Friday, July 22, 2011

இமேஜ் பிராப்ளம் ஆகி போச்சுங்க..!


கடந்த சில நாட்களுக்கு முன்பு

மாலை 5 மணி இருக்கும், வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது 
நண்பர் ஒருவர் கூப்பிட்டார்

டேய் செந்திலை பார்த்தியா?

இல்லையே, ஏண்டா?

ஒன்னுமில்லைடா அவங்க அம்மா கூப்பிட்டாங்க, காலையில வீட்டுல ஒரு சின்ன பிரச்சனையாம், கோவிச்சுகிட்டு சாப்பிடாம கொள்ளாம கிளம்பி போயிட்டானாம், இன்னும் வீட்டுக்கு வரலியாம், அவங்க அம்மா போன் பண்ணி கேட்டாங்க

நீ அவனோட போனுக்கு டிரை பண்ணுனியா?

நான் ஒரு மணி நேரமா கூப்பிடரேண்டா போன எடுக்கவே மாட்டேங்குறான், அவங்க வீட்டுல பயப்படுறாங்க

அப்படியா? எங்க போயிருப்பான், சரி நான் சக்தி பேக்கரிகிட்ட வெயிட் பண்றேன், நீ வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து தேடுவோம்

வண்டியை பேக்கரி முன் நிறுத்திவிட்டு, ஒரு டீ ஆர்டர் செய்துவிட்டு யோசித்தேன்

எங்க போயிருப்பான், ரொம்ப நல்ல பையனாச்சே, வீட்டுல சொல்லாம வெளில காலையே வைக்க மாட்டானே, சின்ன பிரச்சனைக்கா காலையில போனவன் இன்னும் வீட்டுக்கு வராம இருப்பான், போன் பண்ணுனாலும் எடுக்க மாட்டேங்குறானாம், சரி நாம டிரை பண்ணி பார்ப்போம்

திருப்பரம் குன்றத்தில் நீயிருந்தால் முருகா திருப்பணி மலை மீது எதிரொலிக்கும்ம்ம்ம்ம்……….

சே எடுக்க மாட்டேன்றானே, நாலைந்து முறை முயற்சி பண்ணியும் எடுக்காமல் வெறுத்து போய் டீ குடித்து முடிக்கவும் நண்பர் வரவும் சரியாக இருந்தது

டீ சாப்பிடரயாடா?

இல்லைடா வேணாம், இப்பத்தான் குடிச்சிட்டு வந்தேன், சொல்லி முடிக்கவும் அவனுக்கு போன் வந்தது

அவன தேடித்தான் போயிட்டு இருக்கோமா? நான் மட்டும் இல்லை, நாங்க ரெண்டு பேரும்தான், கவலைபடாதீங்க கண்டுபுடிச்சு கூட்டிட்டு வந்துடரோம்

அவங்க அம்மாதாண்டா, பயப்படுறாங்க, பையன பொட்ட புள்ள மாதிரி வளர்த்தா இப்படித்தான்

சரி விடுடா அவங்க கவலை அவங்களுக்கு, சரி முதல்ல பிரண்ட்ஸ் வீட்டுல எல்லா இடத்துலயும் போய் தேடுவோம்

ஒரு மணி நேரத்துக்கு பிறகு

டேய் மணி ஆறாகுது, எங்கயுமே வரலைங்கராங்க, அடுத்து எங்க போறது?
சரி கிரவுண்டுக்கு விடுடா அங்க இருக்கானான்னு பார்ப்போம்

இங்கயும் இல்லை, வேற எங்க போயிருப்பான்?

டேய் மச்சி ஒருவேளை நம்ம ரெகுலர் டாஸ்மாக் கடைக்கு போயிருப்பானோ?

அவனா பகல்லயா? கண்டிப்பா இருக்காது, நம்ம கூட சரக்கடிக்க வந்தாலே கடைக்கு பக்கமும் வரமாட்டான், வீட்டுக்கும் போக மாட்டான், அவனாவது பகல்ல சரக்கடிக்கறதாவது?

இல்லைடா மச்சி எனக்கு என்னவோ டவுட்டா இருக்குது அவன் அங்கதான் இருக்கனும் நேரா டாஸ்மாக் விடு


டாஸ்மார்க்க்க்க்

மாலை நேர தாக சாந்திக்காக குடிமகன்கள் கடையின் கம்பியை பிய்த்து கொண்டு உள்ளே போய் விடுவது போல அடிதடி போட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள்

ஒரு சீனியர் குடிகாரர், டேய் ங்#$%&^& நான் எப்பவுமே ஸ்டடிதாண்டா என்று யாரிடமோ கூறிக் கொண்டிருந்தார்

இன்னொருவர் ஸ்டாண்டு எடுக்காத டிவிஎஸ் 50 இல் ஏறிக் கொண்டு உயிரை குடுத்து மிதித்து கொண்டிருந்தார், ஆக்சிலேட்டரை வேறு புல்லாக முறுக்கியதில் வண்டி ஸ்டார்ட் ஆகி வீல் பயங்கரமாக சுத்திக் கொண்டிருந்தது

டேய் ஓடி வந்துர்ரா, அந்த நாதாரி ஸ்டாண்டு எடுக்காம வண்டி ஓட்டிட்டு இருக்கான், ஸ்டாண்டு கழண்டுச்சு நேரா நம்ம மேலதான் வந்து விட்டுடுவான்

இருவரும் வேகமாக விலகி நடந்தோம், பார் முழுக்க தேடியும் எங்கேயும் அவனை காணவில்லை

எங்கடா இங்கயும் காணலை?

