கிராஸ் பண்ணுனா என்னன்னு கேட்டேன், அதுக்கு அவன் ஏன் நீ வண்டிலதான வந்த, பிரேக் புடிக்க வேண்டியதுதான, நடக்கறவங்கள பார்த்தா உங்களுக்கு இளிச்சவாயனுகளா தெரியுதா? வண்டில வந்தா பெரிய ஆளுன்னு நினைப்பாங்கறான்,

நான் எத பேசுனாலும் அவன் சண்டை கட்டுறதுலேயே குறியா இருக்கான், சும்மாவே வண்டில போகும்போது எவனாவது குறுக்க வந்தா பயங்கர கோவம் வரும், ரொம்ப டென்சன் ஆனா கெட்ட வார்த்தை வாயில சாதாரணமாகவே வந்துரும், ஆனா அவன் சண்டை போடறதை பார்த்தா எனக்கு கோபம் வரல, சிரிப்புதான் வந்துச்சு, அப்புறம் அவன்கிட்ட சொல்லிட்டு வந்தேன், அண்ணே நீங்க சொல்றது சரிதான், வண்டில வரவங்க பிரேக் புடிச்சு வரணும், நீங்க அப்படித்தான் வருவீங்கன்னு சொல்றீங்க, வாஸ்தவம்தான், என் வண்டில பிரேக் புடிச்சதுனால நீங்க இப்ப இங்க நின்னு எங்கூட சண்டை போட்டுட்டு இருக்கீங்க, இதுவே பிரேக் புடிக்கலைன்னா மண்டை உடஞ்சு கீழே விழுந்து அடிபட்டு இருப்பீங்க, நம்ம ஊருல பலபேரு ஓட்டை வண்டி வச்சிகிட்டு பிரேக் இல்லாமதான் வண்டி ஓட்டிகிட்டு இருக்காங்க, அதனால ரோட்டை கிராஸ் பண்ணும்போது வேகமா கிராஸ் பண்ணுங்க, இல்லைன்னா வண்டில அடிபட்டிறுவீங்கன்னு சொன்னா, சரிதான் போடா அட்வைஸ் பண்ண வந்துட்டங்கறான், அப்புறம் எனக்கும் கோபம் வந்துருச்சு, நீ போடா @%#$#& நானும் வந்துட்டேன்.

பாதுகாப்பான வேகம்னு எதுவாச்சும் இருக்காங்க, 10 கிலோமீட்டர் வேகத்துல போய் கீழே விழுந்து செத்தவனும் இருக்கான், 100 கிலோமீட்டர் வேகத்துல போய் அடிபட்டு பொழச்சவனும் இருக்கான், அவ்வளவு ஏன் நடந்து போய் அடிபட்டு செத்தவங்க எவ்வளவு பேரு இருக்காங்க, டிவில போடற பைக் விளம்பரத்துல DRAMATICAL STUNTS PERFORMED BY ONLY EXPERTS, DO NOT IMITATE னு போடராங்க, எக்ஸ்பர்ட் பண்ற வேலையெல்லாம் நம்ம பசங்க அனாயசமா ரோட்ல பண்ணிட்டு இருக்கானுங்க,  இரயில்வே கிராஸ்ஸிங்ல மட்டும்தான் பார்த்து போவானுங்களா, ரோட்டுல போனா எருமை மாடு மாதிரியா போவானுங்க, எருமை மாடு கூட ஹாரன் அடிச்சா வழி விடுதுங்க, இந்த மனுசனுங்கதான் மாட்டவிட கேவலமா இருக்கானுங்க

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்னு போன மாசம் கொண்டாடுனாங்க, அதுவும் எப்படி 100 நோட்டீஸ் அடிச்சிட்டு வந்து ரோட்டுல போற வர வண்டியெல்லாம் நிறுத்தி கொடுத்துட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு அப்படியே விட்டுட்டானுங்க, ஏன் வண்டில போறவனுக்கு மட்டும்தான் விழிப்புணர்வு ஊட்டனுனா? நடந்து போறவனுகெல்லாம் விழிப்புணர்வு வேண்டாமா? ஏஆர் ரஸ்மான் மியூசிக்ல செம்மொழியான தமிழ்மொழியேன்னு ஒரு பாட்ட மாநாட்டு டைம்ல அஞ்சு நிமிசத்து ஒருமுறை எல்லா டிவியிலயும் மாசக்கணக்கா போட்டாங்க, ஆனா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்னு ஒரு வாரம்தான் கொண்டாடுறாங்க, ஒரு விழிப்புணர்வு படமாவது எடுத்தானுங்களா டிவியில போட்டானுங்களா? தமிழ்ல வளர்க்கறதுக்கு தமிழன் உயிரோட இருக்க வேணாமா? 

