Wednesday, May 16, 2012

கமர்சியல் பக்கங்கள் - 16/05/2012


அம்பலவாணர் சுவாமிகள் என்ன பண்ணார்?
என்ன பண்ணலைன்னு கேளுங்க?


சங்கத்தமிழ் வளர்த்த ஆதீனங்களில் மதுரை ஆதீனமும் ஒன்னாம், இப்பல்லாம் ஒல்டு ஆதீனமும், லேட்டஸ்ட் ஆதீனமும் டிவி பேட்டிகள்ள கூட இங்கிலீஸ்லதான் பேட்டி குடுக்கறாங்க, (ஓவர்)

நம்ம நித்தியானந்தர் ஆதீனமா ஆனது ஒருபக்கம் இருக்கட்டும், ஆனா இந்தகாலத்துல ஆன்மீகத்த வளர்த்தறதுக்காக லேட்டஸ்டா அப்டேட் பண்ணப்பட்ட டைனமிக் சாப்ட்வேர்தான் நித்யானந்தான்னு இப்ப இருக்கற ஆதீனம் சொன்னாரு பாருங்க அதத்தான் பொறுத்துக்க முடியல, (ஓவரோ ஓவர்)

போகப்போக பார்க்கத்தானே போறோம் நித்யானந்தா அப்டேட் பண்ணப்பட்ட டைனமிக் சாப்ட்வேரா இல்லை அட்டாக் பண்ணுற வைரஸான்னு.

SAVE A TREE

USE LESS PAPER – SAVE A TREE அப்படின்னு ஜெராக்ஸ் மிசின்ல கூட போட்டு இருக்காங்க, அந்தளவுக்கு பேப்பர் தேவைக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுகிட்டு இருக்கு, பெண்கள் யூஸ் பண்ணுற சானிடரி நாப்கின்ல மரங்களோட தண்டைத்தான் அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தி நாப்கின் தயாரிக்கறாங்க அதைத்தான் நீண்ட நேரம் உழைக்கும் நாப்கின்னு விளம்பரபடுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கறாங்க கார்பரேட் கம்பனிகள்ன்னு  நம்ம தமிழர் ஒருத்தர் கண்டுபுடிச்சு சொல்லி இருக்காரு

தேவைக்கு அதிகமா பேப்பர யூஸ் பண்ணுறது தப்புன்னுதான் ஏடிஎம்ல பணம் எடுக்க போனாக்கூட ரிசிப்ட் எடுக்க மாட்டேன், முதல்லயே ஆப்சன்ல ரிசிப்டுக்கு NO குடுத்துருவேன். ஆனா நேத்திக்கு ஒருத்தர் பணம் எடுத்தாரு பாருங்க 500 ரூபாயா ஒரு பத்து தடவை ரெண்டு மூணு கார்டு போட்டு எடுத்துகிட்டே இருந்தாரு, ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போது ரிசீப்ட் எடுத்து பேலன்ஸ் செக் பண்ணிட்டு இருந்தாரு, அவரு வெளிய வரும்போது ஏன் சார் இப்படி ஒவ்வொரு தடவையும் ரிசீப்ட் எடுக்கறீங்க? அதான் பணம் எடுக்கும் போதே ரிசீப்ட் வருதுல்ல, மறுபடியும் ஏன் எடுக்கனும்னு கேட்டா?

ம்ம்ம் மெஷின் சரியா வேலை செய்யுதான்னு செக் பண்ணுனேன்னு சொல்லிட்டு போறார், இவங்களையெல்லாம் வெச்சுகிட்டு TREE ஐய இல்ல HAIR அ கூட SAVE பண்ண முடியாது.

பிடித்ததால் படித்தது

கழுகு இணையதளத்தில் பேஸ்புக் மற்றும் பிளாக்கில் நடக்கும் அத்துமீறல்கள பத்தி அலசி ஆராய்ச்சி பண்ணி ஒரு விழிப்புணர்வு கட்டுரை போட்டு இருந்தாங்க, பேஸ்புக்ல பொண்ணுங்க பின்னாடி சுத்துறதுல இருந்து இப்ப அரசியல்கட்சிகாரங்க ஆக்கிரப்பு செஞ்ச வரைக்கும் சுருக்கமா பேஸ்புக் எப்படி இம்சை அரசன் புலிகேசி பாணில மைதானமா ஆச்சுன்னு விளக்கமா எழுதி இருக்காங்க, முடிஞ்சா படிச்சு பாருங்க


அவங்ககிட்ட அனுமதி கேட்காமதான் போட்டு இருக்கேன், தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க.

எதிர்பார்க்கும் மொக்கை படம்


இதப்பத்தி சொல்லவே வேணாம், போஸ்டர்லயே விளக்கி இருக்காங்க பாருங்க, அதுசரி எல்லாரோட லைஃப்லயும் ஒரு ஒன்சைடு லவ்வு வரட்டும் உங்க லைஃப்லதான் ஏற்கனவே ஏழெட்டு இருக்கே? எப்படி படம் பண்ண போறீங்க பாஸ்?

நினைவேந்தல் நிகழ்ச்சி


மே 17 இயக்கத்தின் தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வருகிற மே 20 ஆம் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு மெரினா கண்ணகி சிலை அருகில் நடைபெறுகிறது, கலந்து கொள்ள முடிந்தவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும், பதிவுலக நண்பர்கள் உங்களது வலைப்பூக்களின் வாயிலாக விளம்பரப்படுத்தி பெருவாரியான மக்களை சென்றடைய உதவுங்கள்.

மேலும் விபரங்களுக்கு



வீடியோ

ரோபோ சங்கரின் மானாட மயிலாட, சிரிக்காதவங்க நரசிம்மராவா கூட இருக்கவே முடியாது




6 comments:

  1. அடங்கப்பா...எம்புட்டு விசயப்பா!

    ReplyDelete
  2. காதிதத்தை பற்றிய செய்தி உண்மைதான்....
    வாலிபன் படம் சங்கதி நிறைய இருக்கும் என்று நம்புகிறேன்....

    ReplyDelete
  3. அருமையான கமர்ஷியல் கலவை

    //நித்தி

    ஆடுங்கடா உடம்புல தெம்பு இருக்குற வரை ஆடுங்கடா

    //பேப்பர்
    என்னத்த சொல்ல. இதெல்லாம் ஆரம்பத்துல இருந்தே வரணும்.

    //வாலிபன்
    எத்தனாவது பொண்ணை சொல்றாரு?

    //ரோபோ சங்கர்
    அட்டகாசம். எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு வருகிறது

    ReplyDelete
  4. ரசித்து பார்த்த வீடியோ. கன்னித்தீவு பொண்ணா........... ரொம்ப புடுச்ச பாட்டுக்கூட

    ReplyDelete
  5. கலா பார்த்தா என்ன நினைப்பாங்க.

    நானும் உங்க அப்பாவும் சேர்த்து பண்ணிஇருக்கோம்....... தெரியுமா?



    ???????????????????

    ReplyDelete
  6. மே 17 தகவலுக்கு நன்றி.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!