ஒருவேளை பின்னால இருப்பானோ? நினைப்பை செயல்படுத்த பின்னால் நடந்தோம்

அங்கு நாங்கள் கண்ட காட்சி, திகைப்பை ஏற்படுத்தினாலும் கூடவே சிரிப்பும் வந்தது

அங்கு செந்தில் பாதி சாக்கடையில் உடல் நனைத்து ஒரு சின்ன பன்னிக்குட்டியை கட்டிபிடித்து படுத்திருந்தான்

அடப்பாவி எப்படி கிடக்கறான் பாருடா, சரி வா போய் தூக்குவோம்

டேய் செந்தில் செந்தில், எழுந்துருடா?
…………………………..

ஒரு பதிலும் காணவில்லை

முழிக்கறானா பாரு, டேய் கொய்யாலே சரக்கடிச்சாலும் டிச்சுக்குள்ளயாடா வந்து படுக்குறது, எழுந்துருடா வெண்ணை

நாங்கள் திட்டியதை கேட்டு அந்த பன்னிக்குட்டி ரோசப்பட்டு ஓடியது, ஆனால் இந்த பன்னி எழுந்திருப்பதாக தெரியவில்லை

டேய் இது வேலைகாவுறதில்ல, நான் போய் தண்ணி வாங்கிட்டு வரேன், நீ இவனை புடிச்சுக்கோ

சரி நான் புடிச்சிக்குறேன், நீ போயிட்டு வா

அவன் போனபிறகு செந்திலின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன், சே எப்படி இருந்த பையன், ஈபில வேல, கவருமெண்டு ஜாப்பு, அப்பா வாத்தியாரு, அம்மா டீச்சரு, சின்னதான் ஒரு இமேஜ் பிராப்ளம்னாலே துடிச்சு போயிருவான், பிரண்டு கூட பேசும் போது லேசா வார்த்தை விட்டுட்டாலே கேவலமா நினைப்பானே, ஏதோ ஒரு பிரச்சனைக்காக இங்க வந்து தண்ணியடிச்சு இப்படி சாக்கடைல விழுந்து கிடக்கறானே

மப்பு எறங்கி முழுச்சு தன்னோட நிலைமைய பார்த்தான்னா எவ்வளவு கேவலமா பீல் பண்ணுவான், ம்ஹும்ம்ம்

என் யோசனையை நண்பன் கலைத்தான், டேய் தண்ணி கொண்டு வந்துட்டேன், முடிஞ்சளவு அவன வெளில தூக்கு

ம்ம்ம்ம் முடியலைடா, நீயும் வாடா

இரண்டு பேரும் சேர்ந்து அவனை இழுத்து வெளியில் கிடத்தினோம், அப்படியும் முட்டிங்கால் வரை சாக்கடைக்குள் இருந்தது

நண்பன் செந்தில் தலையில் தண்ணீரை ஊற்றினான், இப்படியே நாலைந்து முறை ஊற்றியபிறகு, செந்தில் மெதுவாக கண்ணை திறந்தான்

டேய் கண்ணு முழிச்சிட்டான், இன்னும் கொஞ்சம் ஊத்து

ஒரு வழியாக செந்தில் சுயநினைவுக்கு வந்தான், தன்னை சுதாரித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான், சாக்கடைக்குள் கிடந்த தன்னுடைய காலை பதறியடித்து தூக்கினான்

அய்யோ பாவம், தன்னோட பொசிசன பார்த்து ரொம்ப பீல் பண்ணுவான் போலருக்கு, சும்மாவே இமேஜ் பாக்குறவன், என்ன சொல்ல போறானோ என நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது

செந்தில் எங்களை பார்த்து ஒருவார்த்தை சொன்னான்

அது என்னவென்றால்
-
-
-
டேய் மச்சி நான் அடிச்ச சரக்கு செம சரக்குடா, சும்மா ஜிவ்வுன்னு தூக்கிருச்சு, இனிமே இதே சரக்க வாங்கி அடிப்போம்டா..!

டிஸ்கி 1 : இது ஒரு மொக்கை கதை, சத்தியமாக சொந்த அனுபவம் இல்லை, எனவே சொந்த அனுபவமா என கேட்பதை தவிர்க்கவும், சில விசயங்கள் உண்மையாக இருந்தாலும் ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது
டிஸ்கி 2 : ஐயா இண்ட்லிகாரங்களே உங்களோட பதிவு இணைக்கும் பகுதியில மொக்கைன்னு ஒரு பிரிவ தயவு செஞ்சு உருவாக்குங்க, இந்த கதைய எல்லாம் படைப்புகள் பிரிவுல சேர்க்க எனக்கே அவமானமா இருக்குது

Wednesday, July 20, 2011

நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட...