அட பிரைவேட் பத்திரிகைகாரன் தினமலர் கூட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு படம் எடுத்து இருக்கான்யா, அந்த அறிவு கூட கெவருமெண்டுக்கு கிடையாதா? குறைந்தபட்சம் அந்த விளம்பரங்களையாவது வாங்கி டிவியில ஒளிபரப்பி இருக்க கூடாதா?

இனிமேல எவனாவது குறுக்க வந்தாங்கன்னா, சங்கு ஊதிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் .. காலையிலேயே கடுப்பேத்தறானுங்க...



Friday, January 14, 2011

கமர்சியல் பக்கங்கள் ...



எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி
எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான் - ஹிட்லர்

உன் கண்ணீரை துடைப்பவனை விட
உனக்கு கண்ணீர் வராமல் பார்த்து கொள்பவனே நல்ல நண்பன்

முகத்தில் இருக்கும் பருக்களை பார்த்து
அவள் வேதனைப்படுகிறாள்

பாவம் அவளுக்கு தெரியாது

மானை விட புள்ளிமான் தான் அழகு என்று

ஒரு மனிதனுக்கு வெற்றியை கற்பிக்கும் குரு யார் தெரியுமா?

பெற்றோர்கள்?
உறவினர்கள்?
நண்பர்கள்?
ஆசிரியர்கள்?

இவர்கள் யாருமே இல்லை ‘ தோல்விதான்’’

ஜோக்குன்னாலே அது விஜய்தான், வேற வழி இல்லை, விஜய் ரசிகர்கள் மன்னிக்க

கஸ்டமர் : இந்த டிவி என்ன விலை
சேல்ஸ்மேன் : 1 லட்சம் ரூபாய்
கஸ்டமர் : இதுல அப்படி என்ன ஸ்பெசல்?
சேல்ஸ்மேன் : விஜய் படம் வந்தா அதுவா ஆப் ஆகிடும்
கஸ்டமர் : வாவ் !!!

விஜய் : காப்பி எவ்வளவு?
வெயிட்டர் : 5 ரூபாய்
விஜய் : எதிர்த்தாப்புல இருக்குற கடையில 1 காப்பி அம்பது பைசாதான்
வெயிட்டர் : சாவி கிராக்கி, அது ஜெராக்ஸ் காப்பிடா, உனக்கு படிக்கவும் தெரியல, நடிக்கவும் தெரியல

பையன் : டாக்டர் எவ்ளோ தண்ணி அடிச்சாலும் மப்பு ஏறவே மாட்டேங்குது
டாக்டர், டாய் மவனே, நீ இப்போ புல் மப்புலதான் இருக்க, நான் டாக்டர் இல்லை, உன் அப்பன்.

பெஸ்ட் பிரண்ட்சிப் கவிதை
கண்ணீரை துடைக்க உன்னை போல ஒரு பிரண்டு இருந்தால்
1000 விஜய் படம் வந்தாலும் துணிந்து பார்ப்பேன்