ம்ம்ம் கைகட்டி நிக்கிறதெல்லாம் ஓகே, ஆனா பாடி ஒரு 90 டிகிரி வளைஞ்சிருக்கனும், இல்லைன்னா காலுக்கு கீழயாவது கும்புடு போட்டு படுத்துருக்கனும், அனேகமா நீங்க இதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க


அக்கா நமக்கு சென்னை ஹைகோர்ட் சரிப்பட்டு வராதுக்கா, நாம சுப்ரிம் கோர்ட் போலாம், அந்த வண்ணாரப்பேட்டை ஜோசியக்காரன் வேற சமச்சீர் கல்வி நமக்கு ஆகாதுன்னு சொல்லுரான், சாமி குத்தம் ஆகிட போகுதுக்கா


தலைவரே கதை வசனம் எழுதறதுக்கெல்லாம் இனிமே நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க

அப்படியா தம்பி ககக போ...


கற்பழிப்பு கேசுக்கு இருக்குன்றான், கஞ்சா கேசுக்கு இருக்குன்றான், பிக்பாக்கெட் கேசுக்கு இருக்குன்றான், திருட்டு கேசுக்கு இருக்குன்றான்
கொலை கேசுக்கு இருக்குன்றான், வீடு பூந்து கொள்ளையடிச்சா கூட இருக்குன்றான்

ஆனா ஜாமீனு ஸ்பெக்ட்ரம் கேசுக்கு மட்டும் இல்லீங்கறான்

கோர்ட்டுலயே இல்லையாம் - ஒருவேளை நாம இதுக்கு சரிப்பட்டு வரமாட்டமோ?


மிஸ்டர் முகர்ஜி நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க, இடியே தலைல விழுந்தாலும் காது கேட்காத மாதிரி கண்டுக்காம இருக்கனும், பாருங்க சிங்க இத்தனை நேரம் எங்கிட்ட திட்டு வாங்கிட்டு பச்சபுள்ள மாதிரி சிரிச்சுட்டு நிக்குறத


அப்பா தலைவர் பதவி எனக்கு

மகனே நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட


யோவ் நான் என்னய்யா பண்றது, நம்ம கட்சில இருந்து எதிர்கட்சி வரைக்கும் இருக்குற எல்லாத்தையும் திட்டியாச்சு, ஆனாலும் கட்சிதலைவர் பதவிய தர மாட்டேங்குறாங்க

தலைவரே நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க


யோவ் வடிவேலு இப்ப தெரியுதா நீ எதுக்கு சரிப்பட்டு வர மாட்டீன்னு..!


இந்தாளு எதுக்குமே சரிப்பட்டு வர மாட்டாரு

Thursday, July 14, 2011

ஹரியின் வேங்கை..!



அதே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, முறுக்கு மீசை, அரிவாள், கத்தி, ஏய்ய்ய்ய்ன்னு சத்தம் போட்டு பேசுற ஹீரோ, வில்லன், பெரிய குடும்பம், டாடா சுமோ, சபாரி, அதே கதை, ஒரே கதைதான், டாடா சுமோ  போகுற பாதையும், கதை நடக்கற இடமும், படமும் மட்டும்தான் வேற வேற

சிவகங்கை மாவட்டத்துல நல்ல ரவுடி ராஜ்கிரண், அவரோட சிபாரிசுல 50,000 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்கிறாரு கெட்ட ரவுடி பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் நல்ல ரவுடியாச்சே அதனால பிரகாஷ்ராஜ சம்பாதிக்க விட மாட்டேங்குறாரு, கடுப்பான செல்லம், ராஜ்கிரணோட மகன் தனுஷ போட்டு தள்ள டிரை பண்ணுறாரு

ஊருல இருந்தா நடக்கற பஞ்சாயத்துல எல்லாம் கரச்சலை கொடுக்கறாருன்னு தனுஷ திருச்சிக்கு அனுப்பி வச்சிருக்காரு ராஜ்கிரண், தனுஷ் திருச்சில வந்த வேலைய பார்க்காம அவரோட சொந்த வேலையா தமன்னாவுக்கு ரூட்டு விட்டுகிட்டு இருக்காரு அம்மணி அதெல்லாம் முடியாதுன்னு தனுஷுக்கு தண்ணி காட்டிட்டு இருக்காங்க, அப்படியே இருக்கும் போது, பிரகாஷ்ராஜோட ஆளுங்க போட்டு தள்ள வாராங்க

வழக்கம் போல கொல்ல வந்த ஆளுங்களையெல்லாம் சுள்ளான் சுளுக்கு எடுக்கறாரு, மகன கொல்ல பாத்தது எம்.எல்.ஏ பிரகாஷ்ராஜூதான்னு ராஜ்கிரணுக்கு தெரிஞ்சு போகுது, என்னைக்கு செல்லம் சிவகங்கைல கால் எடுத்து வக்கிதோ அன்னைக்கு சங்குதான்னு ராஜ்கிரண் தொடைதட்டி சவால் விடுறாரு

இந்த மேட்டர தெரிஞ்சுக்கற செல்லம் ஸ்ட்ரெயிட்டா ஹெலிகாப்டர புடிச்சிட்டு வந்து அண்ணன் ராஜ்கிரண் வீட்டு முன்னாடியே இறங்கி, ஒரு மாசத்துல உன்னை போட்டு தள்ளுறேன்னு சவால் விடுறாரு, நம்ம ராஜ்கிரண் சாரும் முன்ன போட்ட சபதத்தை மறந்துட்டு தேமேன்னு நிக்குறாரு, பொறுக்காம பையனும் உடனே கிளம்பி எம்.எல்.ஏ வீட்டுக்கு போய் பதிலுக்கு சவால் விடுறாரு, ஒரு மாசத்துல நான் உன் தலைய எடுக்கறேன்னு

இதுல யாரு சவால் ஜெயிச்சது? தமன்னா தனுசுக்கு ஓகே ஆனாங்களா இல்லையாங்கறத தியேட்டர்லயோ இல்லைன்னா இந்திய தொல்லைக்காட்சிகளில் முதன்முறையாகவோ பாருங்க மகா ஜனங்களே, நானும் அப்படித்தான் பார்த்தேன்

அரைச்ச மாவையே அரைச்சாலும் டேஸ்ட்ட மெயிண்டெயின் பண்ணுறதுல இயக்குனர் ஹரி உண்மையிலேயே கெட்டிக்காரர்தான், இல்லைன்னா இன்னுமா நம்மள ஊரு நம்புதுன்னு அவருக்கே தோணியிருக்கும், ஆனா தோணலை அந்தளவுக்கு திரைக்கதைய பரபரப்பா கொண்டு போயிருக்காரு, இன்னும் ஒரு முப்பது படம் இந்த கதைய வச்சே ஒப்பேத்துவாருன்னு எதிர்பார்க்கலாம், ஹாட்ஸ் ஆஃப் ஹரி சார்

அப்புறம் தனுஷ், தேசிய விருது பெற்ற பிறகு அந்த விருதுக்கே சவால் விடும் அளவுக்கு இந்த படத்துல நடிச்சிருக்காரு, வழக்கமான ஹரி பட ஹீரோக்கள் பேசுற பத்தடி லென்த் டயலாக்க கடகடன்னு ஓப்பிக்கற வேலைய இவரும் சரியா செஞ்சிருக்காரு, அப்புறம் தனுஷ் சண்டை போடுறதே ஒத்த சொல்லால பாட்டுக்கு டான்ஸ் ஆடுர மாதிரிதான் இருக்கு, அனேகமா இதுக்கும் ஒரு தேசியவிருது கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன், அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தனுஷ்

தமன்னா தனுசுக்கு டஃப் காம்படீசன் கொடுக்குராங்க, நடிப்புலயான்னு கேட்குரீங்களா? ஹரி படத்துல நடிப்புக்கு என்னங்க வேலை? அதெல்லாம் இல்லைங்க தனுஷ் அளவுக்கு அவங்களும் ஒல்லியா இருக்குறாங்க, அவங்க மலையாளத்துல பேசற அந்த காதல் சீன்கள் ரொம்பவே அழகு


காதல் காட்சிகள் மட்டும் சொல்லிக்கற மாதிரி இருக்கு, ரசனையோடு எடுத்திருக்காரு, குறிப்பா செல்வத்துள் செல்வம் திருக்குறள் சீன், முதல்முறையா பாவாடை தாவணில நடிக்கிறேன்னு சந்தோசமா பேட்டியெல்லாம் கொடுத்துட்டு இருந்தவங்கள பாட்டு சீன்ல கவர்ச்சியா நடிக்க வச்சு அவங்க நினைப்புல மண்ணள்ளி போட்டுட்டாங்க

பிரகாஷ்ராஜ் இதே மாதிரி நடிக்கர முப்பத்தஞ்சாவது படம் இதுன்னு நினைக்கிறேன், என்ன செல்லம் செல்லம்னு சொல்லுறதுக்கு பதிலா எருமை எருமைன்னு அடிக்கடி சொல்லுறாரு, மோனிகா ஞாபகம் வந்துருச்சோ என்னமோ, மத்தபடி செல்லம் கரெக்டா சொன்ன வேலைய செஞ்சிருக்காரு, அந்த கள்ள நோட்டு காமெடி சீன் செம, படத்துல சிரிக்க வச்ச ஒரே காமெடி அதுதான்


கஞ்சா கருப்பு சார், காமெடின்னு பண்ணுனதெல்லாம் ஒரே காமநெடிதான், சத்தியமா சிரிப்பு வரலை வெறுப்புதான் வருது, குடும்ப படம்னு வேற சொல்லுறாங்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையில என்ன சொல்ல போற பாட்டு மட்டும் என்னமோ சொல்ல வைக்குது, பிண்ணனி இசையில DSP யும் ஹரி மாதிரியேதான், பேக் கிரவுண்டுல சிங்கம் சிங்கம்னு கத்துனதுக்கு பதிலா வேங்கை வேங்கைன்னு கத்துது, வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.