ஒரு சின்ன குட்டி கதை
 ஒருத்தன் ரோட்டுல போகும் போது ஆக்சிடண்ட் ஆகி இறந்து போயிட்டான், அவன எமதர்மனோட ஆளுக வந்து அவன மேலோலத்துகு கொண்டு போயிட்டாங்க, அங்க சித்ரகுப்தன் வந்து அவங்கவங்க செஞ்ச நல்லகாரியம், கெட்ட காரியம் பொறுத்து சொர்க்கத்துக்கும், நரகத்தும் அனுப்பி வச்சிட்டு இருந்தாங்க, நம்ம ஆளு டர்னும் வந்தது, இவன நரகத்துக்கு அனுப்புங்கன்னு சித்ரகுப்தன் சொல்லிட்டான், நம்ம ஆளு சித்ரகுதன்கிட்ட கதறினான், அய்யா திடீர்னு ஆக்சிடெண்ட் ஆகி செத்து போயிட்டேன், வீட்டுல புள்ளகுட்டியெல்லாம் எனக்காக காத்துகிட்டு இருக்கும், ஒரு போனாவது பண்ணிக்கிறேன், காசு வேணாலும் கொடுத்துடரேன், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்கன்னு கதறுனான், சித்ரகுப்தனும் மனமிறங்கி போன் கொடுத்து பேசிட்டு வாடான்னு சொல்லிட்டாரு, நம்ம ஆளும் போன் பண்ணி வீட்டுல எல்லாத்துகிட்டயும் பேசினாரு, போன சித்திரகுப்தன்கிட்ட திருப்பி கொடுத்துட்டு காசு எவ்வளவுன்னு கேட்டாரு,
அதுக்கு சித்ரகுப்தன் என்ன சொன்னாரு தெரியுமா? நரகத்துல இருந்து இன்னொரு நரகத்துக்கு ப்ரீன்னாரு...

இன்னைக்கு கமர்சியல் பக்கங்கள் அவ்வளவுதான், வர வர யாருமே மெசேஜ் அனுப்ப மாட்டேங்கறாங்க, ஏன் நானே  யாருக்கும் மெசெஜ் அனுப்புறதில்லை, ஒரு மெசேஜ் அம்பது பைசா அதுக்கு போனே பண்ணிக்கலாம், அப்புறம் ஒரு முக்கியமான விசயம், என்னோட வீட்டுல கம்ப்யூட்டர் இல்லை, நெட் கனக்சனும் இல்லை, அவ்வளவு ஏன் என்னோட மொபைல்ல பேலன்ஸ் கூட இல்லை, நான் பிளாக் எழுதறது, கமண்ட் போடறது, ஓட்டு போடறதுன்னு இவ்வளவு அழிச்சாட்டியம் பண்றதும் ஆபிஸ்ல இருந்துதான், அதனால, நண்பர்களோட பதிவை உடனே படிக்கவும், ஒட்டு போடவும் முடியறதில்லை, கிடைக்கற கேப்புல படிச்சிட்டு கமண்ட் மட்டும்தான் போட முடியுது, ஆனா ஓட்டு போடறது இல்லைன்னு நினைக்காதீங்க, சாயங்காலம் ஏழு மணிக்கு மேல எல்லாரோட பதிவிலையும் ஒட்டு போட்டுட்டுதான் போறேன், அப்படி இருந்தும் பதிவு எழுதற டைம்ல மட்டும் ஓட்டு போடறது மிஸ்ஸாகுது, இதை ஏன் நான் சொல்றேன்னா ஒரு பழமொழியே இருக்கு, ஊரார் பிளாக்கை ஊட்டி வளர்த்தால் தன் பிளாக் தானே வளரும்னு அதனாலதான் சொல்றேன்,
இன்னும் ஆறு மாதத்திலோ ஒரு வருடத்திலோ நான் ஒரு கம்ப்யூட்டரை வாங்கி விடுவேன், அப்புறம் டெய்லியும் கேப்பு விடாமல் ஓட்டு போட்டு உங்கள் அனைவரையும் முதல்வனாக்குவேன், அதுவரை நண்பர்கள் கொஞ்சம் பொறுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன், இண்ட்லியில் SURA என்ற பெயரிலும், மீதி உள்ள திரட்டிகளில் PLDMSURI என்ற பெயரிலும் ஓட்டு போடுவது நாந்தான், இன்னைக்கு ஏன் இவ்வளவு சுயபுராணம்னா இது என்னோட 50 ஆவது பதிவு.