மொத்தத்தில் வேங்கை – காட்சிகள் ஒன்று, களம் மட்டும் வேறு

Monday, July 11, 2011

கமர்சியல் பக்கங்கள் - 11/07/2011

ராசாவையும் ஜெயில்ல போட்டாச்சு, கனிமொழியையும் ஜெயில்ல போட்டாச்சு, போதாக்குறைக்கு எலக்சன்லயும் தோத்தாச்சு, அடுத்தது தயாநிதியும் சிக்க போறாரு போல, ஆனாலும் என்ன நடந்தாலும் தலைவரு கூட்டணியை விட்டு விலகற மாதிரியே தெரியல, இதோ இப்ப பிரணாப்பும் சொல்லிட்டு போயிட்டாரு


எப்ப கேட்டாலும் காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாகவே இருக்கிறது, சங்கர் சிமெண்டு போட்டு கட்டியிருக்குன்னே சொல்றாரே ஒரு வேளை தலைவரு நம்ம உடம்பு எவ்வளவுதான் தாங்கும்னு பார்க்கலாம்னு நினைக்கறாரோ?


மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும்னு சொன்னத ஜெ. தப்பா புரிஞ்சிட்டாங்க போல, சும்மா அமைச்சர்களை மாத்திட்டே இருக்காங்க, ஒரு ஆட்சியை விமர்சனம் பண்ணுறதுக்கே குறைந்தபட்சம் 100 நாள் ஆகணும்னு சொல்றாங்களே மந்திரிகளுக்கும் அவங்க துறையை பத்தி தெரிஞ்சுக்க கொஞ்ச காலம் ஆகாதா என்ன? இப்படியே மீயூசிக் சேர் நடத்திகிட்டு இருந்தா ஒருத்தனும் வேலை பார்க்க மாட்டான், எப்படா நம்ம சேரை புடுங்க போறாங்கன்னு நினைச்சுகிட்டே வேலை பார்த்தா எந்த நம்பிக்கையில் ஒரு துறைய டெவலப் பண்ண பார்ப்பாங்க அதிகாரிகளும் மந்திரிகளும்? என்னமோ போங்க நம்மளக்கு எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு, விடு ஜூட்ட்ட்


சமச்சீர் கல்வி தீர்ப்பு வரதுக்குள்ள காலாண்டு பரீச்சையே வந்திரும் போல, அனேகமா பசங்க இந்த வருசம் காலாண்டு பரீச்சை எழுத வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன், அறுதிப் பெரும்பான்மை வேற பெற்றிருக்காங்க, ஸ்ட்ரெயிட்டா அரையாண்டு பரீச்சையே எழுதிக்கோங்கன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன், பசங்களா கொடுத்து வச்சவங்கடா நீங்க, ஹீம்ம்ம்ம் (பொறாமை லைட்ட்டா)
சமச்சீர் கல்வி பற்றி வினவில் வெளியான கட்டுரை..!
சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

அனேகமா ஜெயா டிவில காலாண்டு பரீட்சை தேவையான்னு ரபி பெர்னாட்ட வச்சு பேட்டி எடுத்து போடுவாங்கன்னு நினைக்கிறேன், ரபி பெர்னாட்டோட பேட்டி உங்களுக்கு தெரியுமுல்ல, தெரியலைன்னா சாம்பிளுக்கு இந்த பேட்டிய படிச்சு பாருங்களேன், கொஞ்சம் யாருமில்லாத இடமா பார்த்து படிங்க, இல்லைன்னா நீங்க தனியா சிரிச்சுகிட்டு இருக்கறத பார்த்து யாராவது தப்பா நினைச்சிருவாங்க


படித்ததில் பிடித்தது
மறுபடியும் பிரபுதேவாதான், பிரபுதேவா நயன்தாரா மேட்டர எல்லாரும் கிழிச்சு துவைச்சு கிளிப் போட்டு காயவச்சு அயர்னும் பண்ணி வீசிட்டு போயாச்சு, ஆனாலும் என்வழி வினோ சார் ஒரு புதுக்கோணத்துல ஒரு கட்டுரை எழுதி இருக்காரு, படிச்சு பாருங்க, இந்த பதிவில நடந்த பின்னூட்ட வாக்குவாதமும் மஸ்ட் ரீடபுள்
நயன்தாராவோட கடைசி நாள் ஷூட்டிங் வீடியோ



நயன்தாரா சீதையா நடிச்ச படத்தோட கடைசி நாள் ஷூட்டிங் வீடியோ இது, கண்கலங்க, கைகூப்பி எல்லாருக்கும் நன்றி சொல்றாங்க, சுத்தி நிக்கிறவங்கள்ளாம் பூப்போட்டு ஆசிர்வாதம் பண்ணுறாங்க, ஆனது ஆச்சு, இனி என்ன ஆனாலும் பிரபுதேவா கூட கல்யாணம் நடக்க போறது உறுதி, அதனால கல்யாண பொண்ணாக போறவங்களுக்கு நாமளும் வாழ்த்துக்கள தெரிவிச்சுக்கலாம், ஆறு மாசத்துல திரும்பி வராம இருந்தா சரிதான்
ஆனாலும் பாருங்க எல்லாம் முடிஞ்சு போச்சு, எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சிம்பு சொன்னாலும் கடைசியா ஒருவாட்டி ஒரு குத்து பாட்டு ஒஸ்தி படத்துல ஆடலாம் வரயான்னு சிம்பு கூப்புட்டு இருக்காப்புல, நம்ம அம்மணி நான் சீதையா நடிச்சதே கடைசி படமா இருக்கட்டும், இனிமேல் உன்னோட சகவாசமே வேணாம்னு சொல்லிட்டாங்களாம், சிம்பு வம்பு பண்ணாம விட மாட்டாரு போலருக்கே



இந்த வார கமர்சியல் வீடியோ தமிழ் பன்னி நியூஸ், FUNNY ய தமிழ்படுத்த முடியலைங்க, மன்னிச்சூ

அன்புடன்
இரவுவானம்

Friday, July 8, 2011

ஷகிலாவின் பிட்டுபடம்..!

மாலை 6 மணி

ஊரின் ஒதுக்குபுறத்தில் அமைந்துள்ள டாஸ்மார்க் பாரில் அமர்ந்து மஜீத் குடித்துக் கொண்டிருந்தான்
காலையில் அவனுடைய அப்பா அவனை திட்டியது காதில் ஒலித்தது

’’நீயெல்லாம் ஒரு பையனாடா? ஊரில அவனவனும்தான் பையனா பெத்து வச்சிருக்காங்க அவங்கள்ளாம் உன்னை மாதிரியா இருக்காங்க, ஒழுங்கா படிக்கவும் இல்லை, உருப்படியா ஒரு வேலைக்கும் போறதில்ல, கஷ்டப்பட்டு ஒரு வேலைய வாங்கிக் கொடுத்தா ரெண்டே நாள்ல வேலைய விட்டுட்டு வந்து நிக்குறியே? நீயெல்லாம் ஒரு மனுசனாடா? தண்டச்சோறு என் மூஞ்சிலயே முழிக்காதடா’’

சே ரொம்ப கேவலா போச்சே, அந்தாளு தனியா இருக்கும் போது திட்டி இருந்தாலும் பரவாயில்ல, அந்த கவிதா பொண்ணு டிவி பார்க்க வரும் போது பார்த்து கரக்டா திட்டிட்டான், இப்பத்தான் கொஞ்சநாளா லுக்கு விட ஆரம்பிச்சா அதுக்குள்ள கெடுத்துட்டான், என் மானமே போச்சு, ஒருநாள் இல்லைன்னாலும் ஒருநாள் அந்தாளு தூங்கும் போது தலையில கல்ல தூக்கி போட்டுட வேண்டியதுதான்

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நினைவுக்கு வந்தது டாஸ்மாக் பாருக்கு முன்னால் ஒட்டியிருந்த ஷகிலாவின் கனவுக்கன்னி பட போஸ்டர்

அடடா ஷகிலா படம் வேற ஜிபில போட்டிருக்காங்களே அப்பன பத்தி யோசிச்சிதுல முக்கியமான விசயத்தை மறந்துட்டனே, நாறப்பய எல்லா விசயத்துலயும் கெடுக்கறதுக்கே முன்னாடி இருக்கான், மணி வேற 6.30 ஆச்சு இன்னேரம் டிக்கெட்டு குடுத்துட்டு இருப்பான், நாம போய் சேரதுக்குள்ள எல்லாரும் உள்ள போய் இருப்பாங்க, உடனே கிளம்ப வேண்டியதுதான், மீதி இருந்த கட்டிங்கையும் ஒரே கல்ப்பில் அடித்து விட்டு கிளம்பினான்

தியேட்டரை நோக்கி போய் கொண்டிருக்கும் போதே தோணியது, பிட்டு படம் போட்டாங்கன்னா முதல் நாள் மட்டும்தான் பிட்டு போடுவான் அந்த ஜிபிகாரன், அடுத்த நாளெல்லாம் போனா வேஸ்டுதான், ரொம்ப நாள் கழிச்சு வேற படம் போட்டு இருக்கான் எப்படியும் நாலைஞ்சு பிட்டாவது கண்டிப்பா இருக்கும், இன்னைக்கு மிஸ் பண்ணக்கூடாது, நடையில் வேகத்தை கூட்டினான்

தியேட்டருக்கு போகும் வழியில் திரும்பிய போது, முன்னால் குண்டாக ஒரு உருவம் உருண்டு போய் கொண்டிருப்பது தெரிந்தது

யார்டா அவன் முன்னாடி போயிட்டு இருக்கான், எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே, கண்ணை கசக்கி கொண்டு தெளிவாக பார்த்த போது, அய்யோ நம்ம அண்ணன் இவன் எங்க இங்க வந்தான்? ஒருவேளை அவனும் படத்துக்குதான் போறானோ? நாறப்பய இவன போய் நல்லவன்னு நினைச்சமே, நம்ம வீட்டுலயே நம்ம பெரிய அண்ணன் மட்டும்தான் நல்லவன் போலருக்கு

சரி இப்ப என்ன பண்ணலாம், பார்த்தான்னா பிரச்ச்னை ஆகிருமே, பேசாம திரும்பி போயிரலாமே யோசித்துக் கொண்டே திரும்பியவன் கண் முன்னே கனவுக்கன்னி போஸ்டர் ஷகிலாவை போலவே பிரம்மாண்டமாக காட்சியளித்தது