கை தட்டுனது போதும்க, என்னுடைய பதிவினை படித்தும், பின்னூட்டம் இட்டும் எனக்கு ஆதரவளித்து வரும் நண்பர்கள், சகோதர, சகோதரிகள், அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள், படிக்கரவங்க எல்லாம் ஓட்டு போட்டா எல்லா திரட்டியிலும் நாந்தான் 6 மாசத்துக்கு முதல் பக்கத்துல இருப்பேன், ஆனா ஓட்டு போடறவங்க கம்மியா இருக்கரதால அந்த தெய்வங்களுக்கு என்னுடைய ஸ்பெசல் தேங்க்ஸ், இன்னையிலிருந்து 3 நாள் கம்பெனி லீவு, அதனால என்னோட கடைக்கும் லீவு, திங்கள்கிழமை முதல் கடை வழக்கம் போல் செயல்படும், அதுக்குள்ள என்னை மறந்துடாதீங்க,
உங்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

pongal scraps greetings images for orkut, facebook
v4orkut.com

நன்றியுடன்
இரவுவானம்



Wednesday, January 12, 2011

நானும் என் லவ்வும் - 4






[புதுசா வந்து படிக்கறவங்க மேல இருக்கற மூணு பாகத்தையும் படிச்சிட்டு வந்திடுங்க, இல்லைன்னா ஒன்னுமே புரியாது, ஏன்னா எனக்கே புரிய மாட்டேங்குது]


நான் அவ கண்ணை பார்த்தேன், கோவமா இருக்காளா, இல்லை நல்லாத்தான் இருக்குறாளா, ஒரே குழப்பமா இருக்கே, என்ன பேசுறது, ஒருவேளை திட்டிருவாளோ, இப்படி யோசிச்சுகிட்டு இருந்தேன், நல்லவேளை அவளே பேசினா
ஏன் என் பின்னாடியே வர்ரீங்க?
இல்லையே நான் எங்க உங்க பின்னாடி வந்தேன், அப்படின்னுதான் சொன்னேன்னு நினைக்கிறேன், ஏன்னா நான் பேசுனது எனக்கே கேட்கலை, வார்த்தைகளுக்கு பதிலா வெறும் காத்துதான் வருது.
நான் சொன்னதை கேட்டு அவளுக்கு சிரிப்பு வந்துருச்சு, அவ கூட வந்த பிரண்டும் சிரிச்சிட்டா, சரி என்னன்னு சொல்லுங்கன்னு கேட்டா,
ஒன்னுமில்லிங்க நல்லா இருக்கீங்களான்னு கேட்டேன், என்னோட குரல் நடுங்கறது எனக்கே தெளிவா தெரிஞ்சது, நல்லாத்தான் இருக்கேன்னு சொல்லிட்டு சிரிச்சிகிட்டே போயிட்டா.

ஒரு நிமிசம் எனக்கு என்னாச்சுங்கறதே ஞாபகம் இல்லை, உண்மையிலேயே பேசிட்டனா, கனவா இல்லை நெஜமான்னு புரியல, ஆனா ரொம்ப சந்தோசமா இருந்தது, அன்னைக்கு எனக்கு இருந்த மனநிலைய வார்த்தையால சொல்லி புரிய வைக்க முடியாது, அப்படி ஒரு சந்தோசம், என் வாழ்க்கையில மகிழ்ச்சியா இருந்த தருணங்கள்ள அதுவும் ஒன்னு.

உண்மையிலேயே முன்ன பின்ன தெரியாத பொண்ணுகூட பேசுறது கஷ்டம்க, இப்ப வேணா சோசியலா இருக்கலாம், ஆனா அப்ப அப்படி இல்லை, இந்த லட்சணத்துல ஐ லவ் யூ எங்க சொல்றது, பேசுனதே பெரிய விசயம்னு ஆகி போச்சு

நேரா கிளம்பி ஸ்கூலுக்கு போனேன், முதல் பீரியட் தமிழ், இரண்டாவது பீரியட் இங்கிலீஸ், இது ரெண்டும் பரவாயில்லைங்க, ஆனா மூணாவது, நாலாவது பீரியட் கண்டிப்பா கணக்கு, இல்லைன்னா சயின்ஸ்தான், இது ரெண்டும் வேலைக்காதது, நாங்க முதல் பீரியட் அட்டெண்டண்ஸ் எடுத்ததுமே ஸ்கூல் ஜன்னல் வழியா எஸ்கேப் ஆகிடுவோம், கவருமெண்டு ஸ்கூலுங்கறதால ஜன்னல்ல பாதி கம்பியே இருக்காது, எனக்கு தெரியும் என்னோட உயிர் நண்பர்கள் பள்ளிக்கூடத்துல இருக்க மாட்டாங்க, கிரவுண்டுலதான் இருப்பானுங்கன்னு, நானும் கட் அடிச்சிட்டு கிளம்பி போய் அவனுங்க நாலு பேரையும் பார்த்தேன்.