அய்யோ கொல்ராளே, இன்னைக்கு விட்டா பிட்டு வேற போட மாட்டாங்க, என்ன ஆனாலும் சரி அண்ணன் டிக்கெட்டு வாங்கிட்டு போன உடனே நாமளும் டிக்கட்டு வாங்கிட்டு அவனுக்கு தெரியாம வேற எங்கயாவது உட்கார்ந்துர வேண்டியதுதான்

நினைப்பினை செயல்படுத்த மீண்டும் தியேட்டரை நோக்கி திரும்பினான் மஜீத், அண்ணன் உள்ளே போகும்வரை ஒளிந்திருந்துவிட்டு போய் டிக்கெட்டு வாங்கினான் மஜீத்

தியேட்டருக்குள்ள லெப்டு சைடுல லைட்டெல்லாம் போட்டு இருப்பான், மூஞ்சி தெரியும்னு நிறைய பேரு அங்க உட்கார மாட்டானுக, அதனால நம்ம அண்ணனும் அங்க இருக்க வாய்ப்பில்ல, பேசாம அங்கயோ போய் கமுக்கமா உட்கார்ந்துரலாம் என்று நினைத்துக் கொண்டே இடதுபுற வரிசையினை நோக்கி சென்று கடைசி சீட்டை நோக்கி போனான்

பாதி தூரம் சென்றதுமே அதிர்ச்சி காத்திருந்தது, அண்ணன் கடைசியில் அமர்ந்திருந்தான், தம்பி வருவதையும் பார்த்துவிட்டான், அண்ணனை பார்த்து தம்பி பதற, தம்பியை பார்த்து அண்ணன் அவசர அவசரமாக மூஞ்சியை திருப்ப, மந்தையில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச வார்த்தையே வரவில்லையே

பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான் மஜீத்

அடச்சை அவன் கண்ணுல சிக்க கூடாதுன்னுண்டு போனா கரக்டா அவன்கிட்டயே போய் மாட்டிக்கிட்டமே, வீட்டுக்கு போனா அடிப்பானோ, க்க்கும் அவனே பிட்டு படத்துக்குதான வந்திருக்கான், மேல கைய வச்சானா அப்புறம் பார்த்துக்கலாம், சரி பார்த்தது பார்த்துட்டான் இனி என்ன பண்றது, பேசாம வலதுபக்கமா போய் உட்கார்ந்துரலாம் நல்ல இருட்டா இருக்கும்

வலதுபக்கம் போய் இருட்டில் தட்டு தடுமாறி ஷகிலாவின் ரசிகர்களிடம் எல்லாம் அர்ச்சனைகளை பெற்றுக் கொண்டு கடைசியாக ஒரு சீட்டில் போய் அமர்ந்தான், அப்பாடா என்று ரிலாக்ஸ் செய்து கொண்டு, பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் கேட்டான்

என்னங்க படம் போட்டு ரொம்ப நேரம் ஆச்சுங்…………..? கேள்வி பாதியிலேயே நின்றது, ஏனென்றால் கேட்டது அங்கே அமர்ந்திருந்த தன்னுடைய மூத்த அண்ணனிடம்

அண்ணனும் நோக்கினான் தம்பியும் நோக்கினான், ஒருநிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்த மஜீத் மீண்டும் எழுந்து அவசர அவசரமாக வெளியில் வந்துவிட்டான்


போச்சு போச்சு எல்லாம் போச்சு, உலகத்துலேயே அண்ணங்காரங்க கூட பிட்டு படம் பார்த்த ஒரே தம்பி நானாத்தான் இருப்பேன், உலகத்துலேயே நல்லவன்னு இவனத்தான நினைச்சோம், இவனும் நம்ம கோஷ்டிதானா? வெளங்கிரும் நம்ம குடும்பம், இனி வேற வழியே இல்லை நடுவுலதான் போய் உட்காரணும்

ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு தியேட்டரின் உள்ளே சென்றான் மஜீத், ஷகிலாவை போலவே ஷகிலாவின் ரசிகர்கள் நீக்கமற நிறைந்திருந்தனர் தியேட்டர் முழுவதும், யாரையும் கண்டு கொள்ளாமல் விடுவிடுவென நடந்து தியேட்டரின் நடுவில் போய் அமர்ந்து கொண்டான்

வக்கீல் ஒரு கேஸ், என்ன கேஸ்? என்ன கேஸ்? படத்தில் ஷகிலா தென்னை மரத்தை கட்டிபிடித்துக் கொண்டு விரகதாபத்தில் பாடிக் கொண்டிருந்தார்

மஜீத்தின் மனம் அதில் எல்லாம் லயிக்கவில்லை, எப்படி அண்ணன்கள் கண்ணில்படாமால் வெளியே செல்வது என்று மட்டும் மனதில் ஓடிக் கொண்டிருந்தது, அரைமனதாக படம் பார்த்துக் கொண்டிருந்தான்

இடைவேளைளைளை

விடப்பட்டது, தியேட்டரின் லைட் போடப்பட்டதும் பாதி பேருக்கும் மேல் தலையை குனிந்து உட்கார்ந்து கொண்டார்கள், பெரும்பாலும் யாரும்வெளியே செல்லவில்லை, பிட்டு முக்கியமல்லவா? அதற்குள் படம் போட்டு விட்டால் என்ன செய்வது? என்று யாரும் வெளியே செல்லவில்லை

மஜீத்தும் தலையை குனிந்து கொண்டான், அண்ணன்காரன்கள் எவனாவது வெளியே செல்கிறானா என பார்ப்பதற்காக எதேச்சையாக தலையை தூக்கியவனுக்கு, ஒரு பெரிய இடி தலையில் விழுந்தது போல் இருந்தது
ஆம் அங்கே முன்சீட்டில் அவனுடைய அப்பா அமர்ந்திருந்தார், ஆனால் அவர் திரும்பி பார்க்கவில்லை

அய்யய்யோ நம்ம அப்பனுமா? காலையில யார் மூஞ்சில முழிச்சேன்? காலையில இருந்து ஒரே கண்டமாவே இருக்கு, அட ஆமா இவன் மூஞ்சிலதான முழிச்சோம், பெரிய ஒழுக்க மயிராட்டாம் நம்மளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இந்தாளு வந்து பண்ணுற வேலைய பாரு, ஷகிலா படம் பார்க்க வேண்டிய வயசா இது? இவனெல்லாம் ஒரு அப்பனா? இந்த பொழப்போ வேணாம் சாமி, லைட்ட ஆப் பண்ணுன உடனே ஓடிர வேண்டியதுதான்

மஜீத் நினைத்துக் கொண்டிருக்கும் போதே லைட்டுகள் ஆஃப் செய்யப்பட்டு, பிட்டு ஓட ஆரம்பித்தது, தியேட்டரில் ஒரு தூசி விழுந்தால் கூட டமார் என கேட்குமளவு நிசப்தம் நிலவியது

அடபாவிகளா இன்னைக்குன்னு பார்த்து நல்ல நல்ல பிட்டா போடறானுங்களே, ஆனா இத பார்த்துட்டு இருந்தா அவ்வளவுதான், கிளம்பிர வேண்டியதுதான், நினைப்பை செயல்படுத்த சீட்டிலிருந்து எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தான்

பிட்டு முடிஞ்சா ஜனங்க எல்லோரும் கிளம்ப ஆரம்பிச்சிருவாங்க, சீக்கரமே போகனும், அவசர அவசரமாக நடக்க ஆரம்பித்தான், தியேட்டரை விட்டு வெளியேறியதும் முன்னால் பார்த்தால் பெரிய அண்ணன் போய் கொண்டிருந்தான், பின்னால் பார்த்தால் சின்ன அண்ணன் வந்து கொண்டிருந்தான்

மூன்று பேரும் ஒருவரையொருவர் முன்பின் தெரியாதவர்கள் போலவே நடந்து வந்து கொண்டிருந்தார்கள், இவ்வாறே மூன்று பேரும் குறிப்பிட்ட இடைவெளியில் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்

ஆசை ஆசையா ஷகிலா படம் பார்க்க போனா வேர்த்து விறுவிறுக்க நடக்க வச்சுட்டானுங்களே, அடிச்ச மப்பு வேற இறங்கி போச்சு, உடனே வீட்டுக்கு போனா அண்ணன்காரங்க மூஞ்சில வேற முழிக்க வேண்டி இருக்கும், நைட்டு எல்லாரும் தூங்குன பின்னாடி போயிக்கலாம் என நினைத்த மஜீத் நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு 11.30 மணிக்கு வீட்டுக்கு சென்றான்

இவன் நினைத்தவாறே மற்றவர்களும் நினைத்திருந்தார்கள், இவன் போன ஐந்து நிமிட இடைவேளையில் மற்ற இருவரும் வந்தார்கள், மூன்று பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை தவிர்த்தார்கள், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவும் இல்லை

அவர்களுடைய அம்மாதான் திட்டி கொண்டே இருந்தார்

எங்கடா போனீங்க மூணு பேரும், நேரங்காலத்துல வந்து சாப்பிட்டுட்டு படுக்க கூடாதா? பனி விழுகற நேரத்துல உங்கப்பா உங்கள தேடி போயிருக்கார், சாயங்காலம் ஆறு மணிக்கு போனவரு, இன்னும் வரலை, அவருக்கு உடம்பு வேற சரியில்ல காலையில இருந்து எங்க போனாறோ?
அம்மா புலம்பி கொண்டே இருந்தார்

மூன்று பேரும் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்

அப்பொழுது வெளியே அப்பா வரும் சத்தம் கேட்டது

எங்கடா போனீங்க மூணு பேரும்? தொரைக நேரத்துல வீட்டுக்கு வர மாட்டீங்களோ? உங்கள தேடி அலைய ஒருஆள் வேணுமாடா? காலையில இருந்து உடம்பு முடியாம படுத்துகிட்டு இருக்கேன், கால்வலி வேற இதோட சாயங்காலம் ஆறு மணியில இருந்து ஊரு முழுக்க உங்கள தேடி தேடி போதும் போதும்னு ஆயிருச்சிடா? இப்பத்தான் வீட்டுக்கு வரேன், இனிமேல் எவனாவது ராத்திரி ஊரு சுத்த போனீங்க தொலைச்சிருவேன் ஜாக்கிரதை

எங்களத்தான் சாயங்காலத்துல இருந்து தேடி அலையிறியா?

மூன்று பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..!