நான் அவகூட பேசிட்டண்டானு சொன்னேன், பயபுள்ளக ஒருத்தனும் நம்பலை, நான் எங்க ஊருல இருக்குற 47 சாமி மேலயும், என்னோட எட்டு தலைமுறை முன்னோர்கள் மேலயும் சத்தியம் பண்ணி நம்ப வச்சேன், சரி பார்ட்டி வைடான்னு சொன்னாங்க, பார்ட்டின்னா இப்ப இருக்கற மாதிரி பார்ட்டி இல்லை, அப்ப என்னோட குளோஸ் பிரண்டு மட்டும்தான் ஆப் பீர் அடிப்பான், மீதி நாங்க மூணு பேரும் டீ மட்டும்தான் அடிப்போம், இருக்குற காசெல்லாம் போட்டு ஆப் பீர் 35 ரூபாதான் அவனுக்கு வாங்கி கொடுத்தோம், அத குடிச்சிட்டு மப்பேறி போயிருச்சு அவனுக்கு, மாப்ள பொண்ணு ஓகே சொல்லிட்டால்ல விடுடா நாளைக்கே பொண்ண தூக்குறோம், கல்யாணம் பண்றோம்கறான்,
அட நாதாரி நான் இன்னும் ஐ லவ் யூ சொல்லவே இல்லைடா, சும்மாதாண்டா பேசிட்டு வந்திருக்கேன்,
பேசிட்டாளில்ல அப்ப அவ லவ் பண்றாண்ணுதான் அர்த்தம், அப்படி இப்படின்னு அன்னைக்கு நாள் முழுக்க ஒரே அலப்பறை அவனோட,

டேய் இந்த விசயத்தை யார்கிட்டயும் சொல்லிடாதடா, முக்கியமா நம்ம ஊர் பசங்ககிட்ட மட்டும் கண்டிப்பா சொல்லிடாதடான்னு மப்புல இருந்த அவங்கிட்ட சத்தியம் வாங்கினேன், ஏன்னா எங்க ஊரு பசங்க கொஞ்சம் இல்லை ரொம்பவே மோசமானவனுங்க, டோட்டலா எங்க ஊருல ஏலெட்டு ஊரு இருக்கு, அதுல எங்க ஊரும், பக்கத்து ஊரும் ரொம்ப பேர் வாங்கின ஊரு, அவங்களுக்கு மட்டும் விசயம் தெரிஞ்சது மானத்தை வாங்கிடுவானுங்க, இப்பத்தான் லவ் பன்ற விசயம்லாம் ரொம்ப சாதாரணமா இருக்கு, ஆனா அப்பயெல்லாம், லவ் பண்றாங்கன்னாலே ஏதோ ஜந்துவை பார்க்குற மாதிரி பார்ப்பாங்க, கிண்டல் பண்ணியே கொன்னுடுவானுங்க,
ஒரு வழியா அவனோட பார்ட்டி பிரச்சனை முடிஞ்சது, மீதி இரண்டு பேர் இருக்கானுங்களே அவனுங்களுக்கு பார்ட்டி, அப்பத்தான் எங்க ஊருல ஒரு ஸ்வீட் ஸ்டால் ஓப்பன் பண்ணி இருந்தாங்க, புது கடைங்கறதால எப்ப பார்த்தாலும் செம கூட்டமா இருக்கும், கடையில வேலை பார்க்குற ஆளுங்களும் கம்மி, நமக்கு எது வேணாலும் நாமே எடுத்து சாப்பிட்டுக்கலாம், எங்ககிட்ட எப்ப காசு கம்மியா இருந்தாலும் அங்கதான் போவோம், முப்பது நாப்பது ரூபாய்க்கு சாப்பிட்டுட்டு பத்து ரூபா கொடுத்துட்டு வந்திடுவோம், அன்னைக்கு எங்கையில இருவது ரூவாதான் இருந்தது, என் பிரண்டு துரை இருக்கானே சரியான சாப்பாட்டு பைத்தியம் புடிச்சவன், எவ்வளவு கிடைச்சாலும் சாப்பிட்டுட்டே இருப்பான், அன்னைக்கு 150 ரூபாய்க்கு தின்னுட்டு வெறும் இருபது ரூபா கொடுத்திட்டு பார்சலும் வாங்கிட்டான்.
ஒருவழியா இவனுங்க பிரச்சனையும் முடிஞ்சது.

அப்படியே வீட்டுக்கு போயிட்டேன், அப்புறம் ஒரு வாரமும் அவள பார்க்கறதும், அவ சிரிக்கறதும், நானும் சிரிக்கறதும் தொடர்கதையா போச்சு, நானும் ரொம்ப சந்தோசமா இருந்தேன், ஆனா விதி வலியது, சும்மா விடுமா?

அன்னைக்கு ஞாயித்து கிழமை, நானும் என் பிரண்டு பசங்களும் வழக்கம் போல கிரிக்கெட் விளையாட கிரவுண்டுக்கு போய் விளையாடிட்டு இருந்தோம், அப்ப என்னோட பழைய பிரண்டு ஒருத்தன் மொடையன்னுதான் கூப்பிடுவோம், அவன் வந்தான், ரொம்ப நாள் கழிச்சு வந்ததால ரொம்ப நேரம் அவன் கூட பேசிட்டு இருதோம், அப்புறம் நான் பீல்டிங் பண்ண போயிட்டேன், என் குளோஸ் பிரண்டும் மொட்டையனும் மட்டும் தனியா பேசிட்டு இருந்தானுங்க, பீல்டிங் முடிஞ்சு நான் வந்தேன், என்னை தனியா கூப்பிட்டுட்டு போனானுங்க,

டேய் மொட்டையன் உன் ஆள பார்க்கனும்கறான், வாடா போய் காட்டிட்டு வந்திடலாம்கறான்
மொட்டையனும் ஆமாண்டா நானும் முன்ன பின்ன லவ் பண்றத பார்த்ததே இல்லை, ப்ளீஸ் என்னையும் கூட்டிட்டு போடாங்கறான்.
அடப்பாவிகளா நானே முன்ன பின்ன லவ் பண்ணதே இல்லயேடா இதுல இவனுக்கு எங்கிருந்து காமிக்கறது,
ஏண்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையாடா, தீடிர்னு வந்து லவ் பண்ணுடான்னா எப்பட்றா? இன்னொரு நாளைக்கு பார்க்கலாம்டான்னா கேட்கவே மாட்டேங்கறாங்க, இன்னொரு நாளைக்கு மொட்டையன் எப்படிடா வருவான், அவ்ளோ தூரத்துல இருந்து வந்துருக்கான், வாடா வாடான்னு கூப்பிடுரானுங்க,

அட இப்போ எப்படிடா போறது, டியூசன் வேற முடிஞ்சிருக்கும்டா

இல்லடா இன்னும் அரை மணி நேரம் இருக்கு, இப்ப போனா புடிச்சிரலாம்கறான்

அடப்பாவி என்ன விட எல்லா டீடெயிலும் கலக்ட் பண்ணி வச்சிருக்கானேன்னு வேற வழி இல்லாம நானும் கிளம்பினேன்,

நடக்கப்போற விபரீதம் தெரியாமலேயே...

தொடரும்...

டிஸ்கி 1 : அடுத்து நடக்க போவதை சரியாக ஊகிக்கும் நண்பர்களுக்கு சிறப்பு பரிசு ஒன்று காத்திருக்கிறது, 

டிஸ்கி 2 : அது என்னவென்றால் சரியாக ஊகிக்கும் நண்பர்கள் திருப்பூருக்கு வரும்போது என்னை தொடர்பு கொண்டால் காந்திநகரில் இருக்கும் முனியாண்டி விலாசில் குஸ்கா ஒன்று தயிர் வெங்காயத்துடன் கிடைக்கும், முந்துபவர்கள் முந்தலாம், நன்றி...